வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.
.........
வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள்.
.........
1. எழுச்சி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் :
இன்று (ஜனவரி 3-ந்தேதி) வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள். பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் சிறு முயல் கூட சிங்கத்தை எதிர்த்து நிற்கும் என்பது சொல்லடை. காகம் பறவாது கட்டபொம்மன் கோட்டையிலே என்று பழமொழி வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பறை சாற்றும்.
1760-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். பெற்றோர் ஜக வீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிகள் ஊமைத்துரை என்ற தனபால்குமாரசாமி, துரைசிங்கம் ஆவர். தங்கையர் இருவரும் உண்டு.
கி.பி. 17-ம் நூற்றாண்டில் கட்டபொம்மன் பரம்பரையில் 47-வது மன்னராக வீரபாண்டியன் வீற்றிருந்தார். ஒவ்வொரு சிற்றரசரும் பாளையக்காரராகவும் அவர்களின் நாடுகள் பாளையப்பட்டுகளாகவும் அழைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக்கு அடங்கி 96 கிராமங்கள் இருந்தன. பாளையக்காரர்களில் பலர் ஆற்காடு நவாப்பிற்கு வரி செலுத்தினர்.
அமெரிக்கா கண்டனம் தென் இந்தியாவில் அப்போது கிழக்கிந்திய கம்பெனி புகுந்திருந்தது. வியாபார தந்திரமாக அவர்கள் கடனை வாரி வழங்கினர். கடனை திரும்ப வசூலித்தல் என்ற பெயரில் அவர்கள் சிற்றரசுகளை மண்டியிட வைத்தனர். கடனை திரும்ப செலுத்த திணறிய ஆற்காடு நவாப் 1792-ல் கிழக்கிந்திய கம்பெனியோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன்படி வரி வசூலிக்கும் உரிமை அல்லது கடனை அடைக்க முடியாதோருக்கு ஈடாக ஆட்சி பொறுப்பை பெறுவது என்பது வெள்ளையர்களின் தந்திரமாகும்.
வரி வசூலை முறைப்படுத்த அளந்து கல் நடும் முறையை கொண்டு வந்தனர். கர்னல் மேக்ஸ்வெல் என்பவர் இதன் அதிகாரியாக இருந்தார். பாளையக்காரர்கள் நவாப்பிற்கும் பின்பு கிழக்கிந்திய கம்பெனிக்கும் திறை செலுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வெள்ளையர்கள் திறை கேட்டனர். எமது முந்தைய 46 பரம்பரை தோன்றல்கள் யாருக்கும் வரி செலுத்தியதில்லை. நானும் கப்பம் கட்ட முடியாது என்றார் அவர். வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆலன்துரை வரி வசூலிக்க வந்தார். “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உமக்கு ஏன் கொடுக்க வேண்டும் திறை. இனாமாக வேண்டுமானால் உடல் வளைந்து கேள் தருகிறேன். இல்லாவிட்டால் உயிர் பிச்சை தருகிறேன் ஓடி விடு” என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆலன்துரையால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியாத நிலையில் கிழக்கிந்திய கம்பெனி ஜாக்சன் என்பவனை திருநெல்வேலி கலெக்டராக்கியது. ஜாக்சன் அழைப்பின்பேரில் கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க 4 ஆயிரம் வீரர்களுடன் புறப்பட்டார். ஜாக்சன் கட்டபொம்மனை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தார். நெல்லையிலிருந்து நழுவி குற்றாலம், சொக்கம் பட்டி, சிவகிரி, சேத்தூர் என்று மாறிமாறி சென்றார். இறுதியில் இருவரும் ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் சந்தித்தனர். கட்டபொம்மன் தம்மை பார்க்கும் போது படையினரை அழைத்து வரக் கூடாது என்பது ஜாக்சனின் நிபந்தனை ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மன் தன் இரு தம்பிகளோடு ஜாக்சனை சந்தித்தார். ஜாக்சனுடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய கும்பினி படை நின்றது. வீரபாண்டிய கட்டபொம்மனை வரி செலுத்தும்படி மிரட்டிய ஜாக்சன், வீரபாண்டியனை கைது செய்ய தன் படைக்கு உத்தரவிட்டான். கட்டபொம்மனின் வேல் சுழன்றது. கர்னல் கிளார்க் அங்கேயே பிணமாக வீழ்ந்தான். தம்பியர் இருவரோடும் தப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் தன் படையினரோடு பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். கட்டபொம்மன் குறித்து எட்டப்பன் தகவல்களை சேகரித்து அனுப்பினான். பின்னர் இரு தரப்பினரையும் தூத்துக்குடியில் இருந்த ஆங்கிலேய அதிகாரி டேவிசன் சமாதானப்படுத்தினார். லூஷிங்கன் நெல்லையின் புதிய கலெக்டரானார். ஆயினும் கட்டபொம்மனிடம் வெள்ளையரால் திறை வாங்க முடியவில்லை. வீரபாண்டியனை பணிய வைக்க சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் ஜான் பானர்மேன் தலைமையில் படைப்பிரிவை உருவாக்கினான். காலாட்படை, பீரங்கி படை, குதிரைப்படை, சுதேசிப்படை (இந்திய வீரர்கள்), விதேசிப்படை (வெள்ளையர்கள்) என ஐந்து படை பிரிவுகள் உருவாக்கப்பட்டன. வீரபாண்டியனின் இரு தம்பிகளும் திருச்செந்தூர் ஆவணி மூல திருநாளுக்குச் சென்றனர். உளவாளிகள் மூலம் தகவல் பானர் மேனுக்குச் சென்றது. உடனே பானர்மேன் பாஞ்சாலங்குறிச்சியை தாக்க 5 படைப் பிரிவுகளையும் அனுப்பினான். போர் தொடங்கியது. வீரபாண்டிய கட்டபொம்மனின் சேனை அயரவில்லை. வாயில் காவலன் வெள்ளைய தேவன் வீசிய ஈட்டியில் கர்னல் காலின்ஸின் தலை உருண்டது. இருதரப்பிலும் பலர் மாண்டனர். எனினும் வெள்ளையர் படை தளபதிகள் டக்ளஸ், டார்மிக்ஸ், பிளாக்கி, கன்னர்்பின்னி உள்ளிட்டோர் சடலமாகினர். இவர்களின் கல்லறை இப்போதும் ஒட்டப்பிடாரம் அருகில் உள்ளது. இத்தருணத்திலும் வீரபாண்டிய கட்டபொம்மனை பணிய வைக்க வெள்ளையர் மீண்டும் முயன்றனர். புது வெள்ளமென தாக்குதல் நடத்த சில யுக்திகளை உருவாக்க வீரபாண்டியன் திருச்சி செல்ல திட்டமிட்டார். 50 குதிரைகளோடு வீரபாண்டிய கட்டபொம்மன் படை வட திசை நோக்கி புறப்பட்டது. இடையில் கோலார்பட்டியில் தானாதிபதி மீண்டும் பிடிபட்டார். பின்னர் அவர் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் உள்பட 7 பேர் (ஊமைத்துரை, துரைசிங்கம், முத்தைய நாயக்கர், குமாரசாமி நாயக்கர், முத்துகுமாரசாமி நாயக்கர், வீரபாண்டியனின் அந்தரங்க பணி ஆள் வீரணமணியகாரன்) பல இடங்களில் தங்கி தப்பினர். ஆனியூர், கடால்குடி, சோளபுரம் சென்று, இறுதியில் புதுக்கோட்டை தொண்டைமான் அழைப்பின் பேரில் புதுக்கோட்டை அரண்மனையில் தங்கினர். புதுக்கோட்டை மன்னனின் துரோகத்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் பிடிபட்டார். விசாரணை என்ற சதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டது. 5-10-1799-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் முருகனை வணங்கி ஓர் நெடுஞ்சாலை புளியமரத்தில் தூக்கு கயிறை தன் கழுத்தில் தானே மாட்டிக்கொண்டு வீர மரணம் அடைந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் 39 ஆண்டுகள் வாழ்ந்தார். எட்டப்பன், புதுக்கோட்டை மன்னன் போன்றோரின் துரோகத்தால் அவர் இறந்து 220 ஆண்டுகள் ஆகின்றன. வரலாற்றில் மாவீரனாக மடிந்த முதல் அடையாளமாக வீரபாண்டியனின் பெயர் நிலைத்திருக்கும். வீரபாண்டியனின் மரணம் வீழ்ச்சி அல்ல. எப்போது நினைத்தாலும் ஒரு புத்தெழுச்சி ஆகும்.
****
2. வரலாறு வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு By Siva- Dec 22, 2018, 06:11PM IST - Advertisement - வீர வசனம் என்றாலே இன்றளவுக்கும் நம் மனதில் உடனே நியாபகத்திற்கு வருவது கட்டபொம்மன் கூறிய “யாரைக் கேட்கிறாய் வரி..? யவரைக் கேட்கிறாய் வட்டி..?” என்கிற வசனம் தான் அந்த அளவிற்கு 200 ஆண்டுகளை தாண்டியும் அவரது வீரம் தமிழ் மண்ணில் மறையாமல் உள்ளது. அந்த அளவிற்கு நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் தான் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்கள் இந்தியமண்ணில் தங்களது ஆதிகத்தினை செலுத்தியபோது அவர்களை துணிந்து எதிர்த்தவர் இந்த கட்டபொம்மன். ஆங்கிலேய வணிகம் கட்டபொம்மனின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனது வணிகத்தினை துவங்க நினைத்த போது தனது துணிவான மன தைரியத்தினால் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மாவீரன் கட்டபொம்மனின் வாழ்க்கையினை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து வாசிக்கவும். - Advertisement - Close Player கட்டபொம்மன் பிறப்பு : தமிழகத்தில் உள்ள இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது பாஞ்சாலங்குறிச்சி. அந்த ஊரில் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திக்குவிசய கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார். இவரது இயற்பெயர் வீரபாண்டியன் மற்றும் அவர்களது குடும்பப்பெயர் கட்டபொம்மன் இது இரண்டும் மருவி வீரபாண்டிய கட்டபொம்மன் என்றானது. பெயர் – வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜனவரி 3, 1760 பெற்றோர் – திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் பிறந்த ஊர் – பாஞ்சாலங்குறிச்சி இளம் வயது மற்றும் திருமண வாழ்க்கை : - Advertisement - கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்து. அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் அரச குடும்பம் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார் . பிறகு தனது தந்தையின் மேல் வைத்த பாசம் மற்றும் ஈர்ப்பின் பேரில் அவர் தனது இளம் வயதில் அவரது தந்தையான திக்குவிசய கட்டபொம்மனின் உடனே அவருக்கு உதவியாக இருந்தார் . பிறகு அவர் வாலிப வயதினை அடைந்ததும் வீரசக்கம்மாள் என்கிறவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாகும்வரை புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது. அரியணை எறிய பாளையக்காரர் : தனது 30 ஆம் வயதில் தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார் கட்டபொம்மன். அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அவர் அரியணை ஏறினார். இதற்கு காரணம் அவர் பெற்ற நன்மதிப்பும் அவரது வீரமும் தான் இவையிரண்டை வைத்தே அவர் பாளையக்காரர் அரியாசனத்தில் அரியணை ஏறினார். பாஞ்சாலங்குறிச்சியில் வரி வசூல் செய்த ஆங்கிலேயர்கள் : ஆங்கிலேயர்கள் இங்கிருந்த ராஜ்யங்களில் தொடர்ந்து வரி வசூல் செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பல ராஜ்ய மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். இதனால் கட்டபொம்மனும் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருந்தது. தன் ராஜ்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் அளவிற்கு பணம் இல்லை என்பதனால் அவன் மக்களிடம் பணம் வசூலித்தான். அப்போது அந்த பகுதியில் வாழும் மக்கள் அவனை வசைபாட துவங்கினர். கட்டபொம்மனை நோக்கி சீரிய ஜாக்சன் துரை : மக்கள் தன்னை வசைபாடுவதை கண்டு மனம் நொந்து இருந்த நேரத்தில் ஜாக்சன் துரை அவனிடம் பணத்தினை வசூலிக்க வந்தான். அப்போது கோவத்தின் மிகுதியில் இருந்த கட்டபொம்மன் ஜாக்சன் துரையை நோக்கி “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று துணிச்சலாக அவரின் முகத்தின் எதிரே தனது வீரத்தினை வெளிப்படுத்தி வரியினை கட்ட முடியாது என்று துணிச்சலாக கூறி அவனை வெளியே அனுப்பினான். கட்டபொம்மன் நிகழ்த்திய போர் : ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகு அவர்களது பார்வை வீரபாண்டிய கட்டபொம்மன் மீது திரும்பியது. இவனை வீழ்த்தினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அவன் மீது போர் தொடுக்க தயாரானார்கள். இதனை முன்பே கணித்த கட்டபொம்மன் தனது ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயரை எதிர்த்தான். போரில் கடுமையாக சண்டையிட்டும் ஆங்கிலேயர்களால் அவனது ராஜ்ஜியம் கவரப்பட்டது. போரில் தனது ராஜ்யத்தை இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கேட்டார். ஆனால் ஆங்கிலேயர்களுக்காக பயந்து அந்த மன்னன் கட்டபொம்மனை காட்டிக்குடுத்துவிட்டார். அதோடு அவரையும் ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தனர். தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் : ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தபின்னர் நடந்த விசாரணையின் போதும் தனது வீரத்தினை வெளிக்காட்டினார். விசாரணையின் போது அவர் நான் உங்களை அழிக்கவேண்டும் என்று நினைத்து தான் உங்கள் மீது போர் புரிந்தேன் என்று வீர உரைபுரிந்தார். மேலும் நான் இங்கு தூக்கிலிடப்படுவதை காட்டிலும் நான் என் இடத்திலே உங்கள் கையால் இறந்திருக்கலாம் என்று கயத்தாறு எனும் பகுதியில் 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
*****
வீரபாண்டிய கட்ட பொம்மன்
தமிழக சுதந்திரபோராட்ட வரலாற்றை பற்றியும் தமிழக வீரம் பற்றிப் பேசினால், உடனே நினைவுக்கு வருபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்பட்ட இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு நுற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழக மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு உள்ளவரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தோடு, வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வாழ்க்கை வரலாறு சாதனைகளை காண்போம்.
