Skip to main content

வீரபாண்டிய கட்டபொம்மன்









வீரபாண்டிய கட்டபொம்மன்




வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும்பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேரசோழபாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.

.........

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள்.

.........

 1. எழுச்சி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் :

இன்று (ஜனவரி 3-ந்தேதி) வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள். பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் சிறு முயல் கூட சிங்கத்தை எதிர்த்து நிற்கும் என்பது சொல்லடை. காகம் பறவாது கட்டபொம்மன் கோட்டையிலே என்று பழமொழி வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பறை சாற்றும்.

1760-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். பெற்றோர் ஜக வீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிகள் ஊமைத்துரை என்ற தனபால்குமாரசாமி, துரைசிங்கம் ஆவர். தங்கையர் இருவரும் உண்டு.

கி.பி. 17-ம் நூற்றாண்டில் கட்டபொம்மன் பரம்பரையில் 47-வது மன்னராக வீரபாண்டியன் வீற்றிருந்தார். ஒவ்வொரு சிற்றரசரும் பாளையக்காரராகவும் அவர்களின் நாடுகள் பாளையப்பட்டுகளாகவும் அழைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக்கு அடங்கி 96 கிராமங்கள் இருந்தன. பாளையக்காரர்களில் பலர் ஆற்காடு நவாப்பிற்கு வரி செலுத்தினர். 

 அமெரிக்கா கண்டனம் தென் இந்தியாவில் அப்போது கிழக்கிந்திய கம்பெனி புகுந்திருந்தது. வியாபார தந்திரமாக அவர்கள் கடனை வாரி வழங்கினர். கடனை திரும்ப வசூலித்தல் என்ற பெயரில் அவர்கள் சிற்றரசுகளை மண்டியிட வைத்தனர். கடனை திரும்ப செலுத்த திணறிய ஆற்காடு நவாப் 1792-ல் கிழக்கிந்திய கம்பெனியோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன்படி வரி வசூலிக்கும் உரிமை அல்லது கடனை அடைக்க முடியாதோருக்கு ஈடாக ஆட்சி பொறுப்பை பெறுவது என்பது வெள்ளையர்களின் தந்திரமாகும். 

வரி வசூலை முறைப்படுத்த அளந்து கல் நடும் முறையை கொண்டு வந்தனர். கர்னல் மேக்ஸ்வெல் என்பவர் இதன் அதிகாரியாக இருந்தார். பாளையக்காரர்கள் நவாப்பிற்கும் பின்பு கிழக்கிந்திய கம்பெனிக்கும் திறை செலுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வெள்ளையர்கள் திறை கேட்டனர். எமது முந்தைய 46 பரம்பரை தோன்றல்கள் யாருக்கும் வரி செலுத்தியதில்லை. நானும் கப்பம் கட்ட முடியாது என்றார் அவர். வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆலன்துரை வரி வசூலிக்க வந்தார். “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உமக்கு ஏன் கொடுக்க வேண்டும் திறை. இனாமாக வேண்டுமானால் உடல் வளைந்து கேள் தருகிறேன். இல்லாவிட்டால் உயிர் பிச்சை தருகிறேன் ஓடி விடு” என்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆலன்துரையால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியாத நிலையில் கிழக்கிந்திய கம்பெனி ஜாக்சன் என்பவனை திருநெல்வேலி கலெக்டராக்கியது. ஜாக்சன் அழைப்பின்பேரில் கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க 4 ஆயிரம் வீரர்களுடன் புறப்பட்டார். ஜாக்சன் கட்டபொம்மனை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தார். நெல்லையிலிருந்து நழுவி குற்றாலம், சொக்கம் பட்டி, சிவகிரி, சேத்தூர் என்று மாறிமாறி சென்றார். இறுதியில் இருவரும் ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் சந்தித்தனர். கட்டபொம்மன் தம்மை பார்க்கும் போது படையினரை அழைத்து வரக் கூடாது என்பது ஜாக்சனின் நிபந்தனை ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மன் தன் இரு தம்பிகளோடு ஜாக்சனை சந்தித்தார். ஜாக்சனுடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய கும்பினி படை நின்றது. வீரபாண்டிய கட்டபொம்மனை வரி செலுத்தும்படி மிரட்டிய ஜாக்சன், வீரபாண்டியனை கைது செய்ய தன் படைக்கு உத்தரவிட்டான். கட்டபொம்மனின் வேல் சுழன்றது. கர்னல் கிளார்க் அங்கேயே பிணமாக வீழ்ந்தான். தம்பியர் இருவரோடும் தப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் தன் படையினரோடு பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். கட்டபொம்மன் குறித்து எட்டப்பன் தகவல்களை சேகரித்து அனுப்பினான். பின்னர் இரு தரப்பினரையும் தூத்துக்குடியில் இருந்த ஆங்கிலேய அதிகாரி டேவிசன் சமாதானப்படுத்தினார். லூஷிங்கன் நெல்லையின் புதிய கலெக்டரானார். ஆயினும் கட்டபொம்மனிடம் வெள்ளையரால் திறை வாங்க முடியவில்லை. வீரபாண்டியனை பணிய வைக்க சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ் ஜான் பானர்மேன் தலைமையில் படைப்பிரிவை உருவாக்கினான். காலாட்படை, பீரங்கி படை, குதிரைப்படை, சுதேசிப்படை (இந்திய வீரர்கள்), விதேசிப்படை (வெள்ளையர்கள்) என ஐந்து படை பிரிவுகள் உருவாக்கப்பட்டன. வீரபாண்டியனின் இரு தம்பிகளும் திருச்செந்தூர் ஆவணி மூல திருநாளுக்குச் சென்றனர். உளவாளிகள் மூலம் தகவல் பானர் மேனுக்குச் சென்றது. உடனே பானர்மேன் பாஞ்சாலங்குறிச்சியை தாக்க 5 படைப் பிரிவுகளையும் அனுப்பினான். போர் தொடங்கியது. வீரபாண்டிய கட்டபொம்மனின் சேனை அயரவில்லை. வாயில் காவலன் வெள்ளைய தேவன் வீசிய ஈட்டியில் கர்னல் காலின்ஸின் தலை உருண்டது. இருதரப்பிலும் பலர் மாண்டனர். எனினும் வெள்ளையர் படை தளபதிகள் டக்ளஸ், டார்மிக்ஸ், பிளாக்கி, கன்னர்்பின்னி உள்ளிட்டோர் சடலமாகினர். இவர்களின் கல்லறை இப்போதும் ஒட்டப்பிடாரம் அருகில் உள்ளது. இத்தருணத்திலும் வீரபாண்டிய கட்டபொம்மனை பணிய வைக்க வெள்ளையர் மீண்டும் முயன்றனர். புது வெள்ளமென தாக்குதல் நடத்த சில யுக்திகளை உருவாக்க வீரபாண்டியன் திருச்சி செல்ல திட்டமிட்டார். 50 குதிரைகளோடு வீரபாண்டிய கட்டபொம்மன் படை வட திசை நோக்கி புறப்பட்டது. இடையில் கோலார்பட்டியில் தானாதிபதி மீண்டும் பிடிபட்டார். பின்னர் அவர் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் உள்பட 7 பேர் (ஊமைத்துரை, துரைசிங்கம், முத்தைய நாயக்கர், குமாரசாமி நாயக்கர், முத்துகுமாரசாமி நாயக்கர், வீரபாண்டியனின் அந்தரங்க பணி ஆள் வீரணமணியகாரன்) பல இடங்களில் தங்கி தப்பினர். ஆனியூர், கடால்குடி, சோளபுரம் சென்று, இறுதியில் புதுக்கோட்டை தொண்டைமான் அழைப்பின் பேரில் புதுக்கோட்டை அரண்மனையில் தங்கினர். புதுக்கோட்டை மன்னனின் துரோகத்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் பிடிபட்டார். விசாரணை என்ற சதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டது. 5-10-1799-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் முருகனை வணங்கி ஓர் நெடுஞ்சாலை புளியமரத்தில் தூக்கு கயிறை தன் கழுத்தில் தானே மாட்டிக்கொண்டு வீர மரணம் அடைந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் 39 ஆண்டுகள் வாழ்ந்தார். எட்டப்பன், புதுக்கோட்டை மன்னன் போன்றோரின் துரோகத்தால் அவர் இறந்து 220 ஆண்டுகள் ஆகின்றன. வரலாற்றில் மாவீரனாக மடிந்த முதல் அடையாளமாக வீரபாண்டியனின் பெயர் நிலைத்திருக்கும். வீரபாண்டியனின் மரணம் வீழ்ச்சி அல்ல. எப்போது நினைத்தாலும் ஒரு புத்தெழுச்சி ஆகும்.  


****

2. வரலாறு வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு By Siva- Dec 22, 2018, 06:11PM IST - Advertisement - வீர வசனம் என்றாலே இன்றளவுக்கும் நம் மனதில் உடனே நியாபகத்திற்கு வருவது கட்டபொம்மன் கூறிய “யாரைக் கேட்கிறாய் வரி..? யவரைக் கேட்கிறாய் வட்டி..?” என்கிற வசனம் தான் அந்த அளவிற்கு 200 ஆண்டுகளை தாண்டியும் அவரது வீரம் தமிழ் மண்ணில் மறையாமல் உள்ளது. அந்த அளவிற்கு நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் தான் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்கள் இந்தியமண்ணில் தங்களது ஆதிகத்தினை செலுத்தியபோது அவர்களை துணிந்து எதிர்த்தவர் இந்த கட்டபொம்மன். ஆங்கிலேய வணிகம் கட்டபொம்மனின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனது வணிகத்தினை துவங்க நினைத்த போது தனது துணிவான மன தைரியத்தினால் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மாவீரன் கட்டபொம்மனின் வாழ்க்கையினை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து வாசிக்கவும். - Advertisement - Close Player கட்டபொம்மன் பிறப்பு : தமிழகத்தில் உள்ள இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது பாஞ்சாலங்குறிச்சி. அந்த ஊரில் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திக்குவிசய கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார். இவரது இயற்பெயர் வீரபாண்டியன் மற்றும் அவர்களது குடும்பப்பெயர் கட்டபொம்மன் இது இரண்டும் மருவி வீரபாண்டிய கட்டபொம்மன் என்றானது. பெயர் – வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜனவரி 3, 1760 பெற்றோர் – திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் பிறந்த ஊர் – பாஞ்சாலங்குறிச்சி இளம் வயது மற்றும் திருமண வாழ்க்கை : - Advertisement - கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்து. அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் அரச குடும்பம் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார் . பிறகு தனது தந்தையின் மேல் வைத்த பாசம் மற்றும் ஈர்ப்பின் பேரில் அவர் தனது இளம் வயதில் அவரது தந்தையான திக்குவிசய கட்டபொம்மனின் உடனே அவருக்கு உதவியாக இருந்தார் . பிறகு அவர் வாலிப வயதினை அடைந்ததும் வீரசக்கம்மாள் என்கிறவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாகும்வரை புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது. அரியணை எறிய பாளையக்காரர் : தனது 30 ஆம் வயதில் தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார் கட்டபொம்மன். அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அவர் அரியணை ஏறினார். இதற்கு காரணம் அவர் பெற்ற நன்மதிப்பும் அவரது வீரமும் தான் இவையிரண்டை வைத்தே அவர் பாளையக்காரர் அரியாசனத்தில் அரியணை ஏறினார். பாஞ்சாலங்குறிச்சியில் வரி வசூல் செய்த ஆங்கிலேயர்கள் : ஆங்கிலேயர்கள் இங்கிருந்த ராஜ்யங்களில் தொடர்ந்து வரி வசூல் செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பல ராஜ்ய மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். இதனால் கட்டபொம்மனும் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருந்தது. தன் ராஜ்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் அளவிற்கு பணம் இல்லை என்பதனால் அவன் மக்களிடம் பணம் வசூலித்தான். அப்போது அந்த பகுதியில் வாழும் மக்கள் அவனை வசைபாட துவங்கினர். கட்டபொம்மனை நோக்கி சீரிய ஜாக்சன் துரை : மக்கள் தன்னை வசைபாடுவதை கண்டு மனம் நொந்து இருந்த நேரத்தில் ஜாக்சன் துரை அவனிடம் பணத்தினை வசூலிக்க வந்தான். அப்போது கோவத்தின் மிகுதியில் இருந்த கட்டபொம்மன் ஜாக்சன் துரையை நோக்கி “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று துணிச்சலாக அவரின் முகத்தின் எதிரே தனது வீரத்தினை வெளிப்படுத்தி வரியினை கட்ட முடியாது என்று துணிச்சலாக கூறி அவனை வெளியே அனுப்பினான். கட்டபொம்மன் நிகழ்த்திய போர் : ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகு அவர்களது பார்வை வீரபாண்டிய கட்டபொம்மன் மீது திரும்பியது. இவனை வீழ்த்தினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அவன் மீது போர் தொடுக்க தயாரானார்கள். இதனை முன்பே கணித்த கட்டபொம்மன் தனது ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயரை எதிர்த்தான். போரில் கடுமையாக சண்டையிட்டும் ஆங்கிலேயர்களால் அவனது ராஜ்ஜியம் கவரப்பட்டது. போரில் தனது ராஜ்யத்தை இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கேட்டார். ஆனால் ஆங்கிலேயர்களுக்காக பயந்து அந்த மன்னன் கட்டபொம்மனை காட்டிக்குடுத்துவிட்டார். அதோடு அவரையும் ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தனர். தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் : ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தபின்னர் நடந்த விசாரணையின் போதும் தனது வீரத்தினை வெளிக்காட்டினார். விசாரணையின் போது அவர் நான் உங்களை அழிக்கவேண்டும் என்று நினைத்து தான் உங்கள் மீது போர் புரிந்தேன் என்று வீர உரைபுரிந்தார். மேலும் நான் இங்கு தூக்கிலிடப்படுவதை காட்டிலும் நான் என் இடத்திலே உங்கள் கையால் இறந்திருக்கலாம் என்று கயத்தாறு எனும் பகுதியில் 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். 

