பெண்களை பாதுகாக்கும் சட்டம்

1. பெண்களை பாதுகாக்கும் சட்டம்


ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா?

போக்ஸோ சட்டம் பிரிவு 8 படி, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 342ன் படி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 363 படி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி புஷ்பா, "வழக்கு மற்றும் வாதங்களை வைத்து பார்க்கும் போது சதீஷ் சிறுமியின் ஆடைகளை கழற்றி மார்பகங்களை தொட்டார் என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை. 12 வயது சிறுமியின் ஆடைக்குள் கை விடப்பட்டு, மார்பகங்களை அழுத்தியதாக தெரியவில்லை. குற்றவாளி நேரடியாக சிறுமியின் உடலை தொடவில்லை என்பதால், இது 'பாலியல் வன்முறை' என்ற வார்த்தைக்குள் வராது. ஆகவே இது போக்ஸோ சட்டத்திற்குள் வராது. இது இந்திய தண்டனை சட்டம் 354ன் கீழ் நிச்சயம் வரும். இது ஒரு பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றமே தவிர பாலியல் வன்முறை குற்றம் கிடையாது."

இந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்?
பாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு உங்களை அறியாமலேயே துணை செல்பவரா நீங்கள்?
"எனவே சதீஷ் மீதான போக்ஸோ சட்டத்தை ரத்து செய்து ஐபிசி 354ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது செல்லும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆடைகளை கழற்றாமல் ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொடுவது .குற்றமில்லையா என இந்த தீர்ப்பு பல விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி உள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்

"போக்ஸோ சட்டத்தின் முக்கிய நோக்கமே குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்களை குறைத்து அவர்களை பாதுகாப்பதுதான். இப்போது இந்த தீர்ப்புப்படி பார்த்தால், போக்ஸோ சட்டம் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகிறது," என்கிறார் குழந்தைகள் நல செயற்பட்டாளரும், பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சென்னையை சேர்ந்த நாதர்ஷா மாலிம்.

.........

இது குறித்து மூத்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறுகையில், "நாம் 2021ஆம் ஆண்டில் இருக்கிறோம். இந்த காலத்தில் பாலியல் வன்முறை (sexual assault) என்பது சொற்கள் வழியாகவோ, சொற்கள் இல்லாமலோ, தவறான எண்ணத்துடன் அணுகுவது கூட குற்றம்தான். அதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

பெண்கள்
பட மூலாதாரம்,BBC/NIKITA DESHPANDE
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பதற்கான சட்டங்கள் என, இவை அனைத்திலும் பாலியல் வன்முறை என்பது நேரடியாக தாக்குவது என்பது மட்டும் இல்லை. நேரடியாக அல்லாமல் பாலியல் ரீதியாக எந்த விதமான தாக்குதல் (verbal or non verbal) நடத்தினாலும் அது குற்றமாகும் என்று சட்டம் சொல்கிறது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி இருக்கையில், இந்த வழக்கில் பாலியல் வன்முறை நிகழ்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இருந்தும் நீதிபதி இதுபோன்ற தீர்ப்பு அளித்துள்ளது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

"இந்த தவறான தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும். இதுபோன்ற வழக்குகளை நீதிபதிகளில் இருந்து, அதனை கையாளும் வழக்கறிஞர்கள் வரை பச்சாதாபத்துடன் அணுக வேண்டும்."

மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டு இருக்கையில், குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் இந்தத் தீர்ப்பு உள்ளது என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.


Comments