தோற்றம்
ஆதிகட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மகனாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இவரது இயற்பெ" யர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
இளமைக்காலம்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை என்ற குமாரசாமி, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் உடன்பிறந்தோர் . பின்னர், கட்டபொம்மன் வீரஜக்கம்மாள் என்பவரை மணந்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790ம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற சமயத்தில், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. எட்டயபுரம் ராஜாவிடம் இருந்து பாளையத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றனர் ஆகிலேயர்கள். இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், எதிர்த்து நின்றனர், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கும் வகையில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டது. எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்தத்தோடு கடுமையான, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?
“வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்து பணிபுரிந்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
எஞ்சிய அரண்மனை
புதுப்பிக்கப்ப அரண்மனை
போர்களத்தில்
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழ்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரத்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் கம்பெனி நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். பீரங்கிகளை கொண்டு நடைபெற்ற இந்த போரில் ஆறு நாட்களுக்கு பின்னர் கோட்டைமதில் உடைக்கப்பட்டு ஆங்கிலேய படைகள் உள்ளே நுழைந்தது. கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன்அங்கிருந்து தப்பி புதுக்கோட்டையில் உள்ள தனது நண்பரான புதுக்கோட்டை மன்னரிடம் அடைக்கலம் கோரினார். முதலில் கட்டபொம்மனை வரவேற்று அடைக்கலம் கொடுத்த புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் காட்டி கொடுத்ததால், ஆங்கில படைகள் அவரைக் கைது செய்தனர்.
இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள்
கயத்தாறு பகுதியில் புளிய மரத்தடியில் நடந்த விசாரணையில் கட்டபொம்மனை குற்றவாளியென்று தீர்ப்பளித்தனர். வெள்ளையன். தன் மீது சுமத்திய “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆகிரமிப்பளர்களான ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
தூக்கு மேடை ஏரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரின் மனதிலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.
இறப்பு
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் த
ளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாற்றை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தின் கதை வசனத்தை சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே நம்கண் முன்னே கொண்டுவந்து காட்டியது. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், அனைவருக்கும் சிவாஜி கணேசன் அவர்களே இன்றும் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு, படத்தில் அந்தக் கதாபாத்திரரமாகவே வாழ்ந்து காட்டியிருப்பார். சிவாஜியின் நடிப்பைப் வெளி நாட்டினரும் வியந்து பாராட்டும் விதமாக, எகிப்தில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில், அவருக்கு விருது’ கிடைத்தது.
சிலை
மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்
கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனாக நடித்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் தனது சொந்தசெலவில் இந்த சிலையை அமைத்துள்ளார். கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் நாவல்கள் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.
1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனின் புராதன கோட்டை அமைந்திருந்த இடத்தில் ஒரு புதிய கோட்டை ஒன்றை கட்டியது. கோட்டையில்உள்ள பிரதான மண்டபம் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருக்கிறது . போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.
அவரது பழைய அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் அகழ்வாராய்வு செய்யப்பட்டு இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இருநூறாவது ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் தலையை வெளியிட்டது.
இந்தியகடற்படையின் முதன்மையான தகவல் தொடர்பு இணைப்பு மையமாகக் கருதப்படும் நெல்லை மாவட்டத்தின் விஜயநாராயணபுரத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைதளத்திற்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என்று பெயரிடப்பட்டது.
1997 வரை, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போதைய தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி மாவட்டங்கள்) அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ மிக சிறப்பாக கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் தன்னெழுச்சியுடன் போராடிய முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு நிறுவி வருகிறது.
கட்டபொம்மனின் கோட்டை அமைந்துள்ள பஞ்சலங்குறிச்சிக்கு மிக அருகிலேயேதான் சுதந்திர போராட்டத்தில் தனது சொத்துகளை இழந்து கற்ற கல்வி தகுதியான வழக்கறிஞர் தகுதியையும் இழந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் கம்பெனி தொடங்கிய குற்றத்திற்காக ஆங்கிலேய அரசால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வ. உ. சிதம்பர பிள்ளை பிறந்த ஊரான ஓட்டபிடாரம் என்ற ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
***
4.
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.
கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்)
Kattabomman.jpg
ஆட்சி
கி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழா
கி.பி 1790
முன்னிருந்தவர்
ஜெகவீர கட்டபொம்மன்
துணைவர்
சக்கம்மாள்
அரச குலம்
நாயக்க மன்னர்
தந்தை
ஜெகவீர கட்டபொம்மன்
தாய்
ஆறுமுகத்தம்மாள்
பொருளடக்கம்
கட்டபொம்மன் பெயர் காரணம்:
அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராகப் பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளைத் தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.[1] ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின், ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் ஆவார்.[1]
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்.[1] இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.[1]
வாழ்க்கை
மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை
சனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
போர்
கர்நாடக பிரதேசத்தின் ஆட்சியாளர்களான ஆற்காடு நவாப்புகள் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை கும்பினியாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி நெல்லை சீமையில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியாமல் இருந்தார். இதனடிப்படையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையைத் தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.
மரணம்
வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்
உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்
செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பிப்ரவரி 02, 1801இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை மார்ச் 30, 1801இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து, மே 24, 1801இல் அதனைக் கைப்பற்றியது. அங்கிருந்து தப்பித்து, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல், பிரான்மலை என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுச் சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்
வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல் தலை
ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கியச் சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்தக் காப்பகத்தைப் பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன செய்தியை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும், பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்து விட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமல் போய்விட்டது என 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.[2]
மணிமண்டபம்
கட்டபொம்மன், மற்றும் ஊமைத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.[3]
பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்
ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ
இவற்றையும் காணவும்
வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)
பாஞ்சாலக்குறிச்சி கோட்டை
கலியுகப் பெருங்காவியம்
நூல்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு
மேற்கோள்கள்
தமிழ் நேசன்-இணையம் மேஜர் ஜான் பேனர்மென்-வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு - பார்த்து பரணிடப்பட்ட நாள் 24-06-2009
"கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்". ஜனவரி 4, 2014 அன்று பார்க்கப்பட்டது.
வீர வரலாற்று அடையாள சின்னங்களுக்கு ஆபத்து: வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் காக்கப்படுமா?
வெளி இணைப்புகள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கட்டபொம்மன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டுரை பரணிடப்பட்டது 2010-01-17 at the வந்தவழி இயந்திரம்
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடப் படங்கள், தகவல் பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம்
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில தகவல்கள்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
கதை சொல்லும் சித்திரங்கள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விக்கிமேப்
Last edited 9 months ago by AntanO
விக்கிப்பீடியா
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு பயன்பாட்டு விதிகள்கணினி பதிப்பு
****
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஊருக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் இருந்த ஒரு தரைக் கோட்டையாகும்.
((பாஞ்சாலக்குறிச்சி புதிய கோட்டை))
இந்தக் கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் வாழ்ந்த கோட்டையாகும். இது 35 ஏக்கருக்குமல் பரப்பளவு கொண்டது. இந்தக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி ஊருக்கு மையத்தில் அமைந்திருந்தது. இந்தக்கோட்டை ஐந்நூறு அடி நீளமும், முந்நூறு அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இந்தக்கோட்டையின் முதன்மைவாயில் தெற்குநோக்கி இருந்தது. இந்த கோட்டையின் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இது கீழே அகலமாகவும், மேலே போகப்போக சரிவாகவும் சுமார் பனிரெண்டு அடி உயரத்துடனும், அடிப்பாகத்தின் அகலம் சுமார் பதினைந்து அடியும் உச்சியில் மூன்று அடியும் அகலம் கொண்டதாக இருந்தது. இக்கோட்டை இரட்டைச் சுவர்களாக கட்டப்பட்டு இடையில் கம்பு, உமி, வரகு, வைக்கோல் முதலியவற்றால் அடைக்கப்பட்டதாக இருந்தது. இதனால் கோட்டைச்சுவரை எளிதில் உடைக்க இயலாது. கோட்டையின் சுவர் வெளிப்புறம் செங்குத்தாகவும் உட்புறம் அதிகச்சரிவாகவும் கட்டப்பட்டிருந்தது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கொத்தளங்கள், நடுவில் நடுவில் அலங்கங்களும், சிறுசிறு கொத்தளங்களும் இருந்தன. இந்த வெளிக்கோட்டைக்கு உள்ளே ஒரு காரைக்கோட்டையும் இருந்தது. வெளிக்கோட்டையைச் சுற்றி ஒரு இலந்தை முள்வேலியும் இருந்தது. இது ஆஙகிலேயர்களால் அப்போது தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது இக்கோட்டையின் அடிபாகம் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த எஞ்சிய அடிப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
புதிய கோட்டை
தொகு
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வடிவமைப்பை ஒத்த கோட்டையை பழைய கோட்டைக்கு அருகில் 1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆறு ஏக்கர் பரப்பளவில் எழுப்பினார். இந்தக்கோட்டை கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி கோயில் சுற்றிலும் மதில்சுவர் போன்றவற்றுடன் கட்டப்பட்டது. உள்ளே கட்டபொம்மனின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையம் செயல்படுகிறது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாதுறையின் பராமரிப்பில் இயங்கிவருகிறது.[1][2][3]
******
வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...
உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?
எங்களுடன் வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?
நாத்து நட்டாயா? களை பறித்தாயா?
கொஞ்சி விளையாடும் என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
மாமனா? மச்சானா? எதற்கு கேட்கிறாய் வரி?
மானம் கெட்டவனே...