*****

வீரபாண்டிய கட்ட பொம்மன்

தமிழக சுதந்திரபோராட்ட வரலாற்றை பற்றியும் தமிழக வீரம் பற்றிப் பேசினால், உடனே நினைவுக்கு வருபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்பட்ட இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு நுற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழக மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு உள்ளவரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தோடு, வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வாழ்க்கை வரலாறு சாதனைகளை காண்போம்.

தோற்றம்

ஆதிகட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மகனாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இவரது இயற்பெ" யர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.

இளமைக்காலம்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை என்ற குமாரசாமி, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் உடன்பிறந்தோர் . பின்னர், கட்டபொம்மன் வீரஜக்கம்மாள் என்பவரை மணந்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790ம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார்.

ஆங்கிலேயர்களுடன் மோதல்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற சமயத்தில், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. எட்டயபுரம் ராஜாவிடம் இருந்து பாளையத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றனர் ஆகிலேயர்கள். இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், எதிர்த்து நின்றனர், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கும் வகையில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டது. எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்தத்தோடு கடுமையான, தண்டனையும் வழங்கினர்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,

“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?

“வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்து பணிபுரிந்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.


எஞ்சிய அரண்மனை
 


புதுப்பிக்கப்ப அரண்மனை
போர்களத்தில்  

வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழ்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரத்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் கம்பெனி நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். பீரங்கிகளை கொண்டு நடைபெற்ற இந்த போரில் ஆறு நாட்களுக்கு பின்னர் கோட்டைமதில் உடைக்கப்பட்டு ஆங்கிலேய படைகள் உள்ளே நுழைந்தது. கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன்அங்கிருந்து தப்பி புதுக்கோட்டையில் உள்ள தனது நண்பரான புதுக்கோட்டை மன்னரிடம் அடைக்கலம் கோரினார். முதலில் கட்டபொம்மனை வரவேற்று அடைக்கலம் கொடுத்த புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் காட்டி கொடுத்ததால், ஆங்கில படைகள் அவரைக் கைது செய்தனர்.

இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள் 

கயத்தாறு பகுதியில் புளிய மரத்தடியில் நடந்த விசாரணையில் கட்டபொம்மனை குற்றவாளியென்று தீர்ப்பளித்தனர். வெள்ளையன். தன் மீது சுமத்திய “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆகிரமிப்பளர்களான ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரின் மனதிலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

இறப்பு 

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் த

 

ளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாற்றை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தின் கதை வசனத்தை சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே நம்கண் முன்னே கொண்டுவந்து காட்டியது. வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், அனைவருக்கும் சிவாஜி கணேசன் அவர்களே இன்றும் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு, படத்தில் அந்தக் கதாபாத்திரரமாகவே வாழ்ந்து காட்டியிருப்பார். சிவாஜியின் நடிப்பைப் வெளி நாட்டினரும் வியந்து பாராட்டும் விதமாக, எகிப்தில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில், அவருக்கு விருது’ கிடைத்தது.


சிலை
 

மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்

கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனாக நடித்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் தனது சொந்தசெலவில் இந்த சிலையை அமைத்துள்ளார். கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் நாவல்கள் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.
1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனின் புராதன கோட்டை அமைந்திருந்த இடத்தில் ஒரு புதிய கோட்டை ஒன்றை கட்டியது. கோட்டையில்உள்ள பிரதான மண்டபம் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருக்கிறது . போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.
அவரது பழைய அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் அகழ்வாராய்வு செய்யப்பட்டு இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இருநூறாவது ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் தலையை வெளியிட்டது.
இந்தியகடற்படையின் முதன்மையான தகவல் தொடர்பு இணைப்பு மையமாகக் கருதப்படும் நெல்லை மாவட்டத்தின் விஜயநாராயணபுரத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைதளத்திற்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என்று பெயரிடப்பட்டது.
1997 வரை, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போதைய தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி மாவட்டங்கள்) அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ மிக சிறப்பாக கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் தன்னெழுச்சியுடன் போராடிய முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு நிறுவி வருகிறது.

கட்டபொம்மனின் கோட்டை அமைந்துள்ள பஞ்சலங்குறிச்சிக்கு மிக அருகிலேயேதான் சுதந்திர போராட்டத்தில் தனது சொத்துகளை இழந்து கற்ற கல்வி தகுதியான வழக்கறிஞர் தகுதியையும் இழந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் கம்பெனி தொடங்கிய குற்றத்திற்காக ஆங்கிலேய அரசால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வ. உ. சிதம்பர பிள்ளை பிறந்த ஊரான ஓட்டபிடாரம் என்ற ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

***

4.



வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.

கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்)
Kattabomman.jpg
ஆட்சி
கி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழா
கி.பி 1790
முன்னிருந்தவர்
ஜெகவீர கட்டபொம்மன்
துணைவர்
சக்கம்மாள்
அரச குலம்
நாயக்க மன்னர்
தந்தை
ஜெகவீர கட்டபொம்மன்
தாய்
ஆறுமுகத்தம்மாள்
பொருளடக்கம்

கட்டபொம்மன் பெயர் காரணம்:

அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராகப் பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளைத் தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.[1] ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின், ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் ஆவார்.[1]

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்.[1] இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.[1]

வாழ்க்கை

மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை
சனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்
கர்நாடக பிரதேசத்தின் ஆட்சியாளர்களான ஆற்காடு நவாப்புகள் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை கும்பினியாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி நெல்லை சீமையில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியாமல் இருந்தார். இதனடிப்படையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையைத் தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.

மரணம்

வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்

உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்
செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பிப்ரவரி 02, 1801இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை மார்ச் 30, 1801இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து, மே 24, 1801இல் அதனைக் கைப்பற்றியது. அங்கிருந்து தப்பித்து, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல், பிரான்மலை என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுச் சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்
 
வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல் தலை
ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கியச் சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்தக் காப்பகத்தைப் பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன செய்தியை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும், பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்து விட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமல் போய்விட்டது என 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.[2]

மணிமண்டபம்
கட்டபொம்மன், மற்றும் ஊமைத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.[3]

பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ
இவற்றையும் காணவும்
வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)
பாஞ்சாலக்குறிச்சி கோட்டை
கலியுகப் பெருங்காவியம்
நூல்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு
மேற்கோள்கள்
 தமிழ் நேசன்-இணையம் மேஜர் ஜான் பேனர்மென்-வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு - பார்த்து பரணிடப்பட்ட நாள் 24-06-2009
 "கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்". ஜனவரி 4, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 வீர வரலாற்று அடையாள சின்னங்களுக்கு ஆபத்து: வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் காக்கப்படுமா?
வெளி இணைப்புகள்
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கட்டபொம்மன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டுரை பரணிடப்பட்டது 2010-01-17 at the வந்தவழி இயந்திரம்
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடப் படங்கள், தகவல் பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம்
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில தகவல்கள்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
கதை சொல்லும் சித்திரங்கள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விக்கிமேப்
Last edited 9 months ago by AntanO
விக்கிப்பீடியா
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு பயன்பாட்டு விதிகள்கணினி பதிப்பு

****
(கட்டப்பொம்மன் கோட்டை )

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஊருக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் இருந்த ஒரு தரைக் கோட்டையாகும்.


((பாஞ்சாலக்குறிச்சி புதிய கோட்டை))
இந்தக் கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் வாழ்ந்த கோட்டையாகும். இது 35 ஏக்கருக்குமல் பரப்பளவு கொண்டது. இந்தக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி ஊருக்கு மையத்தில் அமைந்திருந்தது. இந்தக்கோட்டை ஐந்நூறு அடி நீளமும், முந்நூறு அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இந்தக்கோட்டையின் முதன்மைவாயில் தெற்குநோக்கி இருந்தது. இந்த கோட்டையின் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இது கீழே அகலமாகவும், மேலே போகப்போக சரிவாகவும் சுமார் பனிரெண்டு அடி உயரத்துடனும், அடிப்பாகத்தின் அகலம் சுமார் பதினைந்து அடியும் உச்சியில் மூன்று அடியும் அகலம் கொண்டதாக இருந்தது. இக்கோட்டை இரட்டைச் சுவர்களாக கட்டப்பட்டு இடையில் கம்பு, உமி, வரகு, வைக்கோல் முதலியவற்றால் அடைக்கப்பட்டதாக இருந்தது. இதனால் கோட்டைச்சுவரை எளிதில் உடைக்க இயலாது. கோட்டையின் சுவர் வெளிப்புறம் செங்குத்தாகவும் உட்புறம் அதிகச்சரிவாகவும் கட்டப்பட்டிருந்தது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கொத்தளங்கள், நடுவில் நடுவில் அலங்கங்களும், சிறுசிறு கொத்தளங்களும் இருந்தன. இந்த வெளிக்கோட்டைக்கு உள்ளே ஒரு காரைக்கோட்டையும் இருந்தது. வெளிக்கோட்டையைச் சுற்றி ஒரு இலந்தை முள்வேலியும் இருந்தது. இது ஆஙகிலேயர்களால் அப்போது தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது இக்கோட்டையின் அடிபாகம் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த எஞ்சிய அடிப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புதிய கோட்டை
தொகு
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வடிவமைப்பை ஒத்த கோட்டையை பழைய கோட்டைக்கு அருகில் 1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆறு ஏக்கர் பரப்பளவில் எழுப்பினார். இந்தக்கோட்டை கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி கோயில் சுற்றிலும் மதில்சுவர் போன்றவற்றுடன் கட்டப்பட்டது. உள்ளே கட்டபொம்மனின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையம் செயல்படுகிறது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாதுறையின் பராமரிப்பில் இயங்கிவருகிறது.[1][2][3]

******


வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...
உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?
எங்களுடன் வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?
நாத்து நட்டாயா? களை பறித்தாயா?
கொஞ்சி விளையாடும் என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?
மாமனா? மச்சானா? எதற்கு கேட்கிறாய் வரி?
மானம் கெட்டவனே...

அட! இது நம்ம கட்டபொம்மன் பேசிய வசனம் ஆச்சே என சொல்லும் அளவிற்கு பட்டி தொட்டி அனைத்தும் பிரபலமான கட்டபொம்மன் வரலாறு பற்றி விளக்கமாக காண்போம்.

பிரிட்டிஷ் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீரனின் கதைதான் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் தான் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் .

'நான் வாழும் சொந்த பூமிக்கு யாரோ வேறு நாட்டு அயலானுக்கு கப்பம் கட்டுவதா.. எங்கிருந்தோ வந்து இந்திய மண்ணை சூறையாடிய ஆங்கிலேயனுக்கு ஒரு பொழுதும் அடிபணிய முடியாது' என வீர முழக்கத்தோடு ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்த மாபெரும் வீரமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வாழும் தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து இந்திய சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த ஒரு வீரத்தமிழர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். அப்படிப்பட்ட பொங்குதமிழ் வீரம் பேசும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் தெரிந்து கொள்வது இந்த மாவீரனுக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை ஆகும்.

மதுரை நாயக்கருக்கு பின் திசை மாறிய பாளையங்கோட்டை
மதுரை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒவ்வொரு பாளையக்காரரால் ஆளப்பட்டுவந்தது.

மதுரை நாயக்கர் ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பாளையகாரர்கள் சுதந்திரமாய் குறுநில மன்னர்களாக நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.

பாளையங்கோட்டையில் பாஞ்சாலங்குறிச்சியை கட்டபொம்மு என்ற பெயர் கொண்ட குறுநில மன்னன் ஆட்சி செய்து வருகின்றான். இந்த கட்டபொம்முவின் வம்சா வழியில் வந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி இரண்டாம் ஜெகவீரபாண்டியனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் பிறந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

இளம் வயது வரை எந்தவித கவலையும் இல்லாது கட்டழகு காளையாக மகிழ்ச்சியோடு இருந்து வந்தார் கட்டபொம்மன். ஜக்கம்மா எனும் மங்கையை கண்டு, காதல் வயப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றார். திருமணம் கோலாகலமாய் நடைபெற, குழந்தை பேறு இல்லை எனினும் இருவரும் இணைந்த இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியோடு தொடர்கிறது.

இந்த சமயத்தில் தான் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் ஆட்சிக்கு வந்தனர். அந்த சமயத்தில் தான் ஆங்கிலேயர்களும் வணிகத்தை மேம்படுத்த இந்தியாவிற்குள் நுழைந்தனர். 1890 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மேலும் வலிமை பெற்றவர்களாக இந்தியாவை முழுமையாக ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் . பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்தியர்கள் அடிபணிய வேண்டும் என்று சட்டம் விதித்தனர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழகத்தில் வரி வசூலிக்கும் திட்டத்தை அமலாகியது. இந்தியர்கள் கப்பம் செலுத்த வேண்டும் அதை பெறுவதற்கான முழு உரிமையும் தங்களுக்கு உள்ளது என்று பிரகடனம் செய்தனர் .மேலும் அனைத்து பாளையக்காரர்களும் ஆங்கிலேயருடன் மரியாதையுடன் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் தனது 30வது வயதில் கட்டபொம்மன் அரியணை ஏறுகிறார்.

ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரத்தமிழன் கட்டபொம்மன்
அரியணை ஏறிய முதல் வேலையாக வரி வசூலிக்கும் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார் கட்டபொம்மன். 'தங்களுடைய சொந்த மண்ணில் சுதந்திரமாய் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. அப்படி இருக்க ஆங்கிலேயருக்கு ஒருபோதும் வரி, கப்பம் எதுவும் செலுத்த மாட்டேன்’ என்று வீர கர்ச்சனை செய்கிறார். இதனால் ஆங்கிலேயரின் கடும் கோபத்திற்கு ஆளானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

அப்போதுதான் நம்முடைய இந்தியர்களுக்குள் சுதந்திர பற்று எழ ஆரம்பித்தது . மக்கள் சுதந்திர தாகத்துடன், எங்கிருந்தோ வந்து நம் நாட்டை ஆட்சி செய்யும் ஆங்கிலேயரை எதிர்க்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் ஆங்கிலேய ஆட்சியாளர் ஜாக்ஸன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அழைப்பு ஒன்று விடுகிறார். கட்டபொம்மனிடம் எட்டயபுரத்தில் நில சூறையாடல், தங்களுக்கு கப்பம் கட்டாமை என பல குற்றச்சாட்டுகளை சுமத்தி தன்னை வந்து சந்திக்குமாறு அழைக்கிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சனை சந்திப்பதற்காக அவர் சொல்லும் இடத்திற்கு வருகின்றார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வர சொல்லி 400 மைல்களுக்கு அப்பால் வரை கட்டபொம்மனை அலைகழித்தார் ஜாக்ஸன் . இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்கிறார்.

அங்கும் பல விதங்களில் கட்டபொம்மனை அவமானப்படுத்துகின்றான் ஜாக்சன். இதனால் மிகுந்த கோபம் கொண்டு அங்கிருந்து வீரத்தோடு, தடுக்க வந்த வீரர்களை எதிர்த்து போரிட்டு தப்பித்து வெளி வருகிறார் கட்டபொம்மன்.

கட்டபொம்மனை சூழ்ச்சியால் மட்டுமே வெல்ல முடியும் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படி செய்த சூழ்ச்சி வலையிலும் தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி திரும்புகின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

போர்முனை சாகசங்கள்
உங்களுக்கு வரி செலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை . நாங்கள் சுதந்திர மன்னர்கள். என்று துணிச்சலோடு போர் வாளை தூக்கி முழக்கமிட்ட இவரது வீரத்தை பார்த்து சுற்றியுள்ள அனைத்து பாளையங்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தன. அதனால் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மேலும் உற்சாகம் எழுந்தது. தம்முடைய பேச்சாற்றலால் அனைவரையும் போரில் கலந்து கொள்ளவருமாறு சுதந்திர தாகத்தை ஏற்படுத்துகின்றார்.

கூடவே தன் கோட்டையை மேலும் வலுப்படுத்தினார். பெரும் படைகளை திரட்டி வந்தார். ஆங்கிலேயரை எதிரப்பதற்கு, தமிழகத்திலிருந்து பல பாளையங்காரர்களை ஒருங்கிணைக்கிறார். ஆங்கிலேயர்களை போர்முனையில் எதிர்கொள்ள தயாராகிறார் .

இதே சமயத்தில் திப்புசுல்தானை ஆங்கிலேயர்கள் கொன்று விடுகின்றனர். திப்பு சுல்தான் வசம் இருந்த ஆங்கிலேயரின் பெரிய படைகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுகின்றனர். அந்தப் படைகளைக் கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனை தோற்கடித்து விடலாம் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படியே தெற்கே வீரபாண்டிய கட்டபொம்மனின் இடமான பாளையங்கோட்டை நோக்கி ஆங்கிலேயரின் படைகள் புறப்படுகின்றது.

Golden standing statue of kattabomman.

ஆங்கிலேய படைகளை துணிந்து எதிர்கொண்ட வீரன்
அஞ்சா நெஞ்சம் கொண்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன். இருப்பினும் தம்முடைய மண்ணிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று கனவு கண்டு அதை நிஜமாக்க துடித்த வீர மகனுக்கு இந்தப் போர் ஒரு பெரிய சவாலாகவே அமைந்தது.

பாளையங்கோட்டையை நோக்கி எதிர் வந்த ஆங்கிலேய படையினரின் திடீர் தாக்குதலை கண்டு கட்டபொம்மன் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் சற்றும் துவளாது சளைக்காமல் தம் படையினரோடு ஆங்கிலேயரிடம் வீரத்தோடு போரிடுகிறார் கட்டபொம்மன்.

அப்பொழுது அங்கு நடந்த கடும் போரில் கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளையத்தேவன் கொல்லப்படுகிறார். சகோதரன் ஊமைத்துறை பிடிபடுகிறார். கடைசியாக கட்டபொம்மனும் மந்திரி சேனாதிபதி பிள்ளையும் தப்பித்துச் சென்று விடுகின்றனர்.

சேனாதிபதி பிள்ளையும் மற்ற தலைவர்களும் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகின்றனர். இதோடு கட்டபொம்மனோடு ஆங்கிலேயரை எதிர்த்த மற்ற பாளையக்காரர்களும் பிடிபடுகின்றனர்.

சூழ்ச்சியால் வந்த வினை
இந்த நிகழ்வு சற்றே கலக்கம் கொண்ட நிகழ்வாகத்தான் கட்டபொம்மனுக்கு அமைந்தது. அங்கிருந்து தப்பித்து புதுக்கோட்டை வருகிறார். மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து , நல்லவர் போல் நடித்து கடைசியாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறார்.

அக்டோபர் 16 - 1799 ஆம் ஆண்டு கட்டபொம்மன் கயத்தாருக்கு கொண்டுவரப்பட்டு, அனைத்து மக்களின் முன்னிலையிலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படுகிறார் . வீரபாண்டியனுடைய வீர வரலாற்றை ஒருநாள் உலகமே பேசப் போகின்றது என்பதை எடுத்துக்காட்டும் தினமாக அமைந்த நாள் அது..

என்ன வீரம்! சற்றும் மனம் தளராது நேர்க்கொண்ட பார்வை, வீர நடை, அழகு முகத்தில் கலையாத கம்பீரம் என தூக்கு மேடையில் வீரபாண்டிய கட்டபொம்மன் . அந்த வீர மகனைப் பார்த்து மக்கள் அனைவரும் கதறுகின்றனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை கண்டு நம் கண்களிலும் கண்ணீர் வர காரணமாய் அமைந்த, சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த வீரனாய் தூக்கு மேடையில் நிமிர்ந்த நெஞ்சோடு நிற்கின்றான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

சாவுக்கு சற்றும் அஞ்சாத கர்ஜிக்கும் சிங்கம் போன்று நிமிர்ந்து நிற்கின்றார். நான் மறைந்தாலும் இனிவரும் காலத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க நீங்கள் அனைவரும் நிச்சயம் இருப்பீர்கள் என்று மக்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு சொல்லி, ஆங்கிலேயரை பார்த்து சீற்றத்தோடு தூக்கு கயிற்றை தழுவுகின்றான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

1799 இல் கயத்தாறில் 39 ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீர வரலாறு பேசும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில் இவருக்கான நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

கட்டபொம்மன், ஊமைத்துரை, இவர்களின் காலங்களுக்கு பிறகு அவர்கள் வாழ்ந்து வந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் பழங்கால கோட்டையை ஒத்து அமைக்கப்பெற்ற புதிய கோட்டை இந்நாளளவும் கட்டபொம்மன் புகழ் பாடி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. 1977 ஆம் ஆண்டு முதல் இக்கோட்டை இந்திய சுற்றுலா துரையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. மேலும் பழைய கோட்டையின் எஞ்சி இருக்கும் அடிப்பகுதி அமைப்புகள் அகழ்வாராய்ச்சி துரையின் பராமரிப்பில் இருக்கிறது.

வரலாறு மெச்சும் மாவீரன்
இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சு வரை அசாதாரண துணிச்சலுடன் போராடியவர் நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்திய வரலாற்றிலேயே ஒரு தனி அகராதியில் இடம் பிடித்தார் என்கின்றது வரலாறு. வீரத்திற்கே எடுத்துக்காட்டாய் இந்திய சுதந்திர வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு.

*******

"கட்டபொம்மன்" இங்கே வழிமாற்று. 1959 திரைப்படத்திற்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்) பார்க்கவும் . வீரபாண்டிய கட்டபொம்மன் (நூல்) வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கவும் . பிற பயன்பாடுகளுக்கு, கட்டபொம்மன் (தெளிவு நீக்கம்) பார்க்கவும் .
வீரபாண்டிய கட்டபொம்மன் [1] 18 ஆம் நூற்றாண்டின் பாளையக்காரர் மற்றும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி [2] [3] மன்னர் ஆவார் . அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்துடன் போரிட்டார், அவர் புதுக்கோட்டை பேரரசின் ஆட்சியாளர் விஜய ரகுநாத தொண்டைமான் உதவியுடன் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டார் , மேலும் 39 வயதில் அவர் 16 அக்டோபர் 1799 அன்று கயத்தாரில் தூக்கிலிடப்பட்டார் .

வீரபாண்டிய கட்டபொம்மன்
தென்காசி பாளையக்காரர்

வீரபாண்டிய கட்டபொம்மன் 1999 முத்திரையில்
ஆட்சி
அக்டோபர் 16, 1799 இல் முடிந்தது
பிறந்தது
ஜனவரி 1760 பாஞ்சாலங்குறிச்சி (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் , தமிழ்நாடு , இந்தியா )



இறந்தார்
16 அக்டோபர் 1799 (வயது 39)
கயத்தாறு , (தற்போது தூத்துக்குடி மாவட்டம் ,
தமிழ்நாடு , இந்தியா )
மனைவி
ஜக்கம்மாள் [ சான்று தேவை ]
அப்பா
ஜெகவீர கட்டபொம்மன் [ சான்று தேவை ]
அம்மா
ஆறுமுகத்தம்மாள் [ சான்று தேவை ]
உள்ளடக்கம்
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு
அவர்கள் முன்பு ஏகாதிபத்திய நீதிமன்றத்தில் சில முக்கியத்துவங்களைக் கொண்டிருந்தனர் மற்றும் வறண்ட சூழ்நிலையில் விவசாயம் செய்வதில் திறமையானவர்களாக இருந்திருக்கலாம், இருப்பினும் திருநெல்வேலியின் மற்ற குறிப்பிடத்தக்க சமூகமான மறவர்கள் - ஏற்கனவே மிகவும் சாதகமான பகுதிகளை ஆக்கிரமித்திருந்ததால், அவர்கள் செய்த இடத்தில் குடியேறுவதைத் தவிர வேறு வழியில்லை . கட்டபொம்மன் ஆடு மேய்க்கும் ராஜகம்பலம் நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர் , மற்ற இரண்டு வடுகன் சமூகத்தினர் கம்மவர்கள் மற்றும் ரெட்டிகள் . [5]

மரபு
தொகு

கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடம்
கட்டபொம்மன் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளில் ராபின் ஹூட் போன்ற உருவமாக கருதப்படுகிறார் என்றும், கும்மி வசன வடிவில் பல பாரம்பரிய கதை பாலாட்களின் பொருளாக இருக்கிறார் என்றும் வரலாற்றாசிரியர் சூசன் பேலி கூறுகிறார். கயத்தாரில் அவர் தூக்கிலிடப்பட்ட இடம் "சக்திவாய்ந்த உள்ளூர் ஆலயமாக" மாறியுள்ளது மற்றும் ஒரு காலத்தில் அங்கு ஆடுகள் பலியிடப்பட்டன. [6] தமிழ்நாடு அரசு கயத்தாற்றில் ஒரு நினைவகத்தை பராமரிக்கிறது மற்றும் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள பழைய கோட்டையின் எச்சங்கள் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றன . [7] [8] 2006 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் பாஞ்சாலங்குறிச்சியில் அவரது பிறந்தநாளில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. [9]

சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் திரைப்படம் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. [10] 

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் இருநூறாவது ஆண்டு நினைவாக, இந்திய அரசு 16 அக்டோபர் 1999 அன்று அவரது நினைவாக அஞ்சல் தலையை வெளியிட்டது. [11] விஜயநாராயணத்தில் உள்ள இந்திய கடற்படை தகவல் தொடர்பு மையத்திற்கு ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்று பெயரிடப்பட்டது . [12]

******


அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெள ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர். 

முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்கவில்லை.

 கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை. 

இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை. 

கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல்ல. 

மூன்றாவது குற்றச்சாட்டு : தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளையை எங்களிடம் ஒப்படைக்கவில்லை.

கட்டபொம்மன்: நெற்களஞ்சியத்தைக் கொள்ளை அடித்தது தவறுதான். அபராதத் தொகை தருவதாகச் சொன்னேன். அடைக்கலமாக என்னிடம் வந்தவரை எதிரிகளிடம் ஒப்படைப்பது கட்டபொம்மனுக்குச் சரிப்பட்டு வராது. 

நான்காவது குற்றச்சாட்டு: சிவகிரி பாளையத்திற்கு உள்ளே போய்க் கலகம் செய்தீர்.

