சாமி போட்ட பணம்!


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : சாமி போட்ட பணம்!

வெளியீடு : இன்றைய தினமலர் வாரமலர்

மண்டைக்கசாயம்:

வீட்டில் இருந்து மனையாளின் கைப்பக்குவத்தை ருசி பார்த்துக் கொண்டிருப்பவர் முன்பு, சில அரசு அதிகாரிகள் வந்து நிற்கிறார்கள். உரையாடல் தொடர்கிறது. பேச்சின் திசை மாறுகிறது. எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அவரது பதில்கள் ஆச்சர்யப்பட வைக்கிறது.  வேறு ஒருவரின் அக்கவுண்ட்டிற்கு அனுப்ப வேண்டிய பணம், கவனக் குறைவால் இவரது அக்கவுண்டிற்கு வந்து விட்டதாக கூறி, அந்த பணத்தை கேட்கிறார்கள்.

அடேயப்பா! கோடி ... மூணு கோடி!! அவர்கள் தேடி வந்த பணம் அவரிடம் இருக்கிறதா? அவரது பதில்கள் என்ன? தேடி வந்தவர் பணத்தை மீட்டு செல்கிறார்களா?  என்பதை அரசியல் கலந்த சிறுகதையாக கொடுத்திருக்காங்க. இதில் வந்த சமூக கருத்துகள் அருமையாக இருந்தன.

இத்தனை நாள் படித்த கதைகளில் இது வித்தியாசமான கதைக்களமாகவும், நிஜமாக இப்படி நடந்தால், அரசை ஏமாற்றி பிழைக்கும் இது போன்ற மனிதாபிமற்ற நபர்களுக்கு  சவுக்கடிகளாகவும், ஏழைகளுக்கு சாமி கொடுத்த பணமாகவும் (வரமாகவும்) இருக்கும் என்று எண்ண தோன்றியது.

சிறுகதை ரொம்ப நன்றாக இருந்தது. முடிவும் 👌👌👌

மேலும் நிறைய எழுத மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்💐💐💐


Comments