அப்சரஸ் பீனா லோகநாதன் :
*****
எழுத்தாளர் வித்யா வெங்கடேஷ் அவர்களின் சிறப்பான விமர்சனம் :
*****
சாந்தி நாகராஜ் சகோதரியின் விமர்சனம் :
# நந்தவனம் குறுநாவல் போட்டி
கதை :காதல் சதுரங்க ஆட்டம்
எழுத்தாளர்: வாகைப்பூ
தலைப்பிலேயே தெரியுது இது காதலை மையமாக வைத்து ஆடாப்போற ஆட்டம்னு .
நாயகன் கார்த்திக் தன் மனதில் தோன்றும் உண்மையான காதலுக்கும் வெளிப்புறத் தோற்றத்தினால் ஏற்படும் ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆடும் காதல் ஆட்டம்.
கிருத்திகா,சாம்பவி,கார்த்திக் மூவரும் தங்கள் வாழ்வில் ஆடும் காதல் ஆட்டத்தினை ரொம்ப விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத பல ட்விஸ்ட்களை வைத்து நல்ல சுவாரசியமான முறையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நல்ல முறையில் வழிநடத்தி மனதில் பதியும் படியாக கதையை அழகாக வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர்.
கிருத்திகாவின் மயக்கத்திற்காண காரணத்தை சரியாக சொல்லாத மாதிரி இருக்கு.
அது அவளோட நடிப்பா இல்லை யாராவது வேணும்னே மயக்கம் அவளுக்கு மயக்கம் வர மாதிரி செஞ்சாங்களான்னு இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்
காதல் ஆட்டம் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
******
கடம்ப மலர் :
#நந்தவனம்_குறுநாவல்_போட்டி
#பூக்களுக்கு_பூவின்_விமர்சனம்
காதல் சதுரங்க ஆட்டம் - வாகைப் பூ
எங்கிருந்து ஆரம்பிக்க.. எப்படி ஆரம்பிக்க.... சரி அவங்களை போலவே ஆரம்பிப்போம். ஒரு விபத்தை காட்டி ஆரம்பிக்குது கதை. சரசரன்னு அடுத்து ஒரு கல்யாணம். சரி வருத்தத்தைப் போக்க ஒரு சந்தோஷ நிகழ்வு ன்னு நினைச்சா.. அங்க ஒரு டிவிஸ்டு.. ரைட்டு... அப்படின்னு தொடர்ந்து படிச்சேனா.. ஹீரோ கார்த்திக் ரொம்ப டெரர் பீஸா தெரிஞ்சார். திட்டுறார், சூடா ஏதாவது கொட்டினாலும் கண்டுக்க மாட்டேங்கரார். ரொம்ப கோபம் வருது அவருக்கு.
அதுக்கு மேல அவருக்கு பெரிய குழப்பம். முதல்ல காதலிச்ச பொண்ணு மேல காதலா இல்ல கிருத்திகா மேலையான்னு. அப்பறம் கண்டுபிடிச்சு தெளிவாகிடறார்.
அப்பறம் கதை முழுக்க ஒரே டிவிஸ்ட் தான். ஒரு விஷயம் நடக்குது. அப்பறம் அதுக்கான விளக்கம் பிளாஷ்பேக் ல வருது. அதே போல தான் நிறைய இடத்தில வருது. அப்ப மட்டும் எனக்கு பாதி புத்தகத்துல கதையை ஆரம்பிச்சு அப்பப் புக்மார்க் வச்சு முன் பக்கம் போய் போய் பார்த்துட்டு வந்த ஃபீல் இருந்தது.
அகல்யா, கோகுல் அதிகம் வரல. ஆனாலும் அகல்யா அங்கங்க வந்து வில்லத்தனம் பண்ணிட்டு போறா.
காயத்ரி, புவனா, ஹரிச்சந்திரன் பாத்திரங்கள் அளவா வந்து போறாங்க.
பிளஸ் ன்னு பார்த்தா கதையை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்காங்க.
ஆனாலும் சில இடத்தில லாஜிக் இடிச்சது. அதை பின்னாடி விளக்கி இருந்தாலும் அக்சப்ட் பண்ண முடியல.
முக்கியமா எதிரியோட வீட்ல பொண்ணு எடுக்க கோகுல் எப்படி சம்மதிச்சிருக்க முடியும் ன்னு கேள்வி என்னை இன்னும் பிராண்டிகிட்டே இருக்கு. கதையில் அதுக்கு விளக்கம் இருந்த மாதிரி எனக்கு நினைவு இல்ல. இருந்தா சொல்லுங்க சிஸ்டர்.
மத்தபடி கதை வேகமாக விறுவிறுப்பா படிக்க சுவாரஸ்யமா இருந்தது. இதுக்கு என்ன பிளாஷ்பேக் இருக்கும்ன்னு ஒவ்வொன்னுக்கும் யோசிக்க வைக்கிறாங்க.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்.
*****
Comments
Post a Comment