கட்டபொம்மன்: அங்கே ஏற்பட்ட கலகத்தை அடக்க வேண்டும் என்று பாளையக்காரர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால், நான் அங்கே போனேன்.

 ஐந்தாவது குற்றச்சாட்டு: கும்பி




சென்னை: தென் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி சீமையில் கி.பி.1760-ம் ஆண்டு ஜனவரி 3-ல் ஜக வீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஊமைத்துரை என்ற தனபால்குமாரசாமி, துரைசிங்கம் ஆகிய சகோதரர்களும் தங்கையர் இருவரும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பிறந்தவர்கள்.


பாஞ்சாலங்குறிச்சியில் 47-வது மன்னராக வீரபாண்டிய கட்டபொம்மன் அரியனை ஏறினார். அப்போது இந்த நிலம் பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்கு உட்பட்டதாக 96 கிராமங்கள் இருந்தன.

ஆங்கிலேயர் ஊடுருவலுக்கு முன்னதாக ஆர்க்காடு நவாபிடம் பாளையக்காரர்கள் வரி செலுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தர் ஆர்க்காடு நவாப். இதற்கு எதிராக பாளையக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வீரன் அழகுமுத்துகோன், புலித்தேவர் பின்னர் கான்சாகிப் மருதநாயகம் உள்ளிட்டோர் ஆங்கிலேயருக்கு எதிராக தொடக்க காலங்களில் யுத்தம் நடத்தி வீர மரணம் அடைந்தனர்.

A life history of Veerapandiya Kattabomman
2-வது படை வரிசையில்தான் ராணி வேலுநாச்சியார், அவர்தம் தளபதியார் மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாட்சி கோபால் நாயக்கர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். ஆங்கிலேயருக்கு எதிராக எத்தனையோ வீரம் செறிந்த யுத்தங்களை வட இந்திய விடுதலை கிளர்ச்சிகளுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே நிகழ்த்தியது தமிழர் நிலம்.

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய தளபதி ஆலன்துரையிடம் வரி கட்ட மறுத்தார். இதன்பின்னர் ஜாக்சன்துரையை களமிறக்கியது ஆங்கிலேயப் படை. ஆரம்பத்தில் ஜாக்சன் துரையுடன் நட்புறவைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடினார். அதனால் ஜாக்சன் துரை அழைத்த இடத்துக்கெல்லாம் அமைதியாக சென்றார். கடைசியாக ராமநாதபுரம் அரண்மையில் ஜாக்சன் துரையை வீரபாண்டியன் தமது சகோதரர்களுடன் சந்தித்தார். ஆனால் ஜாக்சன் துரையோ, வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்ய உத்தரவிட இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சகோதரர்களுடன் தப்பினார்.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள்!இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த நாள்!

இதன் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பானர்மேன் ஆங்கிலேய படை யுத்தம் நடத்தியது. இந்த யுத்தத்தில் ஆங்கிலேய தளபதிகள் கர்னல் காலின்ஸ், டக்ளஸ், டார்மிக்ஸ், பிளாக்கி, கன்னர் பின்னி என பலரது தலைகளும் உருண்டன. இவர்களில் சிலரது கல்லறைகள் இன்றும் ஒட்டப்பிடாரம் அருகே வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. இந்த யுத்த காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி தானதிபதி ஆங்கிலேயரிடம் சிக்கி தூக்கிலிடப்பட்டார். ஆனாலும் வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரது சகோதரர்களும் அடைக்கலம் தேடி தமிழ் குறுநில மன்னர்களின் அரண்மனைகளை தட்டினர். அப்படியாக திறந்த கதவு ஒன்று துரோகத்தை நிகழ்த்தியது.. புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அரண்மனையில் ஆங்கிலேயர் படையால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.


பின்னர் கி.பி. 1799-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பின்னர் அவரது சகோதரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் மாவீரர்கள் மருதிருவரும் அவர்தம் சாம்ராஜ்ஜியமும் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டதும் வரலாறு!

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இருந்த இடத்தில் அவருக்கு கம்பீரமான சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி சொந்த செலவில் சிலை வைத்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தவர் கட்டபொம்மனுக்கு திரைவடிவில் உயிர் கொடுத்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

****



262 வருஷங்களுக்கு முன்னாடி, இதே நாள்ல நிகழ்ந்த ஒரு பிறப்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியதுன்னா அது மிகையில்ல. தூத்துக்குடி மாவட்டத்தில இருக்க பாஞ்சாலங்குறிச்சியில 1760 ஜனவரி 3-ம் தேதி ஜெகவீரன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தது அந்தக் குழந்தை. குழந்தைக்கு வீரபாண்டியன்னு பேர் வச்சாங்க. குடும்பப் பெயரான கட்டபொம்மன்னும் சேர்ந்து, பின்னாளில் வீரத்துக்கு அடையாளமாக வீரபாண்டியக் கட்டபொம்மன் என்றழைக்கப்பட்டது அந்தக் குழந்தை.


கட்டபொம்மன்

சுதந்திரப் போராட்டம்னா நினைவுக்கு வர்ற முதல்பெயர் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சென்னையில் கால்பதித்த ஆங்கிலேயர் தென்னிந்திய மண் பரப்புமுழுவதையும் ஆட்கொள்ளத் துடிச்சபோது இந்த மண்ணுக்கு அரணாக நின்னு துணிச்சலா எதிர்த்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் கொடுத்த துணிவால் தென்னிந்தியாவை நிர்வகித்த பல பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்தாங்க. அதனால் வெள்ளையர்களின் இலக்கானார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

Also Read
பத்ம விருதுகளின் கதை உங்களுக்குத் தெரியுமா?! | ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 2
பத்ம விருதுகளின் கதை உங்களுக்குத் தெரியுமா?! | ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 2
கட்டபொம்மன் மரபுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கு. இப்போது ஒட்டப்பிடாரம்னு அழைக்கப்படுற அழகிய வீரபாண்டியபுரத்தை ஆண்ட ஜெகவீரபாண்டிய நாயக்கரின் அரசவைல கெட்டிப்பொம்முங்கிறவர் இடம்பெற்றிருந்தார். ஜெகவீர பாண்டியனின் நம்பிக்கையைப் பெற்ற கெட்டிபொம்மு ஜெகவீரபாண்டியனுக்குப் பிறகு மன்னராக நியமிக்கப்பட்டார். அவர் மரபில் வந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இவரை மக்கள் பொம்மு நாயக்கர்ன்னு அழைச்சாங்க.

கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம்னு இரண்டு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணுன்னு இரண்டு சகோதரிகளும் இருந்தாங்க. வீரசக்கம்மாள்ங்கிறவங்களை கட்டபொம்மன் திருமணம் செய்துகிட்டார்.

கட்டபொம்மனுக்கு முப்பது வயசு வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன், பாளையக்காரராக இருந்துவந்ததால, தந்தைக்கு உதவியாக இருந்தார். பிறகு, பிப்ரவரி 2-ம் தேதி, 1790-ம் வருஷத்துல, 47-வது பாளையக்காரராக அரியணை ஏறினார் கட்டபொம்மன். 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாள்கள் அரசுப் பொறுப்பிலிருந்த கட்டபொம்மனுக்கு வாரிசுகள் இல்லை.


திருநெல்வேலியை சுத்தி இருக்க பாளையக்காரர்கள் எல்லார்கிட்டயும் வரி வசூலிக்கணும்னு எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாக கலெக்டர்களை நியமிச்சாங்க. இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்துவராம, எதிர்த்து நின்னாங்க. அவங்களை ஒழிக்க நினைச்ச ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களை ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரிகளாக்கும் வகையில பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டாங்க. ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தத் தொடங்க, அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டன. எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்தத்தோடு கடுமையான, தண்டனையும் வழங்கப்பட்டது.


கி.பி. 1797-ல் முதன்முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று தெறிச்சு ஓடினார். ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைச்சார். கட்டபொம்மனை அவமானப்படுத்தனும்னு கங்கணம் கட்டிகொண்டு திரிந்தார் ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அனைத்தையும் பந்தாடினார். வரியை கேட்டு வந்த துரையிடம் 'மாமனா? மச்சானா?' என வீர முழக்கமிட்டார் கட்டபொம்மன்.


அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டான். மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளின்னு பழி சுமத்திச்சு ஆங்கிலேயே நிர்வாகம். கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுக்கவும் இல்ல, உயிர்ப்பிச்சை கேட்கவும் இல்லை. கம்பீரத்தோடு, “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளைத் தோல்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்”ன்னு வீர முழக்கமிட்டு தூக்குமேடையேறினார்.

தூக்குமேடைலயும், அவரது பேச்சில வீரமும், தைரியமும் நிறைஞ்சிருந்துச்சு. இது சுத்தி நின்ன அனைவரின் உள்ளத்திலும் பெருமையை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான் செத்திருக்கலாம்"ன்னு கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார். தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார். அக்டோபர் 19-ம் தேதி, 1799-ம் ஆண்டு கயத்தாறு கோட்டையிலே ஒரு புளிய மரத்தில, 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறுல அவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டிருக்கு. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடிய கட்டபொம்மன், நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.

******


வீரபாண்டிய கட்டபொம்மன். பெயரை கேட்டாலே வீரவரலாறும், அந்த திரைப்பட காட்சியும் மனதில் விரிகிறதா...? ‘‘வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது... உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா...? மானங்கெட்டவனே... யாரைக்கேட்கிறாய் வரி... எவரை கேட்கிறாய் வட்டி? திரைப்படத்துக்காக எழுதப்பட்டாலும், ஆங்கிலேயருக்கு எதிராக நெஞ்சில் வீரத்துடன், துணிவுடன் போராடியவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றுதான் அவர் தூக்கலிடப்பட்ட நாள். அவரைப்பற்றிய வீர வரலாறை பார்ப்போம்.

1760, ஜன.3ம் தேதி திக்குவிசய கட்டபொம்மு, ஆறுமுகத்தம்மாளுக்கு மகனாக பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தில் பிறந்தவர். விஜயநகர ஆட்சிக்காலத்தின்போது ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு கட்டபொம்மனின் மூதாதையர் குடிவந்தனர். வீரபாண்டியபுரத்தில் ஜெகவீர பாண்டியன் ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரசவையில் ‘கெட்டி பொம்மு’ என்பவர் அமைச்சராக பணியாற்றினார். கெட்டி பொம்மு என்றால் வீரமிக்கவர் என்று அர்த்தம்.

ஜெகவீர பாண்டியனின் இறப்பிற்கு பிறகு ‘கெட்டி பொம்மு’ பாளையக்காரராக பொறுப்பேற்றார். பின்னர் நாளடைவில் வீரபாண்டிய கட்டபொம்மன் என அனைவராலும் அழைக்கப்பட்டார். இவரது மனைவி வீரசக்கம்மாள்.
கட்டபொம்மன் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர். இந்த கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக்கொள்ள, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க விரும்பினர். இதற்காக கலெக்டர்களையும் நியமித்தனர்.

அப்போது நெல்லை மாவட்டத்தில் வரி வசூலிக்கும் பொறுப்பை மாக்ஸ்வெல் என்ற தளபதி பெற்றிருந்தார். ஆனால் அவரால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் இருந்து வரியை வரி வசூலிக்க முடியவில்லை. துணிந்து ஆங்கிலேயே எதிர்த்து வந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். பாளையக்காரராக முதன்முதலில் கப்பம் கட்ட மறுத்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டுமே. இதனைத்தொடர்ந்து மற்ற பாளையக்காரர்களும் வரி கட்ட மறுத்து வந்தனர்.
இதனால் ஆங்கிலேயரின் கோபம் கட்டபொம்மன் மீது முழுதாக திரும்பியது.

கி.பி 1797ம் ஆண்டு முதன்முதலாக தளபதி ஆலன்துரை தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுத்தனர். இந்த போரில் வீரபாண்டியனிடம் தோற்று ஆலன் துரை ஓடினார். இந்த போருக்குப் பிறகு மாவட்ட கலெக்டரான ஜாக்சன் துரை, கட்டபொம்மனை சந்திக்க அழைப்பு விடுத்தார். இருவரும் 1798ல் ராமநாதபுரத்தில் சந்தித்தனர் அப்போது ஜாக்சன் துரை, சூழ்ச்சி செய்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய நினைத்தார். ஆனால் கட்டபொம்மன் தப்பித்தார்.

மீண்டும் செப்.5, 1799ல் பானர்மென் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையில் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை கைப்பற்ற பயங்கர போர் நடந்தது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இறுதியில் கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேற, பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து 1799, அக்.1ம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானிடம் கட்டபொம்மன் தஞ்சம் புகுந்தார். ஆங்கிலேயருக்கு பயந்து புதுக்கோட்டை மன்னன் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் ஆங்கிலேய நிர்வாகிகள் அவரை கைது செய்தனர்.

கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன், தனது 39வது வயதில், 1799, அக்.16ம் தேதி, ஆங்கிலேய தளபதி பேனர்மேன் உத்தரவின்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேயருக்கான எதிராக இவர் வீரமரணம் அடைந்தாலும், அவரது புகழ் உலகளாகவிய புகழ் பெற்றதை யாருமே மறுக்க முடியாது.

****
 
ஆங்கிலேயர்கள் விடுதலைப் போராட்டம் கட்டபொம்மன்

1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .

தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

- அரவிந்த்குமார் (puratchivendum1@gmail.com)

 SHARESaveWhatsapp
 முந்தையஅடுத்த

Comments   
0#1 mohan 2009-09-07 15:25
priyanikkum, quatorikku attimai pattu erukkom
Quote | Report to administrator
0#2 mani 2009-09-08 06:28
for full article please read

PUTHIYA KALACHAARAM - 2006 NOVEMBER
Quote | Report to administrator
+1#3 Dhayal 2009-12-09 08:14
More info regarding his article

groups.google.com/.../...
Quote | Report to administrator
0#4 Thaniyan 2011-04-25 19:06
“கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன்.

“பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணிய ம் தமது நூலின் பக். 165 ல்.

இதனை “கோலார்பட்டியில ிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியு ள்ள பகுதியால் அறியலாம்.

இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனா ரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக் காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.
நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிட ம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன்.

ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்!

வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல?

வீரமரணமா?

“பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

வணங்காமுடி:

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர்.

வந்தான் பானர்மேன்:

பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான ் கட்டபொம்ம நாயக்கன்.

தமது தம்பியின் திருமணத்திற்காக வும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தை க் கொள்ளையடித்தார் கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையு ம் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள.

இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான்.

பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான்.

ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன்.

ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான்.


இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிட ம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீ ரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டு ம்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்க ாரர் கும்மி:
வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க ்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது . இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம்.

Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112)

இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார்.

“புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையான ின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்க ாரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.”

“நயமாகப் பேசி விருந்துபச்சாரங ்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்ற ு ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

“மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையின ர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…?

இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!)

எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம்.

தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.
Quote | Report to administrator
0#5 captain 2012-04-14 04:01
கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன். “பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணிய ம் தமது நூலின் பக். 165 ல். இதனை “கோலார்பட்டியில ிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியு ள்ள பகுதியால் அறியலாம். இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனா ரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார ். ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக் காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிட ம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன். ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்! வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல? வீரமரணமா? “பாஞ்சாலங்குறிச ்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டி யுள்ளார். வணங்காமுடி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். வந்தான் பானர்மேன்: பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான ் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காக வும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தை க் கொள்ளையடித்தார் கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையு ம் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள . இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான். பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான். ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான். இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிட ம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீ ரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டு ம்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்க ாரர் கும்மி: வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க ்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது . இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம். ஊன்டெர் ஈன்ச்ட்ருச்டிஒன ் ஒஃப் ம்ர்.ளொஉசிங்டொன ், சொல்லெச்டொர் ஒஃப் டின்னெவெல்ல்ய், தெ கட்டபொம்மன் சப்டுரெட் ப்ய் தொன்டமன் இன் ஸதிரபதி ஃபொரெச்ட் ஒன் 23/09/1799. (ஹிச்டொர்ய் ஒஃப் டென்னெவெல்ல்ய் – ப்ய் ப்.சொல்ட்நெல்ல் ப்.112) இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார். “புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையான ின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்க ாரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” “நயமாகப் பேசி விருந்துபச்சாரங ்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்ற ு ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ள ார். வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள் ளார். தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . “மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ள ார். இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையின ர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!) எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம். தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.

******

அன்னிய படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டு, வீரம் மிக்க பல மாவீரர்கள் தனக்காகப் போரிட்டு, தங்கள் இன்னுயிரை ஈந்ததால், நம் தாய்நாடு "வீரபூமி" என்று அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் மதுரை முதல் திருநெல்வேலி வரை பரந்து விரிந்து கிடக்கும் பாண்டியநாடு, குறிப்பாகப் பலகாரப் போர்களுக்குப் புகழ் பெற்றது. உண்மையில் “வீரம்விளைந்த நிலம்” (வீரம் விளைந்த நிலம்) ஆகும். மதுரையின் முந்தைய நாயக்கர் ஆட்சியாளர்களின் கட்டளைகள், அவர்களை நிர்வகிக்கவும், வரி வசூலிக்கவும், படைகளின் பட்டாலியனைப் பராமரிக்கவும் தங்கள் வெவ்வேறு பிரிவுகளின் (பாளையங்கள்) மண்டலத் தலைவர்களாக நியமித்தனர். சாலிகுளம் காடுகளுக்கு வேட்டையாடச் சென்றபோது, ​​கட்டபொம்மன் ஒருவர் முயல் வேட்டையாடுவதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.

Powered By
VDO.AI
Video Player is loading.This is a modal window.The media could not be loaded, either because the server or network failed or because the format is not supported.
பதினெட்டாம் நூற்றாண்டில், நாயக்கர்களிடமிருந்து மதுரை சாம்ராஜ்யம் ஆற்காடு நவாபின் கீழ் வந்த பிறகு, புதிய முஸ்லீம் ஆட்சியாளர்களை பாலிகர்கள் அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். நவாப் தனக்கென பெரிய அரண்மனைகளைக் கட்டுவதில் ஈடுபட்டிருந்ததால், பலகாரர்களிடம் பணம் வசூலிக்க முடியாமல் திவாலானார். நவாப் பின்னர் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து பெரும் தொகையை கடன் வாங்க வேண்டியிருந்தது, அதற்கு பதிலாக அவர் தெற்கு பிராந்தியத்திலிருந்து ஆங்கிலேயர்களுக்கு வரி வசூலிக்கும் உரிமையை வழங்கினார், இது முழு பிராந்தியத்தின் செல்வத்தையும் கொள்ளையடிக்க உதவியது.

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவருடன் கூட்டணி அமைத்த சிலரைத் தவிர பல பலகாரர்கள் அவர்களிடம் சரணடைந்தனர். நிறுவனம் பல முயற்சிகள் செய்த போதிலும், அவர் நீண்ட காலமாக கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துரையை சந்திக்க மறுத்துவிட்டார். இறுதியாக அவர் ராமநாதபுரத்தில் அவரைச் சந்தித்தபோது, ​​கூட்டம் வன்முறையாக மாறியது, கிளார்க் என்ற பிரிட்டிஷ் துணைத் தளபதி மோதலில் கொல்லப்பட்டார். கட்டபொம்மனும் அவரது ஆட்களும் துணிச்சலுடன் அங்கிருந்து வெளியேறினர், ஆனால் அவரது செயலாளர் தனபதி பிள்ளை கிழக்கிந்திய கம்பெனியால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர், விசாரணைக் கமிஷன் ஜாக்சன் மீது பழியைச் சரிசெய்து, அவரைப் பதவியில் இருந்து நீக்கியது, ஏனெனில் கட்டபொம்மனுடனான சண்டை மற்ற பலகாரர்களையும் கிளர்ச்சி செய்து முழு பிராந்தியத்தையும் கைப்பற்றுவதற்கான அவர்களின் திட்டங்களை சிதைத்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர்.

திருநெல்வேலியின் புதிய ஆட்சியர் லூயிங்ஸ்டன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மீண்டும் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு கடிதம் எழுதினார். கட்டபொம்மன், கடுமையான வறட்சி நிலைமைகளை காரணம் காட்டி, பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, ராமநாதபுரத்தில் தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் கோரினார். கலெக்டரை சந்திக்கவோ அல்லது வரி செலுத்தவோ கட்டபொம்மன் தொடர்ந்து மறுத்ததால், கட்டபொம்மனுக்கு எதிராக இராணுவத் தாக்குதலை பரிந்துரைக்கும்படி கட்டாயப்படுத்தினார். கட்டபொம்மனின் பகைமை கொண்ட அண்டை வீட்டாரான எட்டயபுரத்தைச் சேர்ந்த பலகாரர், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரதேச தகராறுகளுக்காக அவரைத் தாக்கும்படி ஆட்சியர் தூண்டினார்.

மேஜர் பேனர்மேனின் கீழ், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் நான்கு நுழைவாயில்களிலும் ராணுவம் நின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது படைகள் துணிச்சலுடன் அவர்களுடன் போரிட்டு, அவர்களின் தளபதி லெப்டினன்ட் காலின்ஸை தெற்கு நுழைவாயிலில் கொன்றனர். ஆங்கிலேயர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர், மேலும் வலுவூட்டல்களுக்கு, குறிப்பாக பீரங்கிகளுக்கு உத்தரவிட்டனர். பீரங்கிகளின் சரமாரி தாக்குதலைத் தன் கோட்டை தாங்காது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் அன்று இரவே கோட்டையை விட்டு வெளியேறினான். ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் தலைக்கு விலை நிர்ணயம் செய்து, தனபதி பிள்ளை மற்றும் 16 பேரை தூக்கிலிட்டனர். மூங்கில் கம்பத்தில் வீற்றிருந்த பிள்ளையின் தலை, போராளிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் பாஞ்சாலங்குறிச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் ஓடிவந்து புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் அடைந்து, மீண்டும் ஆங்கிலேயர்களைத் தாக்க மற்றவர்களுடன் தன்னைத்தானே மீண்டும் ஒருங்கிணைக்க திட்டமிட்டார். துரோகிகளால் வழங்கப்பட்ட பல வழிகாட்டுதல்களின் மூலம், ஆங்கிலேயர்கள் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்யும்படி தங்கள் கைக்கூலியான புதுக்கோட்டை ராஜாவுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அவர் கைப்பற்றப்பட்டார் மற்றும் மூன்று வார விசாரணைக்குப் பிறகு, தேசத்துரோகத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் அவரை விடுவிக்க மன்னிப்பு கோரினார். துணிச்சலான கட்டபொம்மன் மறுத்து, "கோழைகளே உனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்" என்றார். பின்னர் அவர் அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் (திருநெல்வேலிக்கு அருகில்) ஒரு புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக தூக்கிலிடப்பட்டார். அவர்களால் ஒரு நேரடி சண்டையில் அவரை ஒருபோதும் தோற்கடிக்க முடியவில்லை, ஆனால் அவர் துரோகிகளால் அவர்களின் வஞ்சகத்தால் செய்யப்பட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது மற்றும் அனைத்து செல்வங்களும் ஆங்கிலேயர்களால் சூறையாடப்பட்டது. அவர்கள் அந்த நிலத்தைப் பார்த்து மிகவும் பயந்தார்கள், அதன் மகன்களுக்கு மண் உருவாக்கக்கூடிய தைரியம், சில ஆண்டுகளுக்குப் பிறகு, கோட்டை இருந்த இடத்தை உழுது, ஆமணக்கு எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றால் விதைக்கப்பட்டது, அதனால் அது மீண்டும் குடியேறக்கூடாது.

1917 ஆம் ஆண்டு தனது Tinnevelly Gazetteer இல், HR பேட், கயத்தாரில், "கடந்த நூறு ஆண்டுகளில் வழிப்போக்கர்களால் திரட்டப்பட்ட காணிக்கைகளைக் குறிக்கும் அனைத்து அளவிலான கற்களின் ஒரு பெரிய குவியல் இருப்பதைக் குறிப்பிடுகிறார். பல்லினத் தலைவர்களின் வீரத்தை நினைவுபடுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்றுவரை தமிழகத்தில் உயிர்ப்புடன் உள்ளன.

ட்ரிவியா: திருநெல்வேலி அருகே உள்ள இந்திய கடற்படையின் இந்தியாவின் முதன்மையான தகவல் தொடர்பு மையத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாக ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்று பெயரிடப்பட்டது.

 ******

வரலாற்றின் பக்கங்களில் இருந்து அவரது பெயரை துடைக்க ஆங்கிலேயர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். இந்த சுதந்திரப் போராட்ட வீரரின் மறந்த பெருமையை பட்டிமன்றங்களும் புத்தகங்களும் எப்படி மீட்டெடுத்தன என்பது இங்கே.

150 ஆண்டுகால மறதி என்பது கிட்டத்தட்ட இடைக்கால நிலைமைகளில் நீண்ட காலமாகும், குறிப்பாக ஒரு ராஜா தூக்கிலிடப்பட்ட பிறகு, அவரது உறவினர்கள் கொல்லப்பட்டனர், கோட்டை இடிக்கப்பட்டனர், நிலத்தை உழுது ஆமணக்கு நட்டனர் அல்லது அதை பாழாக்குவதற்கு உப்பு தூவப்பட்ட பிறகு. மேலும், வருவாய் பதிவேடுகளில் இருந்து அவரது ஊரின் பெயர் நீக்கப்பட்டதுடன், அவரது பெயரை தேசத்துரோகத்திற்கு சமமாக குறிப்பிடுவது, வெறும் காயத்தின் மீது அமிலத்தை (உப்பு மட்டுமல்ல) ஊற்றுவது போன்றது.

கிழக்கிந்திய நிறுவனம் மேற்கூறிய அனைத்தையும் செய்தது, இன்னும், வீரபாண்டிய கட்டபொம்மு 150 ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திரக் கருத்தைப் புரிந்துகொண்டு மதிப்பவர்கள் மத்தியில் தனது பெருமையைப் பெற கோலோச்சினார்.

கட்டபொம்முவின் துணிச்சலும், சுதந்திரத்திற்கான அவரது நாட்டமும் சந்தேகத்திற்கு இடமில்லை. இருப்பினும், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அந்தக் காலகட்டத்தின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பார்ப்பது முக்கியம். குறிப்பாக, ஆங்கிலேயர்கள் அவரை மக்கள் மறக்கச் செய்ய எந்த நிலைக்குச் சென்றார்கள் என்பதும், தமிழ்ப் பகுதியில் இருந்து அவர் மிகப் பெரிய சுதந்திரப் போராட்ட வீரராகக் கருதப்படுவதும் நாம் அறிந்ததே.

