கடலின் ஆழம்

கடலின் ஆழம்

ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன. கடல் என்பது ஆதியில் இருந்தே மனித இனத்திற்கு ஒரு புரியாதப்புதிராகவே இருந்து வந்துள்ளது. சிறிது சிறிதாக அச்சம் நீங்கி கடலைத்தாண்டி இருக்கும் நாடுகளை, கடலைக்கடந்து சென்று அறிந்து கொண்டனர். கடலைத்தாண்டியதும் தான் பூகோளம் எனும் நிலவியல் தோன்றியது. உலகில் இருக்கும் இதரப்பகுதிகள் தெரிய ஆரம்பித்தது. கடலைக்கடந்தார்களேத்தவிர கடலின் ஆழத்தை மனிதனால் அவ்வளவு எளிதில் யூகித்து அறிய இயலவில்லை. கடல் மிகுந்த ஆழம் கொண்டது என்பது மட்டுமே புரிந்தது. கடலின் ஆழத்தைக் கண்டறிய 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முயற்சிகள் மேற்கொண்டனர். இதையும் படியுங்கள்: மருத்துவ குணம் மிக்க பனங்கற்கண்டு... ஆனால் அப்போது அதற்கு நவீனக் கருவிகள் இல்லையாதலால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7000 இடங்களில் இவ்வாறு ஆழம் கண்டறிந்தனர். இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறியமுடிந்ததே தவிர, கடலின் அடிமட்டம் குறித்து அறிய வரைபடம் தயாரிக்க இது உதவவில்லை. பிறகு ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தின் பலனாக ஒலி அலைகளைப் பயன்படுத்திக் கடல் ஆழத்தை அறிய முயன்றனர். இந்த உத்தி அடிப்படையில் எக்கோ சவுண்டிங், சைட் ஸ்கேன் ஸ்கேனர் ஆகிய கருவிகள் உருவாக்கப்பட்டு கடலின் நில அமைப்பை வரைபடமாகக் காட்டுகின்றன. இதையும் படியுங்கள்: ஆகாய சக்தியை பெறும் வழி இந்தக் கருவிகள் தயாரித்துள்ள பதிவேடுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பெரியதொரு படமாக்கிப் பார்த்தால் கடல்கள் அனைத்தும் வற்றிப் போனால் அவை எவ்வாறு காட்சி அளிக்குமோ அப்படிப்பட்ட காட்சியை அப்படம் அளிக்கும். அப்படத்தைப் பார்த்தால் கண்டத்திட்டு (Continental Shelf). கண்டச் சரிவு (Continental Slope) ஆழ்கடல் (Abyss) ஆகிய மூன்று பகுதிகளை நீர் உலகம் கொண்டது எனத் தெரியவரும். ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன. இதையும் படியுங்கள்: மொழியை பறிகொடுக்கும் இனம் சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள். இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம். கடலடியில் அனேக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே. கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம். இதையும் படியுங்கள்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல். கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உளள அகழிகள் ஆகும். இந்த அகழிகள் குறுகலானவை. நீளமானவை. கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும். இந்த அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி. அதாவது, இரண்டரை மைல். பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி.தான் . -அண்ணாமலை சுகுமாரன் கதம்பம் × ஆலோசனைகள்தொடர்புகொள்ளஎங்களைப்பற்றிதனித்தன்மை பாதுகாப்புவிதிமுறைகளும் நிபந்தனைகளும் Copyright © 2023 Maalaimalar Powered By Hocalwire

https://www.maalaimalar.com/news/kadhambam/tamil-news-kadhambam-article-510684

Comments