#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : சமீரா ரைட்டர்ஸ்
படைப்பு : என் வானில் நிலா நீயடி
வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி
லிங் :
உயிராக நேசத்தை கொட்டி காதலித்த நாயகி, எங்கு போகிறேன் என்று சொல்லாமல் விலகிச் சென்று விட்ட ஏக்கத்தில், அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற அச்சத்தில் அவளைக் காணாமல் தேடி அலைகிறான் நாயகன். அப்படி பிரியும் விதமாக இருவருக்கும் இடையில் நடந்ததென்ன? அவனது தேடலின் முடிவு கூடலா என்பதை அழுத்தமான களத்துடன் சொல்லியிருக்காங்க.
நாயக நாயகியின் பிளாஸ்பேக் அருமையாக இருக்கிறது. அவனது காதலும், அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்ற நாயகன் பாத்திரமும் அழகாக மனதில் பதிகிறது.
தன்னை காதலித்தவன் தனக்காக எப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்று நினைத்து கண்ணீர் வடிக்கும் நாயகி, திடீரென்று அவனைப் பிரிந்து செல்ல காரணமாக அமைந்த பாத்திரம், நிஜ உலகில் நடப்பது தான். அதற்கான நாயகனின் மாற்றமும், விடாமல் தேடி அலையும் இடமும் 👌👌👌👌
சிறுகதை வாசித்து முடிக்கும் போது ஒரு நாவலை சுருக்கமாக வாசித்த அனுபவத்தை கொடுத்தது. அருமையான அழுத்தம் நிறைந்த களம்.
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
Comments
Post a Comment