"ஒரு முரட்டுத்தனமான போர்வீரர்களின் இனம், ஆயுதங்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பழக்கமானது," மறைந்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ், பதினெட்டாம் நூற்றாண்டில் நாட்டின் இந்தப் பகுதியை ஆண்ட 'தெற்குப் பொலிகர்களை' விவரித்தார். பொலிகர்கள் பாளையங்கள் என்று அழைக்கப்படும் தோட்டங்களை வைத்திருப்பவர்கள், அதாவது "ஆயுத முகாம்" என்று அர்த்தம். அவர்கள் மதுரையில் உள்ள கோட்டையின் 72 கோட்டைகளின் பாதுகாவலர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் உண்மையில், நிலம் சிறந்த வருவாய் நிர்வாகத்திற்காக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்த முறை மதுரை சுல்தானகத்தை அழித்தபோது விஜயநகரப் பேரரசு மற்றும் அவர்களுக்குப் பின் வந்த நாயக்கர்களால் பின்பற்றப்பட்டது. இந்த 72 அரை நிலப்பிரபுத்துவப் பாளையம்களில் சில, ஒவ்வொன்றும் ஒரு பாளையக்காரரால் ஆளப்பட்டது, மிகச் சிறியவை. அவற்றின் அளவுகள் ஒவ்வொன்றும் சுமார் 33 கிராமங்கள் என்று ஒரு கணக்கு உள்ளது.

இராணுவ சேவைகளை வழங்குவதைத் தவிர, ஒரு பொலிகர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வேண்டியிருந்தது. இவற்றுக்கு ஈடாக, பொலிகர் தனது தோட்டத்தில் வசிப்பவர்களிடமிருந்து வரி வசூலிக்கவும், சிவில் மற்றும் குற்றவியல் அதிகார வரம்பைப் பயன்படுத்தவும் உரிமை பெற்றார்.

காவேரிக்கு தெற்கே உள்ள கர்நாடகாவின் பெரும் பகுதி, பொலிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாயக்கர் காலம் முழுவதும் பொலிகர் ராஜாக்களின் அதிகாரங்கள் தொடர்ந்து அதிகரித்தன, பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், ராமநாடு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை போன்ற சில மேலாதிக்க இளவரசர்கள் மெய்நிகர் ஆட்சியாளர்களாக மாறினர். சிறிய பாளையங்களும் இருந்தன, அவற்றில் பாஞ்சாலங்குறிச்சியும் ஒன்று.

அவர்களின் கோட்டைகளின் அரண்கள், சேற்றால் ஆனது மற்றும் தென் மாவட்டங்களின் தண்டிக்கும் சூரிய ஒளியில் சுடப்பட்டது, பிரிட்டிஷ் பீரங்கிகளின் கடுமையான சோதனைகளுக்கு அப்பாற்பட்டது.

நாயக்கர்களிடமிருந்து பாளையக்காரர் முறையைப் பெற்ற ஆற்காடு நவாப், பிரிட்டிஷ் கடன் வழங்குபவர்களிடமிருந்து அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்ற ஒரு போஹேமியன் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார். பெரும் கடனில், நவாப் தனது பொலிகர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பகுதிகள் உட்பட வருவாய் நிறைந்த தின்னவேலி மாவட்டத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாளையக்காரர்கள் பிரிட்டிஷ் லட்சியங்களுக்கு இணங்கவில்லை மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தியாக உருவெடுத்தனர். எவ்வாறாயினும், ஆங்கிலேயர்கள் தங்கள் நலன்களுக்குப் பாதகமான ஒரு இணை அதிகாரம் இருப்பதைக் கண்டனர்.

நெற்கட்டும்செவலை ஆண்ட பொலிகர் புலித்தேவன், 1857 சிப்பாய் கலகத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்களில் ஒருவராக குறிப்பிடத்தக்கவர். துரதிர்ஷ்டவசமாக, காலனித்துவவாதிகளுக்கு எதிரான போரில் அவர் அழிக்கப்பட்டார். பின்னர், ஒரு உள்ளூர் புராணக்கதை வெளிவந்தது, அவர் ஒரு கோவிலில் மர்மமான முறையில் "மறைந்துவிட்டார்" என்ற நம்பிக்கையைத் தூண்டியது. வரலாற்றில் ஏற்பட்ட இந்த திருப்பத்தால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அதன்பிறகு தங்கள் எதிரிகளை பகிரங்கமாக தூக்கிலிட முயன்றனர்.

கட்டபொம்முவின் தோற்றம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களுடன் ஓரளவு சமாதானத்தை அனுபவித்தனர். அப்போதுதான் பாஞ்சாலங்குறிச்சியின் பொலிகர் கட்டபொம்முவால் தனது நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை. அவரது காணிக்கை நிலுவைத் தொகை 3,310 பகோடாக்கள் ஆகும், அதில் 1,080 பகோடாக்கள் மட்டுமே அரசிற்கு திருப்பிச் செலுத்தப்பட்டன. 18 ஆகஸ்டு 1798 அன்று, திருச்சி கலெக்டர் ஜாக்சன், கட்டபொம்முவை ராம்நாட்டில் இரண்டு வாரங்களில் சந்திக்கும்படி உத்தரவு அனுப்பினார்.

கட்டபொம்மு சரியான நேரத்தில் வந்தபோது, ​​​​ஜாக்சன் மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டிருப்பதைக் கண்டார். இந்த அவமானத்தைப் பொருட்படுத்தாமல், கட்டபொம்மு ஜாக்சனின் பாதையில் 400 மைல்கள் பயணம் செய்து 23 நாட்கள் ஜாக்சனைப் பின்தொடர்ந்து மீண்டும் ராம்நாட்டை அடைந்தார்.

கட்டபொம்மு, அரச பதவியில் இருந்தும், மூன்று மணி நேரம் ஆட்சியர் முன் நிற்க வைக்கப்பட்டார். ஜாக்சன் கட்டபொம்முவை மதராஸில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து சில அனுமதிகளைப் பெறும் வரை ராம்நாட்டில் இருக்குமாறு ஜாக்சன் அறிவுறுத்தியபோது, ​​​​பொலிகர் அவர் கைது செய்யப்படுகிறார் என்று கருதி, அதற்கு இடையூறு செய்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் கிளார்க் என்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். கட்டபொம்முவின் வக்கீல் (சட்ட ஆலோசகர்) நிலைமைக்கு மெதுவாக எதிர்வினையாற்றினார் மற்றும் தப்பிக்கும் முயற்சியில் பின்தங்கினார். ஊமத்துரை (கட்டபொம்முவின் காதுகேளாத மற்றும் ஊமை சகோதரர்) பொலிகரை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

இதற்குப் பிறகு, கட்டபொம்மு பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அவருக்கு நெல்லையில் ஒரு கம்பெனி லாபிஸ்ட் இருந்தார். அதைத் தொடர்ந்து, அவர் மோசமான சாகசங்களுக்கு எதிராக அறிவுறுத்தப்பட்டார் மற்றும் ஆளுநர் எட்வர்ட் கிளைவுக்கு கடிதங்களை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார், மகுடத்திற்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறினார்.

கட்டபொம்மு ராம்நாட்டில் நடந்த சண்டைக்கு "ஜாக்சனின் வெறித்தனம்" காரணம் என்று கூறி, அவரது வக்கீலை விடுவிக்கக் கோரினார். மைசூர் போர்கள் அதன் கவனத்தை ஆக்கிரமித்திருந்ததால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் விரும்பத்தகாத அபாயத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எட்வர்ட் கிளைவ் பின்னர் கட்டபொம்முவை நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க அழைத்தார். ராம்நாட் சம்பவம் மற்றும் சந்தேகத்திற்குரிய அனைத்து காரணங்களையும் அகற்ற கிரீடத்தின் நோக்கம் குறித்து நியாயமான விசாரணைக்கு உறுதியளித்த அவர், ஜாக்சனை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து, வக்கீலை சிறையில் இருந்து விடுவித்தார்.

கட்டபொம்மு விசாரணைக் குழுவின் முன் ஆஜரானார், இது ராம்நாட்டில் நடந்த மோதலில் உச்சக்கட்ட சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்ததில், கட்டபொம்மு உண்மையிலேயே அவமானப்படுத்தப்பட்டதாக முடிவு செய்தார். ஜாக்சன் கண்டிக்கப்பட்டு கட்டபொம்மு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் பாஞ்சாலங்குறிச்சி கலவரத்தில் கொல்லப்பட்ட கிளார்க்கின் சம்பளத்திற்கு இணையான தொகையை அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பிரிட்டிஷ் க்ரட்ஜ்

ஆனால் ஆங்கிலேயர்கள் அமைதியாக இருக்கவில்லை. பழிவாங்கும் விதமாக, கட்டபொம்மு மீது வெறுப்பு கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டதும், அவர்களின் முழு வளமும் விடுவிக்கப்பட்டதும், அவர்கள் பாளையங்கள் மீது துப்பாக்கிகளைத் திருப்பினார்கள்.

இம்முறை, கம்பனியின் மேஜர் பேனர்மேன், கட்டபொம்முவுக்கு, அவருடைய நிலுவைத் தொகை குறித்து “அவரைச் சந்திக்க வேண்டும்” என்று கடிதம் எழுதினார். கட்டபொம்மு தனக்கு நல்ல தேதி கிடைக்கவில்லை என்று கூறி கூட்டத்தைத் தவிர்க்கும் போது, ​​ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தங்கள் முழு பலத்துடன் மூடிவிட்டனர்.

ஆறு பவுண்டர் துப்பாக்கிகள் தெற்கு வாயிலைத் திறக்கும்படி கட்டளையிடப்பட்டது, மேலும் கம்பெனி மற்றும் எட்டயபுரத்தின் கூட்டுப் பிரிவினர் கோட்டையின் வடக்கு முகத்தைத் தாக்க முடிவு செய்தனர்.

ஊமத்துரை இயக்கிய பொலிகர்களின் துருப்புக்கள் உறுதியுடன் தங்கள் நிலத்தை நிலைநிறுத்தி, விரோதப் பத்திகளை எறிந்தனர். பெரும் இழப்புகளைச் சந்தித்து, விரக்தியில் மூழ்கிய நிலையில், கட்டபொம்மு அணி பாளையங்கோட்டையிலிருந்து வலுவூட்டலுக்கு உத்தரவிட்டது. ஆனால் கோட்டை பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்த கட்டபொம்மு பொது மக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். நீண்ட தூரம் துரத்திச் செல்லப்பட்டு கடைசியில் புதுக்கோட்டை மன்னர் ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத் தொண்டைமான் பகதூர் என்பவரால் பிடிக்கப்பட்டார். இச்சேவைக்குப் பதிலாக அரசனுக்கு கிளினிலைக் கோட்டையின் மீதான அதிகாரம் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறும் பதிவுகள் உள்ளன.

அவசர விசாரணைக்குப் பிறகு, கட்டபொம்மு கயத்தாறில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரது கடைசி தருணங்கள் எதிரிகளால் மட்டுமே நகைச்சுவையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேஜர் ஜான் பேனர்மேன் சென்னை அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நேற்று நடைபெற்ற பரீட்சையில் கூடியிருந்தவர்களுக்கு முன்பாக பொலிகார் இருந்த காலம் முழுவதிலும் அவர் நடந்துகொண்ட விதமும், நடத்தையும் தயக்கமின்றி, மிகைப்படுத்தப்பட்டதாக இருப்பதை இங்கு அவதானிப்பது தவறில்லை. அவர் தனது நபரைப் பாதுகாப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த எட்டயபூர் பொலிகாரையும் (எட்டயபுரம் பொலிகர்) கோபமான அவமதிப்புத் தோற்றத்துடன் ஷெவிகெர்கியின் பொலிகரையும் அடிக்கடிக் கண்காணித்தார், மேலும் அவர் தூக்கிலிட வெளியே சென்றபோது, ​​அவர் உறுதியான மற்றும் தைரியமான காற்றுடன் நடந்து, அவரது வலது மற்றும் இடது புறம் அவமதிப்பைக் காட்டினார். மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்குச் செல்லும் வழியில், அவர் தனது சகோதரனுக்காக (குமாரசாமி நாயக்கர்) தனியாக ஒரு கவலையை வெளிப்படுத்தினார், மேலும் அவர் தூக்கிலிடப்பட்ட மரத்தின் அடிவாரத்தை அடைந்தபோது, ​​அவர் தனது கோட்டையை விட்டு வெளியேறியதற்காக வருந்துவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.  
இந்த பாளையங்கோட்டைச் சிறையில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஊமத்துரையும் அவரது வீரம் மிக்க தோழர்களும் பின்னர் தைரியமாகத் தப்பிச் சென்று ஓரளவு கோட்டையை மீண்டும் கட்டினார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள், மேஜர் அக்னியூவின் கீழ், படைகள் மீண்டும் சிதறி அவர்களை மீண்டும் தாக்கினர். கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு முன், ஊமத்துரை வலிமைமிக்க சிவகங்கை ஜமீனுடன் சேர்ந்து எதிர்ப்பை வழங்கினார்.

அப்போதுதான் ஆங்கிலேயர்கள் ஜமீனையும் அதன் வீரம் மிக்க மன்னர்களையும் வரலாற்றிலிருந்தும் பொது நினைவிலிருந்தும் அழிக்கும் திட்டங்களை வகுத்தனர். 1916 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரியான எச்.ஆர்.பேட் தொகுத்த தின்னல்வெல்லி கெசட்டியர், இந்த கோட்டையின் அழிவை ஆங்கிலேயர்களால் எவ்வாறு அழித்தது என்பதை பதிவு செய்தது.