அட! இது நம்ம கட்டபொம்மன் பேசிய வசனம் ஆச்சே என சொல்லும் அளவிற்கு பட்டி தொட்டி அனைத்தும் பிரபலமான கட்டபொம்மன் வரலாறு பற்றி விளக்கமாக காண்போம்.
பிரிட்டிஷ் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீரனின் கதைதான் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் தான் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் .
'நான் வாழும் சொந்த பூமிக்கு யாரோ வேறு நாட்டு அயலானுக்கு கப்பம் கட்டுவதா.. எங்கிருந்தோ வந்து இந்திய மண்ணை சூறையாடிய ஆங்கிலேயனுக்கு ஒரு பொழுதும் அடிபணிய முடியாது' என வீர முழக்கத்தோடு ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்த மாபெரும் வீரமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வாழும் தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து இந்திய சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த ஒரு வீரத்தமிழர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். அப்படிப்பட்ட பொங்குதமிழ் வீரம் பேசும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் தெரிந்து கொள்வது இந்த மாவீரனுக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை ஆகும்.
மதுரை நாயக்கருக்கு பின் திசை மாறிய பாளையங்கோட்டை
மதுரை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒவ்வொரு பாளையக்காரரால் ஆளப்பட்டுவந்தது.
மதுரை நாயக்கர் ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பாளையகாரர்கள் சுதந்திரமாய் குறுநில மன்னர்களாக நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.
பாளையங்கோட்டையில் பாஞ்சாலங்குறிச்சியை கட்டபொம்மு என்ற பெயர் கொண்ட குறுநில மன்னன் ஆட்சி செய்து வருகின்றான். இந்த கட்டபொம்முவின் வம்சா வழியில் வந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி இரண்டாம் ஜெகவீரபாண்டியனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் பிறந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இளம் வயது வரை எந்தவித கவலையும் இல்லாது கட்டழகு காளையாக மகிழ்ச்சியோடு இருந்து வந்தார் கட்டபொம்மன். ஜக்கம்மா எனும் மங்கையை கண்டு, காதல் வயப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றார். திருமணம் கோலாகலமாய் நடைபெற, குழந்தை பேறு இல்லை எனினும் இருவரும் இணைந்த இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியோடு தொடர்கிறது.
இந்த சமயத்தில் தான் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் ஆட்சிக்கு வந்தனர். அந்த சமயத்தில் தான் ஆங்கிலேயர்களும் வணிகத்தை மேம்படுத்த இந்தியாவிற்குள் நுழைந்தனர். 1890 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மேலும் வலிமை பெற்றவர்களாக இந்தியாவை முழுமையாக ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் . பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்தியர்கள் அடிபணிய வேண்டும் என்று சட்டம் விதித்தனர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழகத்தில் வரி வசூலிக்கும் திட்டத்தை அமலாகியது. இந்தியர்கள் கப்பம் செலுத்த வேண்டும் அதை பெறுவதற்கான முழு உரிமையும் தங்களுக்கு உள்ளது என்று பிரகடனம் செய்தனர் .மேலும் அனைத்து பாளையக்காரர்களும் ஆங்கிலேயருடன் மரியாதையுடன் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் தனது 30வது வயதில் கட்டபொம்மன் அரியணை ஏறுகிறார்.
ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரத்தமிழன் கட்டபொம்மன்
அரியணை ஏறிய முதல் வேலையாக வரி வசூலிக்கும் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார் கட்டபொம்மன். 'தங்களுடைய சொந்த மண்ணில் சுதந்திரமாய் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்க ஆங்கிலேயருக்கு ஒருபோதும் வரி, கப்பம் எதுவும் செலுத்த மாட்டேன்’ என்று வீர கர்ச்சனை செய்கிறார். இதனால் ஆங்கிலேயரின் கடும் கோபத்திற்கு ஆளானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
அப்போதுதான் நம்முடைய இந்தியர்களுக்குள் சுதந்திர பற்று எழ ஆரம்பித்தது . மக்கள் சுதந்திர தாகத்துடன், எங்கிருந்தோ வந்து நம் நாட்டை ஆட்சி செய்யும் ஆங்கிலேயரை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் ஆங்கிலேய ஆட்சியாளர் ஜாக்ஸன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அழைப்பு ஒன்று விடுகிறார். கட்டபொம்மனிடம் எட்டயபுரத்தில் நில சூறையாடல், தங்களுக்கு கப்பம் கட்டாமை என பல குற்றச்சாட்டுகளை சுமத்தி தன்னை வந்து சந்திக்குமாறு அழைக்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சனை சந்திப்பதற்காக அவர் சொல்லும் இடத்திற்கு வருகின்றார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வர சொல்லி 400 மைல்களுக்கு அப்பால் வரை கட்டபொம்மனை அலைகழித்தார் ஜாக்ஸன் . இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்கிறார்.
அங்கும் பல விதங்களில் கட்டபொம்மனை அவமானப்படுத்துகின்றான் ஜாக்சன். இதனால் மிகுந்த கோபம் கொண்டு அங்கிருந்து வீரத்தோடு, தடுக்க வந்த வீரர்களை எதிர்த்து போரிட்டு தப்பித்து வெளி வருகிறார் கட்டபொம்மன்.
கட்டபொம்மனை சூழ்ச்சியால் மட்டுமே வெல்ல முடியும் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படி செய்த சூழ்ச்சி வலையிலும் தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி திரும்புகின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
போர்முனை சாகசங்கள்
உங்களுக்கு வரி செலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை . நாங்கள் சுதந்திர மன்னர்கள். என்று துணிச்சலோடு போர் வாளை தூக்கி முழக்கமிட்ட இவரது வீரத்தை பார்த்து சுற்றியுள்ள அனைத்து பாளையங்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தன. அதனால் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மேலும் உற்சாகம் எழுந்தது. தம்முடைய பேச்சாற்றலால் அனைவரையும் போரில் கலந்து கொள்ளவருமாறு சுதந்திர தாகத்தை ஏற்படுத்துகின்றார்.
கூடவே தன் கோட்டையை மேலும் வலுப்படுத்தினார். பெரும் படைகளை திரட்டி வந்தார். ஆங்கிலேயரை எதிரப்பதற்கு, தமிழகத்திலிருந்து பல பாளையங்காரர்களை ஒருங்கிணைக்கிறார். ஆங்கிலேயர்களை போர்முனையில் எதிர்கொள்ள தயாராகிறார் .
இதே சமயத்தில் திப்புசுல்தானை ஆங்கிலேயர்கள் கொன்று விடுகின்றனர். திப்பு சுல்தான் வசம் இருந்த ஆங்கிலேயரின் பெரிய படைகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுகின்றனர். அந்தப் படைகளைக் கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனை தோற்கடித்து விடலாம் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படியே தெற்கே வீரபாண்டிய கட்டபொம்மனின் இடமான பாளையங்கோட்டை நோக்கி ஆங்கிலேயரின் படைகள் புறப்படுகின்றது.
Golden standing statue of kattabomman.
ஆங்கிலேய படைகளை துணிந்து எதிர்கொண்ட வீரன்
அஞ்சா நெஞ்சம் கொண்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன். இருப்பினும் தம்முடைய மண்ணிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று கனவு கண்டு அதை நிஜமாக்க துடித்த வீர மகனுக்கு இந்தப் போர் ஒரு பெரிய சவாலாகவே அமைந்தது.
பாளையங்கோட்டையை நோக்கி எதிர் வந்த ஆங்கிலேய படையினரின் திடீர் தாக்குதலை கண்டு கட்டபொம்மன் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் சற்றும் துவளாது சளைக்காமல் தம் படையினரோடு ஆங்கிலேயரிடம் வீரத்தோடு போரிடுகிறார் கட்டபொம்மன்.
அப்பொழுது அங்கு நடந்த கடும் போரில் கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளையத்தேவன் கொல்லப்படுகிறார். சகோதரன் ஊமைத்துறை பிடிபடுகிறார். கடைசியாக கட்டபொம்மனும் மந்திரி சேனாதிபதி பிள்ளையும் தப்பித்துச் சென்று விடுகின்றனர்.
சேனாதிபதி பிள்ளையும் மற்ற தலைவர்களும் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகின்றனர். இதோடு கட்டபொம்மனோடு ஆங்கிலேயரை எதிர்த்த மற்ற பாளையக்காரர்களும் பிடிபடுகின்றனர்.
சூழ்ச்சியால் வந்த வினை
இந்த நிகழ்வு சற்றே கலக்கம் கொண்ட நிகழ்வாகத்தான் கட்டபொம்மனுக்கு அமைந்தது. அங்கிருந்து தப்பித்து புதுக்கோட்டை வருகிறார். மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து , நல்லவர் போல் நடித்து கடைசியாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறார்.
அக்டோபர் 16 - 1799 ஆம் ஆண்டு கட்டபொம்மன் கயத்தாருக்கு கொண்டுவரப்பட்டு, அனைத்து மக்களின் முன்னிலையிலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படுகிறார் . வீரபாண்டியனுடைய வீர வரலாற்றை ஒருநாள் உலகமே பேசப் போகின்றது என்பதை எடுத்துக்காட்டும் தினமாக அமைந்த நாள் அது..
என்ன வீரம்! சற்றும் மனம் தளராது நேர்க்கொண்ட பார்வை, வீர நடை, அழகு முகத்தில் கலையாத கம்பீரம் என தூக்கு மேடையில் வீரபாண்டிய கட்டபொம்மன் . அந்த வீர மகனைப் பார்த்து மக்கள் அனைவரும் கதறுகின்றனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை கண்டு நம் கண்களிலும் கண்ணீர் வர காரணமாய் அமைந்த, சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த வீரனாய் தூக்கு மேடையில் நிமிர்ந்த நெஞ்சோடு நிற்கின்றான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
சாவுக்கு சற்றும் அஞ்சாத கர்ஜிக்கும் சிங்கம் போன்று நிமிர்ந்து நிற்கின்றார். நான் மறைந்தாலும் இனிவரும் காலத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க நீங்கள் அனைவரும் நிச்சயம் இருப்பீர்கள் என்று மக்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு சொல்லி, ஆங்கிலேயரை பார்த்து சீற்றத்தோடு தூக்கு கயிற்றை தழுவுகின்றான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1799 இல் கயத்தாறில் 39 ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வீர வரலாறு பேசும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில் இவருக்கான நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
கட்டபொம்மன், ஊமைத்துரை, இவர்களின் காலங்களுக்கு பிறகு அவர்கள் வாழ்ந்து வந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் பழங்கால கோட்டையை ஒத்து அமைக்கப்பெற்ற புதிய கோட்டை இந்நாளளவும் கட்டபொம்மன் புகழ் பாடி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் இக்கோட்டை இந்திய சுற்றுலா துரையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. மேலும் பழைய கோட்டையின் எஞ்சி இருக்கும் அடிப்பகுதி அமைப்புகள் அகழ்வாராய்ச்சி துரையின் பராமரிப்பில் இருக்கிறது.
வரலாறு மெச்சும் மாவீரன்
இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சு வரை அசாதாரண துணிச்சலுடன் போராடியவர் நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் இந்திய வரலாற்றிலேயே ஒரு தனி அகராதியில் இடம் பிடித்தார் என்கின்றது வரலாறு. வீரத்திற்கே எடுத்துக்காட்டாய் இந்திய சுதந்திர வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு.
*******
"கட்டபொம்மன்" இங்கே வழிமாற்று. 1959 திரைப்படத்திற்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்) பார்க்கவும் . வீரபாண்டிய கட்டபொம்மன் (நூல்) வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கவும் . பிற பயன்பாடுகளுக்கு, கட்டபொம்மன் (தெளிவு நீக்கம்) பார்க்கவும் .
வீரபாண்டிய கட்டபொம்மன் [1] 18 ஆம் நூற்றாண்டின் பாளையக்காரர் மற்றும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி [2] [3] மன்னர் ஆவார் . அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்துடன் போரிட்டார், அவர் புதுக்கோட்டை பேரரசின் ஆட்சியாளர் விஜய ரகுநாத தொண்டைமான் உதவியுடன் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டார் , மேலும் 39 வயதில் அவர் 16 அக்டோபர் 1799 அன்று கயத்தாரில் தூக்கிலிடப்பட்டார் .
