உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

அத்தியாயம் : 1




























Comments

  1. Sengottuvel. Nkl


    🙏🌹 இனிய அருமையான பதிவு சிஸ்டர் 👌👌 வாழ்த்துகள் 💐
    வித்யார்த் ஜெனிபரின் காதல். மெல்லிய பூ போல இதமானது காதல் இரு மதங்களை சாராமல்
    இருவருக்கும் இடையேயான
    மனங்களின் பிணைப்பு அருமை
    👌
    காதல் கணவனின் அன்பே பிரதானம் என நினைக்கும் ஜெனிபர் அருமையான பெண்🌹

    வித்தியார்த் கட்டிய காதல் மனைவி❣️❣️ யின் மனம் வருந்தாமல்
    அன்பான தாயாக மாதவிடாய் சமயத்தில் அவளை கண்காணித்து பேணும் பொழுது என் கண்கள்😂 கண்ணீரில் ....
    அர்னவ் பாசம் அனைத்து தங்கைகளின் அண்ணண் என்ற பட்டம் தரலாம்.👍⭐
    கஸ்தூரி .அன்பு.குடும்பபெண்களின் . முன்மாதிரி.. அருமையான
    அறிவுரைகள் அருமை.👌
    எப்படி தாய் வாழக்கூடாது என்பதற்கு ராஜம்மாள் ஒரு உதாரணம்..👎
    ஆதித்யா.கீதா..🙄🙄
    வாழ்கை வாழ்வதற்கு நல்ல எண்ணங்கள்.வேண்டும். ஆனால் இவர்கள் போட்டி பொறாமை கொண்டு 😪செயல்படுவது.மனம் வெதும்புகிறது..👎

    உலகில் பிரதானம் காதல் அன்பு பாசம் விட்டு கொடுக்கும் தன்மை . எத்தனை சோதனைகளையும்.சாதனைக்ளாக மாற்றும் திறமை.என்று பல
    கருத்து களை கதையில் சேர்த்து ஒரு பூமாலையாக மாற்றி💐 கொடுத்துள்ளிர் கள் . அருமை 👌 சிஸ்டர் அருமை 👍 அருமையான மென்மையான கதை வாழ்த்துக்கள் சிஸ்டர்💐💐

    ReplyDelete
  2. ApsareezBeena Loganathan:

    உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்
    ஆனந்த ஜோதி

    நாயகன்: வித்யார்த்
    நாயகி: ஜெனிஃபர்

    இரு வேறு மதங்கள்
    இரு மனங்களில் காதல்
    இரு வீட்டின் சம்மதம் பெற்று
    இவர்களின் வாழ்க்கை
    இதயம் நுழைந்த காதல் ...
    இஷ்டப் பட்டு வாழ்ந்தால்
    இந்த கஷ்டமெல்லாம் ஒன்னும் இல்லை.....
    இவர்களின் புரிதல்
    இல்லத்தில் தொடருமா????
    இல்லறம் நல்லறமாக மாறுமா????
    இனிய காதல் கதை.....
    👏👏👏👏👏👏👏👏👏
    வழியில் விழுந்தவளை
    வலிய வந்து உதவி செய்து
    வீட்டிற்கு சென்று விட்டு விட்டு
    வந்தவனின் மேல _ இவள்
    விழியில் பட்டு காதல் கொள்ள
    வலிய வரும் காதல்.....
    விலகிச் செல்லும் வித்யார்த்...
    விடாமல் பிடிவாதமாய்
    வாழ்க்கையில் இணையும் ஜெனி
    💐💐💐💐💐💐💐💐💐
    நம் வாழ்வு முறை
    நம் கலாச்சாரம்
    நம் பண்பாடு என அனைத்தையும்
    நல்லவிதமாக எடுத்துச் சொல்லி
    நம்பிக்கை விதை விதைத்து
    நல்லதே நினை
    நல்லதே நடக்கும்....என
    நல்லது செய் என்ற ஒற்றை
    நற் சிந்தனைகள் கூறி
    நலமுடன் வாழ்வோம்......என
    எடுத்துரைக்கும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் உறவுகளின் நம்பிக்கை பாசம் துரோகம் விருப்பு வெறுப்பு
    என்று அனைத்து விதமான
    உணர்வுகளின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அழகாக சொல்லி உள்ளீர்கள்....
    நல்ல மகனாக
    நல்ல அண்ணனாக
    நல்ல கணவனாக
    நல்ல நண்பனாக
    நல்ல உழைப்பாளியாக
    நேர்மையான முறையில்
    எடுத்துக்காட்டாய் வித்தார்த்.....
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    நல்ல மகளாய்
    நல்ல தங்கையாய்
    நல்ல மருமகளாய்
    நல்ல தோழியாய்
    நல்ல மனைவியாய் _கணவனின்
    நம்பிக்கை உடையாமல்
    நேசம் கொள்ளும் ஜெனிபர்.....
    💕💕💕💕💕💕💕💕
    எதிரியாக
    துரோகமாக
    புரிந்து கொள்ளாத என்று
    மூன்று ஜீவன்கள்....🤧🤧🤧😡😡😡😡🤦🤦🤦🤦🤦.....

    கத்தி மேல் நடப்பது போல
    கதை கரு.....
    கரு சிதையாமல்
    கதை சொன்ன விதம் அருமை...
    வாழ்த்துக்கள் தோழி....

    ReplyDelete
  3. அருமையான கதை..வித்யார்த்.. பெயரைப் போல வித்தியாசமான ஹீரோ..குடும்பத்திற்க்காக காதலை ஒதுக்கி வைத்தவன்.. ஜெனிஃபர் அளவு கடந்த காதல் கொண்டவள்..எந்த ஒரு சூழ்நிலையிலும் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் புரிந்து கொண்டு அழகான கவிதை போல ஒரு வாழ்க்கை வாழ்கிறார்கள்... ராஜாத்தி கீதா எல்லாம் என்ன பிறவிகளோ🤦🤦 ஆல்வின் ராதா கஸ்தூரி பாஸ்கர் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை.. எல்லாத்தையும் விட இந்த கதை எனக்கு மிகவும் நெருக்கமானது..ஏன்னா என்னுடைய திருமணமும் மதங்களைக் கடந்தது... ஒவ்வொரு எபிசோட் படிக்கிறப்போ என்னுடைய வாழ்க்கை தான் நியாபகம் வருகிறது.. மிகவும் அழகான நாவல்... வாழ்த்துக்கள் ஜோதி மேம் 😍😍😊😊

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி

      நன்றிகள் பல...

      ஆரம்பத்திலேயே உங்க கிட்ட சொல்லிட்டு தானே எழுதினேன். அதனால் எப்படியும் உங்கள் மனதை வெகுவாக கவரும் என்பது நான் அறிந்த விசயம்.

      மகிழ்ச்சியும், நன்றிகளும்🙏🙏🥀

      Delete

Post a Comment