இணைவாய் எனதாவியிலே!


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : மஹி அபிநந்தன்

படைப்பு : இணைவாய் எனதாவியிலே!

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங் :


ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ரசனையாகவும், விறுவிறுப்பாகவும் இருந்த சிறுகதையை சோகமாக முடித்த எழுத்தாளருக்கு என்னுடைய கண்டனங்கள்😡😡

ஏம்மா ஏன் இப்படி? நீ எப்பவுமே இப்படித்தானா? இல்லை இப்படித்தான் எப்பவுமா? எத்தனை அழகான நகர்வுடன் மனதில் பதிந்தது அவர்களது காதல். அதைப் போய் இப்படி பண்ணிட்டியே😭😭😭

ஜோ... செட்

வயதான தம்பதியரின் காதல் காவியம் கண்ணுக்குள் நின்றது. அவரது பிளாஸ்பேக்கில் நாயகியின் கோபமும், இருவரின் மறைமுக நேசமும் அது வளர்ந்து மனதில் பதிந்த விதமும் ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. அத்தனைக் காதலை கொட்டி வைத்தவளை பிரிந்து அவனால் எப்படி இருக்க முடிந்தது என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. முப்பது குழந்தைகள் பெற்றெடுக்க ஆசைப்பட்டதும், அவனிடம் கூறிய இடமும் மனதில் அழகாக பதிந்தது.

அது நிறைவேறிய விதம் செம...

ஆனால் முடிவு எதிர்பாராதது. அதற்கான விளக்கத்தை டுவிஸ்டாக நிறுத்தி என்னை குழப்பி விட்டு விட்டார் எழுத்தாளர். அதை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தியிருக்கலாம் என்பேன் நான்!

செம ரைட்டிங். அழகான எழுத்துநடையில் தொய்வில்லாத நகர்வு. சிறுகதை வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்து மகிழுங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐

Comments