வீரபாண்டிய கட்டபொம்மன்
தென்காசி பாளையக்காரர்
வீரபாண்டிய கட்டபொம்மன் 1999 முத்திரையில்
ஆட்சி
அக்டோபர் 16, 1799 இல் முடிந்தது
பிறந்தது
ஜனவரி 1760 பாஞ்சாலங்குறிச்சி (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் , தமிழ்நாடு , இந்தியா )
இறந்தார்
16 அக்டோபர் 1799 (வயது 39)
கயத்தாறு , (தற்போது தூத்துக்குடி மாவட்டம் ,
தமிழ்நாடு , இந்தியா )
மனைவி
ஜக்கம்மாள் [ சான்று தேவை ]
அப்பா
ஜெகவீர கட்டபொம்மன் [ சான்று தேவை ]
அம்மா
ஆறுமுகத்தம்மாள் [ சான்று தேவை ]
உள்ளடக்கம்
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு
அவர்கள் முன்பு ஏகாதிபத்திய நீதிமன்றத்தில் சில முக்கியத்துவங்களைக் கொண்டிருந்தனர் மற்றும் வறண்ட சூழ்நிலையில் விவசாயம் செய்வதில் திறமையானவர்களாக இருந்திருக்கலாம், இருப்பினும் திருநெல்வேலியின் மற்ற குறிப்பிடத்தக்க சமூகமான மறவர்கள் - ஏற்கனவே மிகவும் சாதகமான பகுதிகளை ஆக்கிரமித்திருந்ததால், அவர்கள் செய்த இடத்தில் குடியேறுவதைத் தவிர வேறு வழியில்லை . கட்டபொம்மன் ஆடு மேய்க்கும் ராஜகம்பலம் நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர் , மற்ற இரண்டு வடுகன் சமூகத்தினர் கம்மவர்கள் மற்றும் ரெட்டிகள் . [5]
மரபு
தொகு
கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடம்
கட்டபொம்மன் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளில் ராபின் ஹூட் போன்ற உருவமாக கருதப்படுகிறார் என்றும், கும்மி வசன வடிவில் பல பாரம்பரிய கதை பாலாட்களின் பொருளாக இருக்கிறார் என்றும் வரலாற்றாசிரியர் சூசன் பேலி கூறுகிறார். கயத்தாரில் அவர் தூக்கிலிடப்பட்ட இடம் "சக்திவாய்ந்த உள்ளூர் ஆலயமாக" மாறியுள்ளது மற்றும் ஒரு காலத்தில் அங்கு ஆடுகள் பலியிடப்பட்டன. [6] தமிழ்நாடு அரசு கயத்தாற்றில் ஒரு நினைவகத்தை பராமரிக்கிறது மற்றும் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள பழைய கோட்டையின் எச்சங்கள் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றன . [7] [8] 2006 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் பாஞ்சாலங்குறிச்சியில் அவரது பிறந்தநாளில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. [9]
சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் திரைப்படம் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. [10]
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் இருநூறாவது ஆண்டு நினைவாக, இந்திய அரசு 16 அக்டோபர் 1999 அன்று அவரது நினைவாக அஞ்சல் தலையை வெளியிட்டது. [11] விஜயநாராயணத்தில் உள்ள இந்திய கடற்படை தகவல் தொடர்பு மையத்திற்கு ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்று பெயரிடப்பட்டது . [12]
******
அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெள ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர்.
முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்கவில்லை.
கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.
இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை.
கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல்ல.
மூன்றாவது குற்றச்சாட்டு : தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளையை எங்களிடம் ஒப்படைக்கவில்லை.
கட்டபொம்மன்: நெற்களஞ்சியத்தைக் கொள்ளை அடித்தது தவறுதான். அபராதத் தொகை தருவதாகச் சொன்னேன். அடைக்கலமாக என்னிடம் வந்தவரை எதிரிகளிடம் ஒப்படைப்பது கட்டபொம்மனுக்குச் சரிப்பட்டு வராது.
நான்காவது குற்றச்சாட்டு: சிவகிரி பாளையத்திற்கு உள்ளே போய்க் கலகம் செய்தீர்.
கட்டபொம்மன்: அங்கே ஏற்பட்ட கலகத்தை அடக்க வேண்டும் என்று பாளையக்காரர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால், நான் அங்கே போனேன்.
ஐந்தாவது குற்றச்சாட்டு: கும்பி
சென்னை: தென் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி சீமையில் கி.பி.1760-ம் ஆண்டு ஜனவரி 3-ல் ஜக வீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஊமைத்துரை என்ற தனபால்குமாரசாமி, துரைசிங்கம் ஆகிய சகோதரர்களும் தங்கையர் இருவரும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பிறந்தவர்கள்.
பாஞ்சாலங்குறிச்சியில் 47-வது மன்னராக வீரபாண்டிய கட்டபொம்மன் அரியனை ஏறினார். அப்போது இந்த நிலம் பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்கு உட்பட்டதாக 96 கிராமங்கள் இருந்தன.
ஆங்கிலேயர் ஊடுருவலுக்கு முன்னதாக ஆர்க்காடு நவாபிடம் பாளையக்காரர்கள் வரி செலுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தர் ஆர்க்காடு நவாப். இதற்கு எதிராக பாளையக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வீரன் அழகுமுத்துகோன், புலித்தேவர் பின்னர் கான்சாகிப் மருதநாயகம் உள்ளிட்டோர் ஆங்கிலேயருக்கு எதிராக தொடக்க காலங்களில் யுத்தம் நடத்தி வீர மரணம் அடைந்தனர்.
A life history of Veerapandiya Kattabomman
2-வது படை வரிசையில்தான் ராணி வேலுநாச்சியார், அவர்தம் தளபதியார் மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாட்சி கோபால் நாயக்கர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். ஆங்கிலேயருக்கு எதிராக எத்தனையோ வீரம் செறிந்த யுத்தங்களை வட இந்திய விடுதலை கிளர்ச்சிகளுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே நிகழ்த்தியது தமிழர் நிலம்.
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய தளபதி ஆலன்துரையிடம் வரி கட்ட மறுத்தார். இதன்பின்னர் ஜாக்சன்துரையை களமிறக்கியது ஆங்கிலேயப் படை. ஆரம்பத்தில் ஜாக்சன் துரையுடன் நட்புறவைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடினார். அதனால் ஜாக்சன் துரை அழைத்த இடத்துக்கெல்லாம் அமைதியாக சென்றார். கடைசியாக ராமநாதபுரம் அரண்மையில் ஜாக்சன் துரையை வீரபாண்டியன் தமது சகோதரர்களுடன் சந்தித்தார். ஆனால் ஜாக்சன் துரையோ, வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்ய உத்தரவிட இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சகோதரர்களுடன் தப்பினார்.
இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள்!இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள்!
இதன் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பானர்மேன் ஆங்கிலேய படை யுத்தம் நடத்தியது. இந்த யுத்தத்தில் ஆங்கிலேய தளபதிகள் கர்னல் காலின்ஸ், டக்ளஸ், டார்மிக்ஸ், பிளாக்கி, கன்னர் பின்னி என பலரது தலைகளும் உருண்டன. இவர்களில் சிலரது கல்லறைகள் இன்றும் ஒட்டப்பிடாரம் அருகே வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. இந்த யுத்த காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி தானதிபதி ஆங்கிலேயரிடம் சிக்கி தூக்கிலிடப்பட்டார். ஆனாலும் வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரது சகோதரர்களும் அடைக்கலம் தேடி தமிழ் குறுநில மன்னர்களின் அரண்மனைகளை தட்டினர். அப்படியாக திறந்த கதவு ஒன்று துரோகத்தை நிகழ்த்தியது.. புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அரண்மனையில் ஆங்கிலேயர் படையால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கி.பி. 1799-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பின்னர் அவரது சகோதரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் மாவீரர்கள் மருதிருவரும் அவர்தம் சாம்ராஜ்ஜியமும் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டதும் வரலாறு!
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இருந்த இடத்தில் அவருக்கு கம்பீரமான சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி சொந்த செலவில் சிலை வைத்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தவர் கட்டபொம்மனுக்கு திரைவடிவில் உயிர் கொடுத்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
****
262 வருஷங்களுக்கு முன்னாடி, இதே நாள்ல நிகழ்ந்த ஒரு பிறப்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியதுன்னா அது மிகையில்ல. தூத்துக்குடி மாவட்டத்தில இருக்க பாஞ்சாலங்குறிச்சியில 1760 ஜனவரி 3-ம் தேதி ஜெகவீரன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தது அந்தக் குழந்தை. குழந்தைக்கு வீரபாண்டியன்னு பேர் வச்சாங்க. குடும்பப் பெயரான கட்டபொம்மன்னும் சேர்ந்து, பின்னாளில் வீரத்துக்கு அடையாளமாக வீரபாண்டியக் கட்டபொம்மன் என்றழைக்கப்பட்டது அந்தக் குழந்தை.
கட்டபொம்மன்
சுதந்திரப் போராட்டம்னா நினைவுக்கு வர்ற முதல்பெயர் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சென்னையில் கால்பதித்த ஆங்கிலேயர் தென்னிந்திய மண் பரப்புமுழுவதையும் ஆட்கொள்ளத் துடிச்சபோது இந்த மண்ணுக்கு அரணாக நின்னு துணிச்சலா எதிர்த்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் கொடுத்த துணிவால் தென்னிந்தியாவை நிர்வகித்த பல பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்தாங்க. அதனால் வெள்ளையர்களின் இலக்கானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
Also Read
பத்ம விருதுகளின் கதை உங்களுக்குத் தெரியுமா?! | ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 2
பத்ம விருதுகளின் கதை உங்களுக்குத் தெரியுமா?! | ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 2
கட்டபொம்மன் மரபுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கு. இப்போது ஒட்டப்பிடாரம்னு அழைக்கப்படுற அழகிய வீரபாண்டியபுரத்தை ஆண்ட ஜெகவீரபாண்டிய நாயக்கரின் அரசவைல கெட்டிப்பொம்முங்கிறவர் இடம்பெற்றிருந்தார். ஜெகவீர பாண்டியனின் நம்பிக்கையைப் பெற்ற கெட்டிபொம்மு ஜெகவீரபாண்டியனுக்குப் பிறகு மன்னராக நியமிக்கப்பட்டார். அவர் மரபில் வந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரை மக்கள் பொம்மு நாயக்கர்ன்னு அழைச்சாங்க.
கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம்னு இரண்டு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணுன்னு இரண்டு சகோதரிகளும் இருந்தாங்க. வீரசக்கம்மாள்ங்கிறவங்களை கட்டபொம்மன் திருமணம் செய்துகிட்டார்.
கட்டபொம்மனுக்கு முப்பது வயசு வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன், பாளையக்காரராக இருந்துவந்ததால, தந்தைக்கு உதவியாக இருந்தார். பிறகு, பிப்ரவரி 2-ம் தேதி, 1790-ம் வருஷத்துல, 47-வது பாளையக்காரராக அரியணை ஏறினார் கட்டபொம்மன். 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாள்கள் அரசுப் பொறுப்பிலிருந்த கட்டபொம்மனுக்கு வாரிசுகள் இல்லை.
திருநெல்வேலியை சுத்தி இருக்க பாளையக்காரர்கள் எல்லார்கிட்டயும் வரி வசூலிக்கணும்னு எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாக கலெக்டர்களை நியமிச்சாங்க. இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்துவராம, எதிர்த்து நின்னாங்க. அவங்களை ஒழிக்க நினைச்ச ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களை ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரிகளாக்கும் வகையில பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டாங்க. ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தத் தொடங்க, அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டன. எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்தத்தோடு கடுமையான, தண்டனையும் வழங்கப்பட்டது.
