எஸ். எஸ்.கே. சபரீஸ்வரி

#எழுத்தாளர் அறிமுகப்படலம் #சீசன் இரண்டு ஹாய் பிரண்ட்ஸ், இன்றைய அறிமுக எழுத்தாளர் சபரீஸ்வரி அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ: பெயர் : க.சபரீஸ்வரி சொந்த ஊர் : ஈரோடு படிப்பு : b.tech Information Technology பணி : software தேவேலோபேர் தளம் : இல்லை அமேசான் பெயர் & லிங்: Sabareeshwari Kannan (SSK) தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங் : நெயிர்ச்சியின் முலுவல் நீ https://tamilpens.madhunovels.com/viewforum.php?f=80 முடிவுற்ற நாவல்களின் லிங் : I want to recommend this product at Amazon உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (Tamil Edition) by Amazon Asia-Pacific Holdings Private Limited Learn more: https://www.amazon.in/dp/B093Z4HNLB/ref=cm_sw_em_r_mt_dp_Q0ARXKNMPQKW1E3JTE8H ***** உங்களது முதல் நாவலின் பெயர் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ***** மொத்தம் எத்தனை நாவல் எழுதியிருக்கீங்க : 1 ***** உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா: வாழ்கையின் அர்த்தத்தையும், என்னுடையை தனிதிறமையையும் தேடிக்கொண்டு இருக்கும் சராசரி பெண்.. **** உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா: கதைகள் நிறைய படிக்கிற பழக்கம் உண்டு.. அதனால் கற்பனையில் எப்பொழுதும் சில கதைகளோடு உலாவுவேன்.. அதுவே எழுதும் ஆர்வத்தை தூண்டியது.. இன்னும் எழுத்து உலகில் நான் கடைக்குட்டி மட்டுமே.. …. நிஜமான கருத்து **** உங்களது படைப்புகளை வாசிக்கும் வீட்டாரின் கருத்துப் பரிமாற்றம் எப்படிப்பட்டதாக இருக்கும் : அப்பா , அம்மா இருவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள்.. அவர்களிடம் இருந்து தான் எனக்கும் வாசிக்கும் பழக்கம் வந்தது.. முதல் கதையை பாதி மட்டுமே இருவரும் வாசித்து உள்ளார்கள்.. நான் மிகவும் உழைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.. எழுத்து பிழைகளை திருத்த சொல்லி இருகிறார்கள். … சரியான நேரத்தில் கிடைக்கும் நல்ல ஆலோசனை ***** உங்களது விருப்பமான படிப்பு : biology related course ***** நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள் : காதல் கதைகள், பேண்டசி கதைகள்… ******* கல்லூரி வாழ்க்கைனா எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க: உங்கள் கல்லூரி படிப்பு முடித்து நீங்கள் வரும் பொழுது, குறைந்த பட்சம் 50% உங்கள் நிஜ வாழ்கையை எதிக்கொள்ள கற்று தந்து இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.. ***** உங்களது எழுத்துகளை பற்றி சொல்லுங்க : ஒரே ஒரு எண்ணம் மட்டுமே , முடிந்த அளவு மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும் எழுத வேண்டும் என்று நினைப்பேன்.. ****** ரமணி மேமின் மயக்குகிறாள் ஒரு மாது கதை பிடிச்சுருப்பதா சொல்லியிருக்கீங்க. அந்த கதை எதனால் உங்களுக்கு பிடித்தது. உங்களை கவர்ந்த பாத்திரம் என்ன : பல நாட்களாக தேடி தேடி பார்த்து கடைசியில் ஒரு வருடத்திற்கு பிறகு படித்த நாவல்... நான் படித்த முதல் ஆன்டி ஹீரோ கதை.. சில சமயம் நம் அதீத தேடல்களே அந்த விஷயத்தின் சுவாரசியத்தை குறைத்து காட்டும்.. ஆனால் அந்த நாவல் சுவாரசியத்திற்கு குறைவு இல்லாமல் சென்றது… … கண்டிப்பாக, எனக்கும் அந்த நாவல் ரொம்ப பிடிக்கும் ***** உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர் : கயல் விழி, ராணி