கி.பி. 1797-ல் முதன்முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று தெறிச்சு ஓடினார். ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைச்சார். கட்டபொம்மனை அவமானப்படுத்தனும்னு கங்கணம் கட்டிகொண்டு திரிந்தார் ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அனைத்தையும் பந்தாடினார். வரியை கேட்டு வந்த துரையிடம் 'மாமனா? மச்சானா?' என வீர முழக்கமிட்டார் கட்டபொம்மன்.
அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டான். மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளின்னு பழி சுமத்திச்சு ஆங்கிலேயே நிர்வாகம். கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுக்கவும் இல்ல, உயிர்ப்பிச்சை கேட்கவும் இல்லை. கம்பீரத்தோடு, “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளைத் தோல்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்”ன்னு வீர முழக்கமிட்டு தூக்குமேடையேறினார்.
தூக்குமேடைலயும், அவரது பேச்சில வீரமும், தைரியமும் நிறைஞ்சிருந்துச்சு. இது சுத்தி நின்ன அனைவரின் உள்ளத்திலும் பெருமையை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான் செத்திருக்கலாம்"ன்னு கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார். தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார். அக்டோபர் 19-ம் தேதி, 1799-ம் ஆண்டு கயத்தாறு கோட்டையிலே ஒரு புளிய மரத்தில, 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறுல அவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டிருக்கு. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடிய கட்டபொம்மன், நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.
******
வீரபாண்டிய கட்டபொம்மன். பெயரை கேட்டாலே வீரவரலாறும், அந்த திரைப்பட காட்சியும் மனதில் விரிகிறதா...? ‘‘வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது... உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா...? மானங்கெட்டவனே... யாரைக்கேட்கிறாய் வரி... எவரை கேட்கிறாய் வட்டி? திரைப்படத்துக்காக எழுதப்பட்டாலும், ஆங்கிலேயருக்கு எதிராக நெஞ்சில் வீரத்துடன், துணிவுடன் போராடியவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றுதான் அவர் தூக்கலிடப்பட்ட நாள். அவரைப்பற்றிய வீர வரலாறை பார்ப்போம்.
1760, ஜன.3ம் தேதி திக்குவிசய கட்டபொம்மு, ஆறுமுகத்தம்மாளுக்கு மகனாக பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தில் பிறந்தவர். விஜயநகர ஆட்சிக்காலத்தின்போது ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு கட்டபொம்மனின் மூதாதையர் குடிவந்தனர். வீரபாண்டியபுரத்தில் ஜெகவீர பாண்டியன் ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரசவையில் ‘கெட்டி பொம்மு’ என்பவர் அமைச்சராக பணியாற்றினார். கெட்டி பொம்மு என்றால் வீரமிக்கவர் என்று அர்த்தம்.
ஜெகவீர பாண்டியனின் இறப்பிற்கு பிறகு ‘கெட்டி பொம்மு’ பாளையக்காரராக பொறுப்பேற்றார். பின்னர் நாளடைவில் வீரபாண்டிய கட்டபொம்மன் என அனைவராலும் அழைக்கப்பட்டார். இவரது மனைவி வீரசக்கம்மாள்.
கட்டபொம்மன் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர். இந்த கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக்கொள்ள, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க விரும்பினர். இதற்காக கலெக்டர்களையும் நியமித்தனர்.
அப்போது நெல்லை மாவட்டத்தில் வரி வசூலிக்கும் பொறுப்பை மாக்ஸ்வெல் என்ற தளபதி பெற்றிருந்தார். ஆனால் அவரால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்து வரியை வரி வசூலிக்க முடியவில்லை. துணிந்து ஆங்கிலேயே எதிர்த்து வந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். பாளையக்காரராக முதன்முதலில் கப்பம் கட்ட மறுத்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டுமே. இதனைத்தொடர்ந்து மற்ற பாளையக்காரர்களும் வரி கட்ட மறுத்து வந்தனர்.
இதனால் ஆங்கிலேயரின் கோபம் கட்டபொம்மன் மீது முழுதாக திரும்பியது.
கி.பி 1797ம் ஆண்டு முதன்முதலாக தளபதி ஆலன்துரை தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுத்தனர். இந்த போரில் வீரபாண்டியனிடம் தோற்று ஆலன் துரை ஓடினார். இந்த போருக்குப் பிறகு மாவட்ட கலெக்டரான ஜாக்சன் துரை, கட்டபொம்மனை சந்திக்க அழைப்பு விடுத்தார். இருவரும் 1798ல் ராமநாதபுரத்தில் சந்தித்தனர் அப்போது ஜாக்சன் துரை, சூழ்ச்சி செய்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய நினைத்தார். ஆனால் கட்டபொம்மன் தப்பித்தார்.
மீண்டும் செப்.5, 1799ல் பானர்மென் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையில் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை கைப்பற்ற பயங்கர போர் நடந்தது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இறுதியில் கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேற, பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து 1799, அக்.1ம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானிடம் கட்டபொம்மன் தஞ்சம் புகுந்தார். ஆங்கிலேயருக்கு பயந்து புதுக்கோட்டை மன்னன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் ஆங்கிலேய நிர்வாகிகள் அவரை கைது செய்தனர்.
கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன், தனது 39வது வயதில், 1799, அக்.16ம் தேதி, ஆங்கிலேய தளபதி பேனர்மேன் உத்தரவின்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேயருக்கான எதிராக இவர் வீரமரணம் அடைந்தாலும், அவரது புகழ் உலகளாகவிய புகழ் பெற்றதை யாருமே மறுக்க முடியாது.
****
ஆங்கிலேயர்கள் விடுதலைப் போராட்டம் கட்டபொம்மன்
1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.
இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.
கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.
அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.
அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.
கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.
தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.
இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.
நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.
தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன
உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.
போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.
ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.
கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.
ஆனால், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?
என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார் (puratchivendum1@gmail.com)
SHARESaveWhatsapp
முந்தையஅடுத்த
Comments
0#1 mohan 2009-09-07 15:25
priyanikkum, quatorikku attimai pattu erukkom
Quote | Report to administrator
0#2 mani 2009-09-08 06:28
for full article please read
PUTHIYA KALACHAARAM - 2006 NOVEMBER
Quote | Report to administrator
+1#3 Dhayal 2009-12-09 08:14
More info regarding his article
groups.google.com/.../...
Quote | Report to administrator
0#4 Thaniyan 2011-04-25 19:06
“கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன்.
“பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணிய ம் தமது நூலின் பக். 165 ல்.
இதனை “கோலார்பட்டியில ிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியு ள்ள பகுதியால் அறியலாம்.
இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனா ரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக் காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.
நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிட ம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன்.
ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்!
வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல?
வீரமரணமா?
“பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.
வணங்காமுடி:
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர்.
வந்தான் பானர்மேன்:
பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான ் கட்டபொம்ம நாயக்கன்.
தமது தம்பியின் திருமணத்திற்காக வும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தை க் கொள்ளையடித்தார் கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையு ம் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள.
இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான்.
பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான்.
ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன்.
ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான்.
இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிட ம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீ ரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டு ம்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்க ாரர் கும்மி:
வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க ்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது . இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம்.
Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112)
இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார்.
“புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையான ின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்க ாரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.”
“நயமாகப் பேசி விருந்துபச்சாரங ்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்ற ு ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
“மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையின ர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…?
இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!)
எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம்.
தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.
Quote | Report to administrator
0#5 captain 2012-04-14 04:01
கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன். “பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணிய ம் தமது நூலின் பக். 165 ல். இதனை “கோலார்பட்டியில ிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியு ள்ள பகுதியால் அறியலாம். இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனா ரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார ். ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக் காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிட ம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன். ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்! வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல? வீரமரணமா? “பாஞ்சாலங்குறிச ்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டி யுள்ளார். வணங்காமுடி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். வந்தான் பானர்மேன்: பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான ் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காக வும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தை க் கொள்ளையடித்தார் கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையு ம் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள . இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான். பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான். ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான். இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிட ம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீ ரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டு ம்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்க ாரர் கும்மி: வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க ்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது . இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம். ஊன்டெர் ஈன்ச்ட்ருச்டிஒன ் ஒஃப் ம்ர்.ளொஉசிங்டொன ், சொல்லெச்டொர் ஒஃப் டின்னெவெல்ல்ய், தெ கட்டபொம்மன் சப்டுரெட் ப்ய் தொன்டமன் இன் ஸதிரபதி ஃபொரெச்ட் ஒன் 23/09/1799. (ஹிச்டொர்ய் ஒஃப் டென்னெவெல்ல்ய் – ப்ய் ப்.சொல்ட்நெல்ல் ப்.112) இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார். “புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையான ின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்க ாரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” “நயமாகப் பேசி விருந்துபச்சாரங ்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்ற ு ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ள ார். வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள் ளார். தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . “மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ள ார். இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையின ர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!) எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம். தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.
******
அன்னிய படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டு, வீரம் மிக்க பல மாவீரர்கள் தனக்காகப் போரிட்டு, தங்கள் இன்னுயிரை ஈந்ததால், நம் தாய்நாடு "வீரபூமி" என்று அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் மதுரை முதல் திருநெல்வேலி வரை பரந்து விரிந்து கிடக்கும் பாண்டியநாடு, குறிப்பாகப் பலகாரப் போர்களுக்குப் புகழ் பெற்றது. உண்மையில் “வீரம்விளைந்த நிலம்” (வீரம் விளைந்த நிலம்) ஆகும். மதுரையின் முந்தைய நாயக்கர் ஆட்சியாளர்களின் கட்டளைகள், அவர்களை நிர்வகிக்கவும், வரி வசூலிக்கவும், படைகளின் பட்டாலியனைப் பராமரிக்கவும் தங்கள் வெவ்வேறு பிரிவுகளின் (பாளையங்கள்) மண்டலத் தலைவர்களாக நியமித்தனர். சாலிகுளம் காடுகளுக்கு வேட்டையாடச் சென்றபோது, கட்டபொம்மன் ஒருவர் முயல் வேட்டையாடுவதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
Powered By
VDO.AI
Video Player is loading.This is a modal window.The media could not be loaded, either because the server or network failed or because the format is not supported.
பதினெட்டாம் நூற்றாண்டில், நாயக்கர்களிடமிருந்து மதுரை சாம்ராஜ்யம் ஆற்காடு நவாபின் கீழ் வந்த பிறகு, புதிய முஸ்லீம் ஆட்சியாளர்களை பாலிகர்கள் அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். நவாப் தனக்கென பெரிய அரண்மனைகளைக் கட்டுவதில் ஈடுபட்டிருந்ததால், பலகாரர்களிடம் பணம் வசூலிக்க முடியாமல் திவாலானார். நவாப் பின்னர் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து பெரும் தொகையை கடன் வாங்க வேண்டியிருந்தது, அதற்கு பதிலாக அவர் தெற்கு பிராந்தியத்திலிருந்து ஆங்கிலேயர்களுக்கு வரி வசூலிக்கும் உரிமையை வழங்கினார், இது முழு பிராந்தியத்தின் செல்வத்தையும் கொள்ளையடிக்க உதவியது.
வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவருடன் கூட்டணி அமைத்த சிலரைத் தவிர பல பலகாரர்கள் அவர்களிடம் சரணடைந்தனர். நிறுவனம் பல முயற்சிகள் செய்த போதிலும், அவர் நீண்ட காலமாக கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துரையை சந்திக்க மறுத்துவிட்டார். இறுதியாக அவர் ராமநாதபுரத்தில் அவரைச் சந்தித்தபோது, கூட்டம் வன்முறையாக மாறியது, கிளார்க் என்ற பிரிட்டிஷ் துணைத் தளபதி மோதலில் கொல்லப்பட்டார். கட்டபொம்மனும் அவரது ஆட்களும் துணிச்சலுடன் அங்கிருந்து வெளியேறினர், ஆனால் அவரது செயலாளர் தனபதி பிள்ளை கிழக்கிந்திய கம்பெனியால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர், விசாரணைக் கமிஷன் ஜாக்சன் மீது பழியைச் சரிசெய்து, அவரைப் பதவியில் இருந்து நீக்கியது, ஏனெனில் கட்டபொம்மனுடனான சண்டை மற்ற பலகாரர்களையும் கிளர்ச்சி செய்து முழு பிராந்தியத்தையும் கைப்பற்றுவதற்கான அவர்களின் திட்டங்களை சிதைத்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர்.
திருநெல்வேலியின் புதிய ஆட்சியர் லூயிங்ஸ்டன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மீண்டும் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு கடிதம் எழுதினார். கட்டபொம்மன், கடுமையான வறட்சி நிலைமைகளை காரணம் காட்டி, பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, ராமநாதபுரத்தில் தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் கோரினார். கலெக்டரை சந்திக்கவோ அல்லது வரி செலுத்தவோ கட்டபொம்மன் தொடர்ந்து மறுத்ததால், கட்டபொம்மனுக்கு எதிராக இராணுவத் தாக்குதலை பரிந்துரைக்கும்படி கட்டாயப்படுத்தினார். கட்டபொம்மனின் பகைமை கொண்ட அண்டை வீட்டாரான எட்டயபுரத்தைச் சேர்ந்த பலகாரர், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரதேச தகராறுகளுக்காக அவரைத் தாக்கும்படி ஆட்சியர் தூண்டினார்.
மேஜர் பேனர்மேனின் கீழ், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் நான்கு நுழைவாயில்களிலும் ராணுவம் நின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது படைகள் துணிச்சலுடன் அவர்களுடன் போரிட்டு, அவர்களின் தளபதி லெப்டினன்ட் காலின்ஸை தெற்கு நுழைவாயிலில் கொன்றனர். ஆங்கிலேயர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர், மேலும் வலுவூட்டல்களுக்கு, குறிப்பாக பீரங்கிகளுக்கு உத்தரவிட்டனர். பீரங்கிகளின் சரமாரி தாக்குதலைத் தன் கோட்டை தாங்காது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் அன்று இரவே கோட்டையை விட்டு வெளியேறினான். ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் தலைக்கு விலை நிர்ணயம் செய்து, தனபதி பிள்ளை மற்றும் 16 பேரை தூக்கிலிட்டனர். மூங்கில் கம்பத்தில் வீற்றிருந்த பிள்ளையின் தலை, போராளிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் பாஞ்சாலங்குறிச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் ஓடிவந்து புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் அடைந்து, மீண்டும் ஆங்கிலேயர்களைத் தாக்க மற்றவர்களுடன் தன்னைத்தானே மீண்டும் ஒருங்கிணைக்க திட்டமிட்டார். துரோகிகளால் வழங்கப்பட்ட பல வழிகாட்டுதல்களின் மூலம், ஆங்கிலேயர்கள் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்யும்படி தங்கள் கைக்கூலியான புதுக்கோட்டை ராஜாவுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அவர் கைப்பற்றப்பட்டார் மற்றும் மூன்று வார விசாரணைக்குப் பிறகு, தேசத்துரோகத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் அவரை விடுவிக்க மன்னிப்பு கோரினார். துணிச்சலான கட்டபொம்மன் மறுத்து, "கோழைகளே உனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்" என்றார். பின்னர் அவர் அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் (திருநெல்வேலிக்கு அருகில்) ஒரு புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக தூக்கிலிடப்பட்டார். அவர்களால் ஒரு நேரடி சண்டையில் அவரை ஒருபோதும் தோற்கடிக்க முடியவில்லை, ஆனால் அவர் துரோகிகளால் அவர்களின் வஞ்சகத்தால் செய்யப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது மற்றும் அனைத்து செல்வங்களும் ஆங்கிலேயர்களால் சூறையாடப்பட்டது. அவர்கள் அந்த நிலத்தைப் பார்த்து மிகவும் பயந்தார்கள், அதன் மகன்களுக்கு மண் உருவாக்கக்கூடிய தைரியம், சில ஆண்டுகளுக்குப் பிறகு, கோட்டை இருந்த இடத்தை உழுது, ஆமணக்கு எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றால் விதைக்கப்பட்டது, அதனால் அது மீண்டும் குடியேறக்கூடாது.
1917 ஆம் ஆண்டு தனது Tinnevelly Gazetteer இல், HR பேட், கயத்தாரில், "கடந்த நூறு ஆண்டுகளில் வழிப்போக்கர்களால் திரட்டப்பட்ட காணிக்கைகளைக் குறிக்கும் அனைத்து அளவிலான கற்களின் ஒரு பெரிய குவியல் இருப்பதைக் குறிப்பிடுகிறார். பல்லினத் தலைவர்களின் வீரத்தை நினைவுபடுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்றுவரை தமிழகத்தில் உயிர்ப்புடன் உள்ளன.
ட்ரிவியா: திருநெல்வேலி அருகே உள்ள இந்திய கடற்படையின் இந்தியாவின் முதன்மையான தகவல் தொடர்பு மையத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாக ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்று பெயரிடப்பட்டது.
******
வரலாற்றின் பக்கங்களில் இருந்து அவரது பெயரை துடைக்க ஆங்கிலேயர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். இந்த சுதந்திரப் போராட்ட வீரரின் மறந்த பெருமையை பட்டிமன்றங்களும் புத்தகங்களும் எப்படி மீட்டெடுத்தன என்பது இங்கே.
150 ஆண்டுகால மறதி என்பது கிட்டத்தட்ட இடைக்கால நிலைமைகளில் நீண்ட காலமாகும், குறிப்பாக ஒரு ராஜா தூக்கிலிடப்பட்ட பிறகு, அவரது உறவினர்கள் கொல்லப்பட்டனர், கோட்டை இடிக்கப்பட்டனர், நிலத்தை உழுது ஆமணக்கு நட்டனர் அல்லது அதை பாழாக்குவதற்கு உப்பு தூவப்பட்ட பிறகு. மேலும், வருவாய் பதிவேடுகளில் இருந்து அவரது ஊரின் பெயர் நீக்கப்பட்டதுடன், அவரது பெயரை தேசத்துரோகத்திற்கு சமமாக குறிப்பிடுவது, வெறும் காயத்தின் மீது அமிலத்தை (உப்பு மட்டுமல்ல) ஊற்றுவது போன்றது.
கிழக்கிந்திய நிறுவனம் மேற்கூறிய அனைத்தையும் செய்தது, இன்னும், வீரபாண்டிய கட்டபொம்மு 150 ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திரக் கருத்தைப் புரிந்துகொண்டு மதிப்பவர்கள் மத்தியில் தனது பெருமையைப் பெற கோலோச்சினார்.
கட்டபொம்முவின் துணிச்சலும், சுதந்திரத்திற்கான அவரது நாட்டமும் சந்தேகத்திற்கு இடமில்லை. இருப்பினும், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அந்தக் காலகட்டத்தின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பார்ப்பது முக்கியம். குறிப்பாக, ஆங்கிலேயர்கள் அவரை மக்கள் மறக்கச் செய்ய எந்த நிலைக்குச் சென்றார்கள் என்பதும், தமிழ்ப் பகுதியில் இருந்து அவர் மிகப் பெரிய சுதந்திரப் போராட்ட வீரராகக் கருதப்படுவதும் நாம் அறிந்ததே.
"ஒரு முரட்டுத்தனமான போர்வீரர்களின் இனம், ஆயுதங்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பழக்கமானது," மறைந்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ், பதினெட்டாம் நூற்றாண்டில் நாட்டின் இந்தப் பகுதியை ஆண்ட 'தெற்குப் பொலிகர்களை' விவரித்தார். பொலிகர்கள் பாளையங்கள் என்று அழைக்கப்படும் தோட்டங்களை வைத்திருப்பவர்கள், அதாவது "ஆயுத முகாம்" என்று அர்த்தம். அவர்கள் மதுரையில் உள்ள கோட்டையின் 72 கோட்டைகளின் பாதுகாவலர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் உண்மையில், நிலம் சிறந்த வருவாய் நிர்வாகத்திற்காக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த முறை மதுரை சுல்தானகத்தை அழித்தபோது விஜயநகரப் பேரரசு மற்றும் அவர்களுக்குப் பின் வந்த நாயக்கர்களால் பின்பற்றப்பட்டது. இந்த 72 அரை நிலப்பிரபுத்துவப் பாளையம்களில் சில, ஒவ்வொன்றும் ஒரு பாளையக்காரரால் ஆளப்பட்டது, மிகச் சிறியவை. அவற்றின் அளவுகள் ஒவ்வொன்றும் சுமார் 33 கிராமங்கள் என்று ஒரு கணக்கு உள்ளது.
இராணுவ சேவைகளை வழங்குவதைத் தவிர, ஒரு பொலிகர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வேண்டியிருந்தது. இவற்றுக்கு ஈடாக, பொலிகர் தனது தோட்டத்தில் வசிப்பவர்களிடமிருந்து வரி வசூலிக்கவும், சிவில் மற்றும் குற்றவியல் அதிகார வரம்பைப் பயன்படுத்தவும் உரிமை பெற்றார்.
காவேரிக்கு தெற்கே உள்ள கர்நாடகாவின் பெரும் பகுதி, பொலிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாயக்கர் காலம் முழுவதும் பொலிகர் ராஜாக்களின் அதிகாரங்கள் தொடர்ந்து அதிகரித்தன, பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், ராமநாடு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை போன்ற சில மேலாதிக்க இளவரசர்கள் மெய்நிகர் ஆட்சியாளர்களாக மாறினர். சிறிய பாளையங்களும் இருந்தன, அவற்றில் பாஞ்சாலங்குறிச்சியும் ஒன்று.
அவர்களின் கோட்டைகளின் அரண்கள், சேற்றால் ஆனது மற்றும் தென் மாவட்டங்களின் தண்டிக்கும் சூரிய ஒளியில் சுடப்பட்டது, பிரிட்டிஷ் பீரங்கிகளின் கடுமையான சோதனைகளுக்கு அப்பாற்பட்டது.
நாயக்கர்களிடமிருந்து பாளையக்காரர் முறையைப் பெற்ற ஆற்காடு நவாப், பிரிட்டிஷ் கடன் வழங்குபவர்களிடமிருந்து அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்ற ஒரு போஹேமியன் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார். பெரும் கடனில், நவாப் தனது பொலிகர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பகுதிகள் உட்பட வருவாய் நிறைந்த தின்னவேலி மாவட்டத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாளையக்காரர்கள் பிரிட்டிஷ் லட்சியங்களுக்கு இணங்கவில்லை மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தியாக உருவெடுத்தனர். எவ்வாறாயினும், ஆங்கிலேயர்கள் தங்கள் நலன்களுக்குப் பாதகமான ஒரு இணை அதிகாரம் இருப்பதைக் கண்டனர்.
நெற்கட்டும்செவலை ஆண்ட பொலிகர் புலித்தேவன், 1857 சிப்பாய் கலகத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்களில் ஒருவராக குறிப்பிடத்தக்கவர். துரதிர்ஷ்டவசமாக, காலனித்துவவாதிகளுக்கு எதிரான போரில் அவர் அழிக்கப்பட்டார். பின்னர், ஒரு உள்ளூர் புராணக்கதை வெளிவந்தது, அவர் ஒரு கோவிலில் மர்மமான முறையில் "மறைந்துவிட்டார்" என்ற நம்பிக்கையைத் தூண்டியது. வரலாற்றில் ஏற்பட்ட இந்த திருப்பத்தால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அதன்பிறகு தங்கள் எதிரிகளை பகிரங்கமாக தூக்கிலிட முயன்றனர்.