தென்றல் அக்கா, மதுமதி பரத் அக்கா... இவங்களோட நிறைய பேசி இருக்கேன்.. ***** நீங்கள் விரும்பி படிக்கும் ஆசிரியர் : ரமணிச்சந்திரன், ராணி தென்றல்,வநிஷா,பொம்மு .. நூல்கள் : மோனிஷா - அவள் த்ரோவ்பதி அல்ல நிவேதா ஜெயானந்தன் - ஸ்டராபெர்ரி ஆசைகள் வநீஷா - உயிர் விடும் வரை உன்னோடு தான்.. ராணி தென்றல் - தென்றல் 1, 2 சீரியஸ்.. பொம்மு - வேட்டையாடு விளையாடு சீரீஸ்.. சரண்யா ஹேமா - மேகம் வந்து தாலாட்ட ***** திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா : ஆம் ***** ஒரு எழுத்தாளன் தன்னுடைய படைப்புகளின் மூலம் வாசகரை கட்டிப்போடுவது எப்படி : சுவாரசியத்தோடு கதைகள் எழுத வேண்டும்... ***** உங்கள் படைப்புகளின் பெயர்கள்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நெயிர்ச்சியின் முழுவால் நீ, துணையாக வா சகி, மறுபாதி, சேயின் கண்ணீர்.. ***** எழுத்தாளர்களுக்கு இடையேயான நட்புறவு எப்படி இருக்க வேண்டும்னு சொல்ல முடியுமா : அடுத்தவரின் எழுத்து சுதந்தரத்தில் தலையிடாமல் இருப்பது நன்று.. ***** ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க: அது படிக்கும் வாசகர்களையும் அவர்கள் சூழ்நிலையையும் பொறுத்தே அமையும்.. ***** தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்: அக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் கேரக்டர் சொல்வதோடு, கதையின் போக்கையும் ஒரு அளவேனும் யூகிக்க வைக்க வேண்டும். ***** ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள்: கேரக்டர் description கு நிறைய பக்கங்கள் எழுதுவது.. கதையின் மய்ய புள்ளியில் கதையை நகர்த்தாமல் இருப்பது.. (ஒரு வாசகியா இது இரண்டும் எனக்கு சலிப்பை ஏற்படுத்தும். ***** உங்களது நாவலை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது: உங்களை மாதிரி பொறுமை எல்லாம் எனக்கு சத்தியமா கிடையாது மக்களே... நன்றியை தவிர சொல்ல ஒன்னும் இல்ல.. நான் ஒரு கதையை முடிக்க வருடக்கணக்கில் எடுத்தாலும் தொடர்ந்து படிச்சிட்டு கம்மென்ட் சொல்ற என்னோட pratilipi வாசகர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. ***** நிஜ சம்பவத்தை அடிப்படையாக கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா : குறுங்கதை நிஜ சம்பவத்தை தழுவியது தான்.. ****** இன்றைய எழுத்துக்களை பற்றி சொல்ல முடியுமா: மிக நன்றாகவே உள்ளது.. ஆனால் நிறைய எழுத்தாளர்கள் உள்ளதால் , விரைவில் தேடி படிக்க முடியவில்லை.. … நிஜம்தான். ***** ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்: சில ஆண்டுகள்… … சில ஆண்டுகளா?? எதுக்கு இவ்வளவு இடைவெளி? இத்தகைய இடைவெளி வாசிப்பவருக்கு விருப்பமின்மையை கொடுத்து விடும். உங்களுக்கும் கதையோட்டம் மறந்து போகுமே… ***** நீங்கள் நாவல் எழுத ஆரம்பிக்கும் முன்பு இத்தனை வார்த்தையில் முடிக்கணும், வருணனை, கவிதை, கற்பனை போன்றவற்றை சேர்க்கணும் என்று யாரிடமாவது கலந்து ஆலோசிப்பது உண்டா: இல்லை ***** ஒரு நாவல் எழுதும் போது அதன் அத்தியாயங்கள் இத்தனை வர வேண்டும். வார்த்தைகள் இத்தனைக்குள் முடிய வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுபவரா நீங்கள் : இல்லை ***** தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா : நிறைய வாசிங்க... இதெல்லாம் மட்டுமே நான் வாசிப்பேன்னு ஒரு எல்லை கோட்டுல நிக்காம... அனைத்து நூல்களையும் வாசிங்க.. (இது எனக்கும் பொருந்தும்) …. நிச்சயமாக

Comments