கட்டபொம்முவின் தோற்றம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களுடன் ஓரளவு சமாதானத்தை அனுபவித்தனர். அப்போதுதான் பாஞ்சாலங்குறிச்சியின் பொலிகர் கட்டபொம்முவால் தனது நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை. அவரது காணிக்கை நிலுவைத் தொகை 3,310 பகோடாக்கள் ஆகும், அதில் 1,080 பகோடாக்கள் மட்டுமே அரசிற்கு திருப்பிச் செலுத்தப்பட்டன. 18 ஆகஸ்டு 1798 அன்று, திருச்சி கலெக்டர் ஜாக்சன், கட்டபொம்முவை ராம்நாட்டில் இரண்டு வாரங்களில் சந்திக்கும்படி உத்தரவு அனுப்பினார்.
கட்டபொம்மு சரியான நேரத்தில் வந்தபோது, ஜாக்சன் மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டிருப்பதைக் கண்டார். இந்த அவமானத்தைப் பொருட்படுத்தாமல், கட்டபொம்மு ஜாக்சனின் பாதையில் 400 மைல்கள் பயணம் செய்து 23 நாட்கள் ஜாக்சனைப் பின்தொடர்ந்து மீண்டும் ராம்நாட்டை அடைந்தார்.
கட்டபொம்மு, அரச பதவியில் இருந்தும், மூன்று மணி நேரம் ஆட்சியர் முன் நிற்க வைக்கப்பட்டார். ஜாக்சன் கட்டபொம்முவை மதராஸில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து சில அனுமதிகளைப் பெறும் வரை ராம்நாட்டில் இருக்குமாறு ஜாக்சன் அறிவுறுத்தியபோது, பொலிகர் அவர் கைது செய்யப்படுகிறார் என்று கருதி, அதற்கு இடையூறு செய்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் கிளார்க் என்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். கட்டபொம்முவின் வக்கீல் (சட்ட ஆலோசகர்) நிலைமைக்கு மெதுவாக எதிர்வினையாற்றினார் மற்றும் தப்பிக்கும் முயற்சியில் பின்தங்கினார். ஊமத்துரை (கட்டபொம்முவின் காதுகேளாத மற்றும் ஊமை சகோதரர்) பொலிகரை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இதற்குப் பிறகு, கட்டபொம்மு பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அவருக்கு நெல்லையில் ஒரு கம்பெனி லாபிஸ்ட் இருந்தார். அதைத் தொடர்ந்து, அவர் மோசமான சாகசங்களுக்கு எதிராக அறிவுறுத்தப்பட்டார் மற்றும் ஆளுநர் எட்வர்ட் கிளைவுக்கு கடிதங்களை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார், மகுடத்திற்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறினார்.
கட்டபொம்மு ராம்நாட்டில் நடந்த சண்டைக்கு "ஜாக்சனின் வெறித்தனம்" காரணம் என்று கூறி, அவரது வக்கீலை விடுவிக்கக் கோரினார். மைசூர் போர்கள் அதன் கவனத்தை ஆக்கிரமித்திருந்ததால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் விரும்பத்தகாத அபாயத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எட்வர்ட் கிளைவ் பின்னர் கட்டபொம்முவை நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க அழைத்தார். ராம்நாட் சம்பவம் மற்றும் சந்தேகத்திற்குரிய அனைத்து காரணங்களையும் அகற்ற கிரீடத்தின் நோக்கம் குறித்து நியாயமான விசாரணைக்கு உறுதியளித்த அவர், ஜாக்சனை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து, வக்கீலை சிறையில் இருந்து விடுவித்தார்.
கட்டபொம்மு விசாரணைக் குழுவின் முன் ஆஜரானார், இது ராம்நாட்டில் நடந்த மோதலில் உச்சக்கட்ட சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்ததில், கட்டபொம்மு உண்மையிலேயே அவமானப்படுத்தப்பட்டதாக முடிவு செய்தார். ஜாக்சன் கண்டிக்கப்பட்டு கட்டபொம்மு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் பாஞ்சாலங்குறிச்சி கலவரத்தில் கொல்லப்பட்ட கிளார்க்கின் சம்பளத்திற்கு இணையான தொகையை அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
பிரிட்டிஷ் க்ரட்ஜ்
ஆனால் ஆங்கிலேயர்கள் அமைதியாக இருக்கவில்லை. பழிவாங்கும் விதமாக, கட்டபொம்மு மீது வெறுப்பு கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டதும், அவர்களின் முழு வளமும் விடுவிக்கப்பட்டதும், அவர்கள் பாளையங்கள் மீது துப்பாக்கிகளைத் திருப்பினார்கள்.
இம்முறை, கம்பனியின் மேஜர் பேனர்மேன், கட்டபொம்முவுக்கு, அவருடைய நிலுவைத் தொகை குறித்து “அவரைச் சந்திக்க வேண்டும்” என்று கடிதம் எழுதினார். கட்டபொம்மு தனக்கு நல்ல தேதி கிடைக்கவில்லை என்று கூறி கூட்டத்தைத் தவிர்க்கும் போது, ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தங்கள் முழு பலத்துடன் மூடிவிட்டனர்.
ஆறு பவுண்டர் துப்பாக்கிகள் தெற்கு வாயிலைத் திறக்கும்படி கட்டளையிடப்பட்டது, மேலும் கம்பெனி மற்றும் எட்டயபுரத்தின் கூட்டுப் பிரிவினர் கோட்டையின் வடக்கு முகத்தைத் தாக்க முடிவு செய்தனர்.
ஊமத்துரை இயக்கிய பொலிகர்களின் துருப்புக்கள் உறுதியுடன் தங்கள் நிலத்தை நிலைநிறுத்தி, விரோதப் பத்திகளை எறிந்தனர். பெரும் இழப்புகளைச் சந்தித்து, விரக்தியில் மூழ்கிய நிலையில், கட்டபொம்மு அணி பாளையங்கோட்டையிலிருந்து வலுவூட்டலுக்கு உத்தரவிட்டது. ஆனால் கோட்டை பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்த கட்டபொம்மு பொது மக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். நீண்ட தூரம் துரத்திச் செல்லப்பட்டு கடைசியில் புதுக்கோட்டை மன்னர் ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத் தொண்டைமான் பகதூர் என்பவரால் பிடிக்கப்பட்டார். இச்சேவைக்குப் பதிலாக அரசனுக்கு கிளினிலைக் கோட்டையின் மீதான அதிகாரம் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறும் பதிவுகள் உள்ளன.
அவசர விசாரணைக்குப் பிறகு, கட்டபொம்மு கயத்தாறில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரது கடைசி தருணங்கள் எதிரிகளால் மட்டுமே நகைச்சுவையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேஜர் ஜான் பேனர்மேன் சென்னை அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நேற்று நடைபெற்ற பரீட்சையில் கூடியிருந்தவர்களுக்கு முன்பாக பொலிகார் இருந்த காலம் முழுவதிலும் அவர் நடந்துகொண்ட விதமும், நடத்தையும் தயக்கமின்றி, மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பதை இங்கு அவதானிப்பது தவறில்லை. அவர் தனது நபரைப் பாதுகாப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த எட்டயபூர் பொலிகாரையும் (எட்டயபுரம் பொலிகர்) கோபமான அவமதிப்புத் தோற்றத்துடன் ஷெவிகெர்கியின் பொலிகரையும் அடிக்கடிக் கண்காணித்தார், மேலும் அவர் தூக்கிலிட வெளியே சென்றபோது, அவர் உறுதியான மற்றும் தைரியமான காற்றுடன் நடந்து, அவரது வலது மற்றும் இடது புறம் அவமதிப்பைக் காட்டினார். மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்குச் செல்லும் வழியில், அவர் தனது சகோதரனுக்காக (குமாரசாமி நாயக்கர்) தனியாக ஒரு கவலையை வெளிப்படுத்தினார், மேலும் அவர் தூக்கிலிடப்பட்ட மரத்தின் அடிவாரத்தை அடைந்தபோது, அவர் தனது கோட்டையை விட்டு வெளியேறியதற்காக வருந்துவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த பாளையங்கோட்டைச் சிறையில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஊமத்துரையும் அவரது வீரம் மிக்க தோழர்களும் பின்னர் தைரியமாகத் தப்பிச் சென்று ஓரளவு கோட்டையை மீண்டும் கட்டினார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள், மேஜர் அக்னியூவின் கீழ், படைகள் மீண்டும் சிதறி அவர்களை மீண்டும் தாக்கினர். கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு முன், ஊமத்துரை வலிமைமிக்க சிவகங்கை ஜமீனுடன் சேர்ந்து எதிர்ப்பை வழங்கினார்.
அப்போதுதான் ஆங்கிலேயர்கள் ஜமீனையும் அதன் வீரம் மிக்க மன்னர்களையும் வரலாற்றிலிருந்தும் பொது நினைவிலிருந்தும் அழிக்கும் திட்டங்களை வகுத்தனர். 1916 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரியான எச்.ஆர்.பேட் தொகுத்த தின்னல்வெல்லி கெசட்டியர், இந்த கோட்டையின் அழிவை ஆங்கிலேயர்களால் எவ்வாறு அழித்தது என்பதை பதிவு செய்தது.
பாஞ்சாலங்குறிச்சி மண் கோட்டை இடிக்கப்பட்டது, அந்த இடத்தை உழுது ஆமணக்கு விதைகள் விதைத்தனர், மேலும் மாவட்டத்தின் அனைத்து பதிவுகளிலிருந்தும் பெயர் நீக்கப்பட்டது.
அந்த பாளையத்தின் நிலங்கள் பின்னர் பிரிக்கப்பட்டு அண்டை விசுவாசமான பொலிகர்கள் ராஜாக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன, மேலும் பாஞ்சாலங்குறிச்சியின் முழு மண் கோட்டையும் மற்றும் அரண்மனை வளாகமும் மிதித்து புதைக்கப்பட்டது. மற்ற கட்டுக்கடங்காத இராணுவ குடும்பங்கள் மீது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்த அழிவு வேண்டுமென்றே பின்பற்றப்பட்டது.
கோவில் அழிக்கப்பட்டது
அசல் ஜக்கம்மா சன்னதி அழிக்கப்பட்டு ஒரு மேட்டின் கீழ் கிடந்தது. காலனித்துவ நிர்வாகமும் புதைக்கப்பட்ட இடத்தை எல்லைக்கு வெளியே வைத்திருந்தது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை பாண்டியர்கள் கைப்பற்றியபோது, வரலாற்றில் இதற்கு முன்னரும் இச்செயல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது அவமானத்தை ஏற்படுத்திய மற்றும் வரலாற்றின் ஒவ்வொரு அவுன்ஸ் பொதுமக்களின் நினைவிலிருந்து அகற்றப்பட்ட ஒரு செயலாகும்.
காலனித்துவ நிர்வாகம் புதைக்கப்பட்ட இடத்தை எல்லைக்கு வெளியே வைத்திருந்தது, ஆனால் இது அதன் உள்ளூர் வணக்கத்தை அதிகரித்தது. புதிய புனைவுகள் அதன் மண்ணின் வீரம் மிக்க பண்புகளைப் பற்றி பரவத் தொடங்கின. ஒவ்வொரு சிவராத்திரியின் போதும், வீரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், கோட்டையிலிருந்து வரும் மண்ணின் ஒரு தானியத்தை, பிறந்த குழந்தைகளின் நாக்கில் வைத்தனர்.
இதன் வெளிச்சத்தில், கோட்டை வளாகத்தில் சில தசாப்தங்களாக, இடிபாடுகளில் உடல் இருப்பதற்காக தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் வாய்ப்பு இருந்தபோதிலும், ஒரு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சி, பொலிகர் ராஜா காலத்தில் அதன் எதிர்ப்பால் புகழ்பெற்றது, காலனித்துவ அரசாங்கத்தால் மக்கள் இழக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இது தமிழ் நாட்டின் பிற மக்களால் பெரும்பாலும் மறக்கப்பட்டது. பொலிகர் ராஜாவின் கோட்டையின் தளம் அதிக அளவில் தாவரங்களால் நிரம்பியிருந்தது, மக்கள் மெதுவாக அந்த பகுதியைத் தவிர்த்தனர்.
தியாகத்தின் தெய்வீகம்
இருப்பினும், கயத்தாரில் கட்டபொம்மு தூக்கிலிடப்பட்ட இடம் ஒரு "சக்திவாய்ந்த உள்ளூர் ஆலயமாக" மாறியுள்ளது, மேலும் திருமணங்கள் அல்லது இறப்பு விழாக்களின் போது அங்கு ஆடுகள் பலியிடப்பட்டன. பயணிகள் புளி மரத்தின் அடிவாரத்தில் கற்களை எறிவதும் அறியப்படுகிறது, இது கோட்டையை மீண்டும் கட்டுவதற்கு "பங்களிப்பின்" அடையாளமாக இருக்கலாம். விரைவில், ஒரு பெரிய பாறைகள் குவிந்தன.
கட்டபொம்முவின் புராணக்கதைகள் மெதுவாக பாலாட்கள் மற்றும் தெரு நிகழ்ச்சிகளுக்குள் நுழைந்தன. வீரபாண்டியன் கதைப் பாடலும் கட்டபொம்மன் சரித்திரக்கதையும் பிரபலமாக இருந்ததாகத் தெரிகிறது. கம்பளத்தார் கூத்து, கட்டபொம்முவை ஒரு சிறு பாத்திரமாகக் கொண்ட தெரு நாடகம், முகலாயர்களுடன் போரிட்ட செஞ்சியின் ராஜபுத்திர இளவரசனைப் பற்றிய பாலாட், தேசிங்கு ராஜன் கதையைப் போலவே பிரபலமானதாகத் தெரிகிறது.
1930 களின் முற்பகுதியில், ஐந்து வயது சிறுவன் கணேசன், இந்தக் கூத்தால் ஈர்க்கப்பட்டு, தன் வாழ்க்கையே மேடையாக இருக்கும் என்று முடிவு செய்தார். இது கட்டபொம்முவின் வரலாற்றை பின்னாளில் பாதிக்கும். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, பிரபல நடிகர் சிவாஜி கணேசன்தான்.
ஆனால் ஆங்கிலேயர்களும் மச்சியாவெல்லியன் தந்திரங்களை வெளிப்படுத்தினர். குடியேற்றத்தைத் தடுக்க, பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் ஜமீன்தார்களாக்கப்பட்டு பணத்திற்குப் பதிலாக ஆயுதங்களைக் களைவது நடந்தது. சிப்பாய் கலகம் மற்றும் சுதந்திர போராட்ட காலங்களில் கூட இப்பகுதியில் அமைதி நிலவியது.
ஆனால், ஒன்றரை நூற்றாண்டுகளாகியும் இந்தச் சிறுமையை அரசாங்கம் மறக்கவில்லை. பாஞ்சாலங்குறிச்சியின் மீது காலனித்துவ அரசின் இரும்புப் பிடி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு 1946 இல் தான் தளர்ந்தது. அந்த ஆண்டில், கோவிலின் சிறிய கான்கிரீட் கோபுரத்தை மீண்டும் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். இது தற்போதுள்ள அடி மற்றும் ஒன்றரை உயரமான சுற்று அடித்தளத்தில் கட்டப்பட்டது.
'வானங்கள் கொட்டுகின்றன, வயல்கள் விளைகின்றன... நான் ஏன் உனக்கு வரி கட்ட வேண்டும்?' இன்று, தமிழர் வரலாறு இதுவரை அறிந்திராத மிகப் பெரிய பிரகடனப் பகுதி. இந்த வார்த்தைகளைப் பேசி புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்தவர்.
கட்டபொம்மு இறந்து 150 ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் இந்த வரிகள் முக்கியத்துவம் பெற்றதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இறுதியாக 1959 இல் வெளிவந்த சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் மூலம் அவர்கள் அழியாதவர்கள் ஆனார்கள்.
பாரம்பரியமாக, மெட்ராஸின் படைகள் மற்ற சுதந்திர இயக்கங்களை அடக்கியது, ஆனால் சுதந்திரம் நெருங்கியபோது, ஒரு பெரிய தேசபக்தி உணர்வு இருந்தது மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றுக் கதைகள் மெட்ராஸுக்கு தேவைப்பட்டன.
கட்டபொம்மு, திரையில்
1940 களின் பிற்பகுதியில், எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஜெமினி ஸ்டுடியோஸ் ஆர்.கே. நாராயணனைக் கொண்டு கதையை எழுதி ஒரு திரைப்படத்தை உருவாக்கியது, ஒருவேளை அவர் நேரடியாக ஒரு திரைப்பட ஸ்கிரிப்ட்டில் பணியாற்றினார். மிஸ் மாலினி ஒரு மாபெரும் தோல்வி, ஆனால் பாடல்கள் மக்களின் கூட்டு நினைவில் தங்கிவிட்டன.
பாடல்களை எழுதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் கவிஞருமான கொத்தமங்கலம் சுப்பு, ஒரு தாலாட்டுப் பாடலை எழுதினார், அதில் ஒரு தாய் தனது குழந்தைக்கு ஒரு பாடலைப் பாடுகிறார், அவருக்கு தைரியத்தை வளர்க்கிறார். வசனத்தில், சுப்பு கட்டபொம்முவை மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் (காந்தி மகான், நேதாஜி, கட்டபொம்மன் கதைக் கூரி) ஆகியோருடன் குறிப்பிடுகிறார்.
வியக்க வைக்கும் விதமாக, தமிழ் திரையுலகினர் பலரும் அதுவரை கட்டபொம்முவை பற்றி கேள்விப்பட்டதே இல்லை.
சுப்புவின் வார்த்தைகள் கட்டபொம்முவின் தொலைந்து போன கதையில் ஒரு பெரிய வாழ்க்கை வரலாற்று பயணத்தைத் தூண்டியது. மா போ சிவஞான கிராமணி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதைத் தொடர்ந்து கட்டபொம்மு மற்றும் அவரது சகோதரர் ஊமத்துரை பற்றிய புத்தகங்களின் கூட்டம் சந்தையை நிரம்பி வழிந்தது. விரைவில், திரைப்பட நிறுவனங்கள், போட்டியாளர்களை முன்கூட்டியே தடுக்கும் முயற்சியில், தங்கள் கட்டபொம்மு தயாரிப்புகளை அறிவித்தன.
1953 இல், ஜெமினி வாசன் ஒரு விளம்பர செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு மற்றவர்களை முன்நிறுத்த முயன்றார். டிகேஎஸ் சகோதரர்கள் கட்டபொம்முவை முதல் முழக்கம் (முதல் அழுகை/அழைப்பு) என மேடைக்கு அழைத்து வந்தனர், ஆனால் பார்வையாளர்களின் வரவேற்பு மந்தமாக இருந்தது.
50 களின் நடுப்பகுதியில், சிவாஜி கணேசன், திரைக்கதை எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமியுடன், கட்டபொம்மு தூக்கிலிடப்பட்ட கயத்தாறு வழியாக பயணம் செய்தார், மேலும் அவரை மேடையில் நடிக்க தூண்டினார். கயத்தாற்றைக் கடக்கும்போது, சிவாஜி, ஒருவேளை, அவரது வாழ்க்கையைத் தூண்டும் சிறுவயது அனுபவத்தை நினைவுபடுத்தி, கட்டபொம்முவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகத்தை பரிந்துரைத்தார். சக்தி ஒரு மாதத்தில் ஸ்கிரிப்டை எழுதினார் - ஆகஸ்ட் 1957 இல் சேலத்தில் தொடங்கப்பட்டது. குழு செட்டுகள் மற்றும் ஆடைகளில் ரூ. 50,000 முதலீடு செய்தது. இந்த நாடகம் 112 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியது, அவற்றில் 12 திரைப்படம் தொடங்கப்பட்ட பிறகு அரங்கேற்றப்பட்டது.
வரலாறு மற்றும் புராண வகைகளில் நிபுணத்துவம் பெற்ற தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலு இதை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார். பந்துலுவும் சிவாஜியும் ஜெமினி திரைப்படத்தை தயாரிப்பதில் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அந்த மாபெரும் சவாலை விரும்பவில்லை. சிவாஜி தனது பெருமையை விழுங்கினார் (ஒருமுறை அவர் சந்திரலேகாவில் ஒரு சிறிய பாத்திரத்திற்காக வாசனால் நிராகரிக்கப்பட்டார்), வாசனை ஒதுக்கி வைக்குமாறு ஜெமினிக்கு சென்றார். ஸ்கிரிப்ட்டிற்காக சேகரித்த பொருட்களை வாசன் ஒப்படைத்தார்.
அப்போதுதான் எதிர்ப்பு வலுத்தது. அதிகம் விற்பனையாகும் துப்பறியும் புனைகதை எழுத்தாளர் தமிழ்வாணன் கட்டபொம்மு கொள்ளைக்காரன் என்ற புத்தகத்தை எழுதினார், கட்டபொம்முவின் சாதனைகள் "சந்தேகத்திற்குரியவை" என்றும் அவர் உண்மையில் ஒரு "கொள்ளைக்காரன்" என்றும் குறிப்பிடுகிறார். கவிஞர் கண்ணதாசன் ஒருபடி மேலே சென்று மருது பாண்டியர்கள்தான் உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறினார். அவர்களைப் பற்றி - சிவகங்கை சீமை என்ற திரைப்படம் எடுத்தார். மேலும் இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மோதின. இந்தப் படம் தோல்வியடைந்ததால் கண்ணதாசன் கடனில் மூழ்கினார்.
டெக்னிகலரில் படமாக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மு, தமிழ்த் திரைப்படம் ஒன்றின் முதன்முறையாக, 1959 இல் லண்டனில் அதன் முதல் காட்சியை வெளியிட்டது. அதிக தயாரிப்புச் செலவுகள் அதன் 175 நாட்களின் வெற்றிகரமான திரையரங்கு ஓட்டத்தை ரத்து செய்தது.
இது தெலுங்கில் வீரபாண்டிய கட்டபிரம்மன்னா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, அங்கு கட்டபொம்மு தனது தாய்மொழியில் பேசினார். 1960 கெய்ரோ ஆப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில், சிவாஜி சிறந்த நடிகருக்கான விருதை ஜனாதிபதி நாசரிடம் இருந்து பெற்றார். பத்தாண்டுகளுக்குப் பிறகு கயத்தாறில் கட்டபொம்முவின் சிலையை கணேசன் செய்தார்.
பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சிலை சிவாஜி கணேசனுடன் நெருங்கிய ஒத்திருக்கிறது, மேலும் அவரது மூச்சடைக்கக்கூடிய நடிப்பு கட்டபொம்முவின் பார்வையை மாற்றியது, அவர் பள்ளி ஆடம்பரமான ஆடை போட்டிகளுக்கு இன்னும் பிடித்தவர்.
வரலாற்றாசிரியர்கள் அவரது தேசபக்தி மற்றும் வீரத்தின் ஆழத்தை முரண்படும் அதே வேளையில், வரலாற்றையும் நாட்டுப்புறக் கதைகளையும் ஒன்றிணைக்கிறார்கள் என்று வல்லுநர்கள் பறைசாற்றும்போது, கட்டபொம்மு இன்றும் தமிழ் மண்ணின் மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரராக இருக்கிறார்.
(வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் இருமொழி நாவலாசிரியர் மற்றும் வரலாற்றாசிரியர். கல்கியின் “ பொன்னியின் செல்வன் ” நாவலின் தொடர்ச்சியையும், தென்னிந்தியாவில் டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு பற்றிய நாவலான “Gods, Kings & Slaves: The Seige of Madurai” என்ற நாவலையும் எழுதியுள்ளார். சென்னை நகர வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர்)
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் இருமொழி நாவலாசிரியர் மற்றும் வரலாற்றாசிரியர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலின் தொடர்ச்சியையும், தென்னிந்தியாவில் டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு பற்றிய 'கடவுள்கள், அரசர்கள் மற்றும் அடிமைகள்' என்ற நாவலையும் எழுதியுள்ளார். அவர் சென்னை நகர வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
..........
Comments
Post a Comment