பாஞ்சாலங்குறிச்சி மண் கோட்டை இடிக்கப்பட்டது, அந்த இடத்தை உழுது ஆமணக்கு விதைகள் விதைத்தனர், மேலும் மாவட்டத்தின் அனைத்து பதிவுகளிலிருந்தும் பெயர் நீக்கப்பட்டது.

அந்த பாளையத்தின் நிலங்கள் பின்னர் பிரிக்கப்பட்டு அண்டை விசுவாசமான பொலிகர்கள் ராஜாக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன, மேலும் பாஞ்சாலங்குறிச்சியின் முழு மண் கோட்டையும் மற்றும் அரண்மனை வளாகமும் மிதித்து புதைக்கப்பட்டது. மற்ற கட்டுக்கடங்காத இராணுவ குடும்பங்கள் மீது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்த அழிவு வேண்டுமென்றே பின்பற்றப்பட்டது.

கோவில் அழிக்கப்பட்டது

அசல் ஜக்கம்மா சன்னதி அழிக்கப்பட்டு ஒரு மேட்டின் கீழ் கிடந்தது. காலனித்துவ நிர்வாகமும் புதைக்கப்பட்ட இடத்தை எல்லைக்கு வெளியே வைத்திருந்தது.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை பாண்டியர்கள் கைப்பற்றியபோது, ​​வரலாற்றில் இதற்கு முன்னரும் இச்செயல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது அவமானத்தை ஏற்படுத்திய மற்றும் வரலாற்றின் ஒவ்வொரு அவுன்ஸ் பொதுமக்களின் நினைவிலிருந்து அகற்றப்பட்ட ஒரு செயலாகும்.

காலனித்துவ நிர்வாகம் புதைக்கப்பட்ட இடத்தை எல்லைக்கு வெளியே வைத்திருந்தது, ஆனால் இது அதன் உள்ளூர் வணக்கத்தை அதிகரித்தது. புதிய புனைவுகள் அதன் மண்ணின் வீரம் மிக்க பண்புகளைப் பற்றி பரவத் தொடங்கின. ஒவ்வொரு சிவராத்திரியின் போதும், வீரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், கோட்டையிலிருந்து வரும் மண்ணின் ஒரு தானியத்தை, பிறந்த குழந்தைகளின் நாக்கில் வைத்தனர்.

இதன் வெளிச்சத்தில், கோட்டை வளாகத்தில் சில தசாப்தங்களாக, இடிபாடுகளில் உடல் இருப்பதற்காக தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் வாய்ப்பு இருந்தபோதிலும், ஒரு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சி, பொலிகர் ராஜா காலத்தில் அதன் எதிர்ப்பால் புகழ்பெற்றது, காலனித்துவ அரசாங்கத்தால் மக்கள் இழக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இது தமிழ் நாட்டின் பிற மக்களால் பெரும்பாலும் மறக்கப்பட்டது. பொலிகர் ராஜாவின் கோட்டையின் தளம் அதிக அளவில் தாவரங்களால் நிரம்பியிருந்தது, மக்கள் மெதுவாக அந்த பகுதியைத் தவிர்த்தனர்.

தியாகத்தின் தெய்வீகம்

இருப்பினும், கயத்தாரில் கட்டபொம்மு தூக்கிலிடப்பட்ட இடம் ஒரு "சக்திவாய்ந்த உள்ளூர் ஆலயமாக" மாறியுள்ளது, மேலும் திருமணங்கள் அல்லது இறப்பு விழாக்களின் போது அங்கு ஆடுகள் பலியிடப்பட்டன. பயணிகள் புளி மரத்தின் அடிவாரத்தில் கற்களை எறிவதும் அறியப்படுகிறது, இது கோட்டையை மீண்டும் கட்டுவதற்கு "பங்களிப்பின்" அடையாளமாக இருக்கலாம். விரைவில், ஒரு பெரிய பாறைகள் குவிந்தன.

கட்டபொம்முவின் புராணக்கதைகள் மெதுவாக பாலாட்கள் மற்றும் தெரு நிகழ்ச்சிகளுக்குள் நுழைந்தன. வீரபாண்டியன் கதைப் பாடலும் கட்டபொம்மன் சரித்திரக்கதையும் பிரபலமாக இருந்ததாகத் தெரிகிறது. கம்பளத்தார் கூத்து, கட்டபொம்முவை ஒரு சிறு பாத்திரமாகக் கொண்ட தெரு நாடகம், முகலாயர்களுடன் போரிட்ட செஞ்சியின் ராஜபுத்திர இளவரசனைப் பற்றிய பாலாட், தேசிங்கு ராஜன் கதையைப் போலவே பிரபலமானதாகத் தெரிகிறது.

1930 களின் முற்பகுதியில், ஐந்து வயது சிறுவன் கணேசன், இந்தக் கூத்தால் ஈர்க்கப்பட்டு, தன் வாழ்க்கையே மேடையாக இருக்கும் என்று முடிவு செய்தார். இது கட்டபொம்முவின் வரலாற்றை பின்னாளில் பாதிக்கும். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, பிரபல நடிகர் சிவாஜி கணேசன்தான்.

ஆனால் ஆங்கிலேயர்களும் மச்சியாவெல்லியன் தந்திரங்களை வெளிப்படுத்தினர். குடியேற்றத்தைத் தடுக்க, பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் ஜமீன்தார்களாக்கப்பட்டு பணத்திற்குப் பதிலாக ஆயுதங்களைக் களைவது நடந்தது. சிப்பாய் கலகம் மற்றும் சுதந்திர போராட்ட காலங்களில் கூட இப்பகுதியில் அமைதி நிலவியது.

ஆனால், ஒன்றரை நூற்றாண்டுகளாகியும் இந்தச் சிறுமையை அரசாங்கம் மறக்கவில்லை. பாஞ்சாலங்குறிச்சியின் மீது காலனித்துவ அரசின் இரும்புப் பிடி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு 1946 இல் தான் தளர்ந்தது. அந்த ஆண்டில், கோவிலின் சிறிய கான்கிரீட் கோபுரத்தை மீண்டும் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். இது தற்போதுள்ள அடி மற்றும் ஒன்றரை உயரமான சுற்று அடித்தளத்தில் கட்டப்பட்டது.

'வானங்கள் கொட்டுகின்றன, வயல்கள் விளைகின்றன... நான் ஏன் உனக்கு வரி கட்ட வேண்டும்?' இன்று, தமிழர் வரலாறு இதுவரை அறிந்திராத மிகப் பெரிய பிரகடனப் பகுதி. இந்த வார்த்தைகளைப் பேசி புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்தவர்.

கட்டபொம்மு இறந்து 150 ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் இந்த வரிகள் முக்கியத்துவம் பெற்றதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இறுதியாக 1959 இல் வெளிவந்த சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் மூலம் அவர்கள் அழியாதவர்கள் ஆனார்கள்.

பாரம்பரியமாக, மெட்ராஸின் படைகள் மற்ற சுதந்திர இயக்கங்களை அடக்கியது, ஆனால் சுதந்திரம் நெருங்கியபோது, ​​ஒரு பெரிய தேசபக்தி உணர்வு இருந்தது மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றுக் கதைகள் மெட்ராஸுக்கு தேவைப்பட்டன.

கட்டபொம்மு, திரையில்

1940 களின் பிற்பகுதியில், எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஜெமினி ஸ்டுடியோஸ் ஆர்.கே. நாராயணனைக் கொண்டு கதையை எழுதி ஒரு திரைப்படத்தை உருவாக்கியது, ஒருவேளை அவர் நேரடியாக ஒரு திரைப்பட ஸ்கிரிப்ட்டில் பணியாற்றினார். மிஸ் மாலினி ஒரு மாபெரும் தோல்வி, ஆனால் பாடல்கள் மக்களின் கூட்டு நினைவில் தங்கிவிட்டன.

பாடல்களை எழுதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் கவிஞருமான கொத்தமங்கலம் சுப்பு, ஒரு தாலாட்டுப் பாடலை எழுதினார், அதில் ஒரு தாய் தனது குழந்தைக்கு ஒரு பாடலைப் பாடுகிறார், அவருக்கு தைரியத்தை வளர்க்கிறார். வசனத்தில், சுப்பு கட்டபொம்முவை மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் (காந்தி மகான், நேதாஜி, கட்டபொம்மன் கதைக் கூரி) ஆகியோருடன் குறிப்பிடுகிறார்.

வியக்க வைக்கும் விதமாக, தமிழ் திரையுலகினர் பலரும் அதுவரை கட்டபொம்முவை பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

சுப்புவின் வார்த்தைகள் கட்டபொம்முவின் தொலைந்து போன கதையில் ஒரு பெரிய வாழ்க்கை வரலாற்று பயணத்தைத் தூண்டியது. மா போ சிவஞான கிராமணி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதைத் தொடர்ந்து கட்டபொம்மு மற்றும் அவரது சகோதரர் ஊமத்துரை பற்றிய புத்தகங்களின் கூட்டம் சந்தையை நிரம்பி வழிந்தது. விரைவில், திரைப்பட நிறுவனங்கள், போட்டியாளர்களை முன்கூட்டியே தடுக்கும் முயற்சியில், தங்கள் கட்டபொம்மு தயாரிப்புகளை அறிவித்தன.

1953 இல், ஜெமினி வாசன் ஒரு விளம்பர செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு மற்றவர்களை முன்நிறுத்த முயன்றார். டிகேஎஸ் சகோதரர்கள் கட்டபொம்முவை முதல் முழக்கம் (முதல் அழுகை/அழைப்பு) என மேடைக்கு அழைத்து வந்தனர், ஆனால் பார்வையாளர்களின் வரவேற்பு மந்தமாக இருந்தது.

50 களின் நடுப்பகுதியில், சிவாஜி கணேசன், திரைக்கதை எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமியுடன், கட்டபொம்மு தூக்கிலிடப்பட்ட கயத்தாறு வழியாக பயணம் செய்தார், மேலும் அவரை மேடையில் நடிக்க தூண்டினார். கயத்தாற்றைக் கடக்கும்போது, ​​சிவாஜி, ஒருவேளை, அவரது வாழ்க்கையைத் தூண்டும் சிறுவயது அனுபவத்தை நினைவுபடுத்தி, கட்டபொம்முவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகத்தை பரிந்துரைத்தார். சக்தி ஒரு மாதத்தில் ஸ்கிரிப்டை எழுதினார் - ஆகஸ்ட் 1957 இல் சேலத்தில் தொடங்கப்பட்டது. குழு செட்டுகள் மற்றும் ஆடைகளில் ரூ. 50,000 முதலீடு செய்தது. இந்த நாடகம் 112 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியது, அவற்றில் 12 திரைப்படம் தொடங்கப்பட்ட பிறகு அரங்கேற்றப்பட்டது.

வரலாறு மற்றும் புராண வகைகளில் நிபுணத்துவம் பெற்ற தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலு இதை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார். பந்துலுவும் சிவாஜியும் ஜெமினி திரைப்படத்தை தயாரிப்பதில் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அந்த மாபெரும் சவாலை விரும்பவில்லை. சிவாஜி தனது பெருமையை விழுங்கினார் (ஒருமுறை அவர் சந்திரலேகாவில் ஒரு சிறிய பாத்திரத்திற்காக வாசனால் நிராகரிக்கப்பட்டார்), வாசனை ஒதுக்கி வைக்குமாறு ஜெமினிக்கு சென்றார். ஸ்கிரிப்ட்டிற்காக சேகரித்த பொருட்களை வாசன் ஒப்படைத்தார்.

அப்போதுதான் எதிர்ப்பு வலுத்தது. அதிகம் விற்பனையாகும் துப்பறியும் புனைகதை எழுத்தாளர் தமிழ்வாணன் கட்டபொம்மு கொள்ளைக்காரன் என்ற புத்தகத்தை எழுதினார், கட்டபொம்முவின் சாதனைகள் "சந்தேகத்திற்குரியவை" என்றும் அவர் உண்மையில் ஒரு "கொள்ளைக்காரன்" என்றும் குறிப்பிடுகிறார். கவிஞர் கண்ணதாசன் ஒருபடி மேலே சென்று மருது பாண்டியர்கள்தான் உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறினார். அவர்களைப் பற்றி - சிவகங்கை சீமை என்ற திரைப்படம் எடுத்தார். மேலும் இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மோதின. இந்தப் படம் தோல்வியடைந்ததால் கண்ணதாசன் கடனில் மூழ்கினார்.

டெக்னிகலரில் படமாக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மு, தமிழ்த் திரைப்படம் ஒன்றின் முதன்முறையாக, 1959 இல் லண்டனில் அதன் முதல் காட்சியை வெளியிட்டது. அதிக தயாரிப்புச் செலவுகள் அதன் 175 நாட்களின் வெற்றிகரமான திரையரங்கு ஓட்டத்தை ரத்து செய்தது.

இது தெலுங்கில் வீரபாண்டிய கட்டபிரம்மன்னா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, அங்கு கட்டபொம்மு தனது தாய்மொழியில் பேசினார். 1960 கெய்ரோ ஆப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில், சிவாஜி சிறந்த நடிகருக்கான விருதை ஜனாதிபதி நாசரிடம் இருந்து பெற்றார். பத்தாண்டுகளுக்குப் பிறகு கயத்தாறில் கட்டபொம்முவின் சிலையை கணேசன் செய்தார்.

பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சிலை சிவாஜி கணேசனுடன் நெருங்கிய ஒத்திருக்கிறது, மேலும் அவரது மூச்சடைக்கக்கூடிய நடிப்பு கட்டபொம்முவின் பார்வையை மாற்றியது, அவர் பள்ளி ஆடம்பரமான ஆடை போட்டிகளுக்கு இன்னும் பிடித்தவர்.

வரலாற்றாசிரியர்கள் அவரது தேசபக்தி மற்றும் வீரத்தின் ஆழத்தை முரண்படும் அதே வேளையில், வரலாற்றையும் நாட்டுப்புறக் கதைகளையும் ஒன்றிணைக்கிறார்கள் என்று வல்லுநர்கள் பறைசாற்றும்போது, ​​கட்டபொம்மு இன்றும் தமிழ் மண்ணின் மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரராக இருக்கிறார்.

(வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் இருமொழி நாவலாசிரியர் மற்றும் வரலாற்றாசிரியர். கல்கியின் “ பொன்னியின் செல்வன் ” நாவலின் தொடர்ச்சியையும், தென்னிந்தியாவில் டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு பற்றிய நாவலான “Gods, Kings & Slaves: The Seige of Madurai” என்ற நாவலையும் எழுதியுள்ளார். சென்னை நகர வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர்)

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் இருமொழி நாவலாசிரியர் மற்றும் வரலாற்றாசிரியர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலின் தொடர்ச்சியையும், தென்னிந்தியாவில் டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு பற்றிய 'கடவுள்கள், அரசர்கள் மற்றும் அடிமைகள்' என்ற நாவலையும் எழுதியுள்ளார். அவர் சென்னை நகர வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர். 

..........

முத்துநாச்சி சண்டை

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் சகோதரியாகிய முத்துநாச்சி ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்ட செய்தியை மையமாக வைத்த 892 வரிகளைக் கொண்ட கதைப்பாடல் சுவடி ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் காணப்படுகிறது.  இச்சுவடியை ஸ்ரீபுண்ணிய குமாரனாகிய திருமலைக்கொழுந்தா பிள்ளை என்பவர் தாழப்பட்டியில் இருக்கும் வீரமலைப் பிள்ளைக்கு எழுதிக்கொடுத்து இருக்கிறார்.

தென்னிந்தியாவில் ஆர்க்காட்டு நவாபுக்குப் பல குறுநில மன்னர்கள் கப்பம் செலுத்தி வந்தனர்.  நவாப் புரிந்த போர்களில் ஆங்கிலேயர்கள் படை உதவி செய்த காரணத்தால் தம் ஆட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆர்க்காடு நவாவு ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார்.  ஆங்கிலேயரிடம் பண வலிமையும், பீரங்கி மற்றும் துப்பாக்கி முதலிய நவீன கருவிகளும், படை வலிமையும் இருந்ததால் பல குறுநில மன்னர்கள் பயந்தனர்.  தென்னாட்டில் கட்டபொம்மன் மற்றும் சிவகங்கை மருதுசகோதரர்கள் தவிர மற்ற எல்லா பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களுக்குப் பணிந்துவிட்டனர்.  

கட்டபொம்மனும் ஆங்கிலேயரும்

பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் கட்டபொம்மன் ஆட்சி செய்து வந்தான்.  1791இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து நிர்வாகப் பொறுப்பைக் கட்டபொம்மன் ஏற்று திறம்பட நடத்திக்கொண்டு இருந்தான்.  குடிமக்கள் அனைவருமே கட்டபொம்மனைத் தெய்வமாக வழிபட்டனர்.  வெள்ளையரின் வெறித்தனமான செயல்களை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.  அதனால் மக்கள் தங்கள் மன்னருக்கு உறுதுணையாக விளங்கினார்கள்.  வீரபாண்டிய கட்டபொம்மனின் சிறப்பான ஆட்சியின் போது அவனை வீழ்த்துவதற்குச் சில குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்கரர்கள் முயன்றனர்.  

வெள்ளையர்கள் மக்களை அமைதியற்ற நிலைக்கு உள்ளாக்கும் நோக்கத்தின் முதல் கட்டமாக வரியை உயர்த்தினார்கள்.  சில பாளையக்காரர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கப்பம் கட்டினர்.  அப்படிப்பட்ட பாளையக்காரர்களுக்கு மேல்நாட்டு மதுபானம் பரிசாகக் கொடுத்தனர்.  இவர்கள் நம் சொற்படி கேட்கும்போது கட்டபொம்மன் மட்டும் எதிராக செயற்படுவது அவர்களுக்கு அவமானமாகப்பட்டது.  கட்டபொம்மன் மீது கோபங்கொண்ட வெள்ளையர்கள் சில குறுநில மன்னர்களின் ஆதரவுடன் கட்டபொம்மனைப் பணிய வைக்க முயன்று தோற்றுப் போயினர்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முற்றிலும் வெறுத்த கட்டபொம்மன், எங்கள் தாய் நாட்டின் மீது அந்நியரான நீங்கள் வரி விதிக்க என்ன உரிமை இருக்கிறது? எங்களது தமிழ் மண்ணில் ரோமானியர், சீனர், பாரசீகர் போன்றோரெல்லாம் கடல் கடந்து வந்து நட்புக் கொண்டு வாணிகம் செய்தனர்.  அவர்களிடம் நாங்கள் அன்பாகத்தான் வாணிகம் செய்தோம்.  ஆனால் பரங்கியரான நீங்கள் வியாபாரம் செய்ய வந்து அதிகாரம் செய்து எங்களை அடிமைகளாக்க நினைக்கின்றீர்கள்.  நாங்கள் என்ன அந்நியரான உங்களிடம் அடிமைச் சாசனமா எழுதிக் கொணடுத்துவிட்டோம்.  தன்மானம் கொண்ட தமிழர்கள் நாங்கள்.  தலைக்கனம் பிடித்த உங்களுக்கு எந்நாளும் தலை தாழோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  போரில் புறங்காட்டி ஓடாமல் எதிர்த்து நின்று போராடி மார்பில் வேல் பாய்ந்து மடிந்த மறவர் குலத்தோர் நாங்கள் என்று வீர முழக்கமிட்ட கட்டபொம்மன் ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான்.  அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர்.  மண் கோட்டையிலிருந்து வாளும் வில்லும் கொண்டு சிறிய படையோடு பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும்படையை எதிர்ப்போராடினான் கட்டபொம்மன்.

பாஞ்சாலங்குறிச்சிப் போர்

கட்டபொம்மனின் முதற் போரில் தளபதி காலிசென்ஸ் இறந்தான்.  கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் அப்போரில் இறந்தான்.  வெள்ளையர் படை சிதறியது.  1799இல் மறுபடியும் பெரும்படையோடு மேஜர் பானர்மேன் என்பவர் தலைமையில் கி.பி.1799 செப்டம்பர் 5இல் வந்த படையினரைப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் நுழைய விடாமல் ஊமைத்துரை முறியடித்தான்.  எனினும் சென்னையிலிருந்து பானர்மேனுக்கு உதவிட மேலும் படை வரவே தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை ஆகியோர் கோட்டையை விட்டு வெளியேறினர்.  ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த புதுக்கோட்டை மன்னனால் நயவஞ்சகமாகக் காட்டிக் கொடுக்க கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சிறைப்பட்டனர்.

கட்டபொம்மனைச் சிறைபிடித்த பானர்மேன் உடனடியாக அவர்களைத் தூக்கிலிட்டால் மக்கள் கலகம் செய்வார்கள் என்றெண்ணி அவர்கள் மீது பல குற்றங்களைச் சொல்லி அவர்களைச் செயலற்றுப் போகும்படி செய்ய வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டான்.  அதன்படி பாளையக்காரர்களைக் கயத்தாற்றில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைத்து பல கட்டளைகளை இடுகிறான்.  அதன்படி பாளையக்காரர் ஆயுதம் தாங்கும் உரிமையை இழந்தனர்.  ஆயுதம் தாங்குதல் சட்டவிரோதமாக்கப்பட்டது.  அனைவரது ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது கோட்டைகள் ஆங்கிலேயரை எதிர்க்கும் பாசறைகளாக மாறிவிடக்கூடும் என்றஞ்சி கோட்டைகள் இடிக்கப்பட்டன.  பாளைய நிர்வாகத்திற்காக செலவிடப்படும் தொகை பற்றிய கணக்குகள் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  இவற்றை பாளையக்காரர்கள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இவற்றைச் செயற்படுத்தினர்.  இவ்வாறு அராஜகமாகச் செயற்பட்டு பாளையக்காரர்களை அடக்கி அக்டோபர் 10ம் தேதி 1799இல் நீதி விசாரணையின் முடிவில் வீரபாண்டியனாகிய கட்டபொம்மனைக் குற்றவாளியாக்கிக் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிட்டனர்.  ஊமைத்துரை சிறையில் அடைக்கப்பட்டான்.

கட்டபொம்மன் மறைவுடன் பாஞ்சாலங்குறிச்சிப் போர் முற்றுப்பெறவில்லை.  ஊமைத்துரையும் மற்ற வீர்ர்களும் பாளையங்கோட்டையில் சிறைப்பட்டிருந்தனர்.  அவர்களைப் புலிக்குத்தி நாயக்கன் என்பவன் 1801 பிப்ரவரி 2இல் சிறையிலிருந்து மீட்டான்.  சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரை முதலில் பாளையங்கோட்டை சிறையை இடித்துத் தரைமட்டமாக்கினான்.  ஒட்டப்பிடாரத்தில் 4 நாட்களில் வலிமையான மண்கோட்டையை எழுப்பினான்.  1801ஆம் ஆண்டு மே மாதம் 24ந் தேதி ஆங்கிலேயர்கள் கோட்டை மீது குண்டுகள் வீசினர்.  அதில் நிலவறை தீப்பிடித்துக் கொண்டது.  அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் புகையால் மூச்சுவிட முடியாமல் தினறிக் கொண்டிருந்தனர்.  பல தாய்மார்கள் ஆங்கிலேயர்களால் தீண்டப்பெறக் கூடாது என்பதற்காகவே தீயில் விழுந்து உயிர் துறந்தனர்.  கும்பினிப்படை கோட்டைக்குள் புகுந்தது.  போர் வீர்ர்களுடன் பெண்களும், உலக்கை, முறம், மூங்கில் கம்பு முதலியவற்றை ஏந்திப் போர் புரிந்தனர்.  இதனைக் கண்ட ஊமைத்துரை பெண்களின் கற்பு நெறிக்கு ஊறு விளைந்திடக்கூடாது என்னும் அச்சத்தில் தன் வாளைப் பயன்படுத்தி ஆங்கிலேயர் கோட்டையைத் தாக்கிய காட்சியையும் அதைத் தொடர்ந்து பெண்கள் போரில் இறங்கிய நிலையையும் அவர்கள் மானத்தைக் காக்க ஊமைத்துரை பெண்களை வெட்டிச் சாய்த்த காட்சிகளையும் கட்டபொம்மன் வரலாறு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன், ஊமைத்துரை வரலாற்றைக் கூறும் நூல்களில் பெண்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட செய்திகள் காணப்படுகின்றன.  இத்தகையதொரு இக்கட்டான சூழலில் முத்துநாச்சியும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்.  இவள் இரண்டு நாள்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்.  தம் சகோதரர்கள் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை போலவே முத்துநாச்சியும் தன் பங்குக்கு ஆங்கிலப் படையில் பெரும் சேதத்தை உண்டு பண்ணி பின்னரே உயிர்விட்டிருக்கிறாள்.  இவளது அஞ்சா நெஞ்சமும், வீரதீரமும், செயல் திறமையும், மனவலிமையும் பற்றியெல்லாம் முத்துநாச்சி சண்டை எடுத்துரைக்கிறது.  முத்துநாச்சி பற்றி இதுவரை தனி நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் சுவடி தரும் செய்திகளின் அடிப்படையில் அவளது பிறப்பு, வளர்ப்பு, வீரம், விடாமுயற்சி, அஞ்சாநெஞ்சம், எதிரிகளை எதிர்த்துப் போரிடும் பாங்கு, செயல்திறன் போன்றவற்றை இக்கதைப்பாடலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முத்துநாச்சி

முத்துநாச்சி கி.பி.1760இல் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகளாவாள்.  இவளது தாயார் பெயர் ஆறுமுகத்தம்மாள்.  இவள் கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா எனப்படும் துரைசிங்கம் ஆகியோருக்கு இளையவளாவாள்.  வரலாற்று நூல்களில் முத்துநாச்சி பற்றி இதுவரை குறிப்பிடப்படவில்லை.  எனினும் கட்டபொம்மனுடன் பிறந்தோர் ஊமைத்துரை, துரைசிங்கம் எனும் இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு எனும் இரு சகோதரிகளும் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது.  

முத்துநாச்சி போர்க்கோலத்துடன் தனது அண்ணன் வெள்ளையையாவைக் காணச் சென்றபோது அவளை அடையாளம் புரியாத நிலையில் நீ யார்? என வினவ, அதற்கு முத்துநாச்சி,

எந்த வூரு யினம் எந்தச் சீர்மை என்று
என்னை நீ கேட்டாயே வெள்ளை அய்யா
இருக்குறது னான் பாஞ்சாலங் கோட்டையும்
என் பேருமே முத்துநாச்சி அய்யா

எனக் கூறுவதிலிருந்து இவள் கட்டபொம்மன் சகோதரர்களுக்கும் நேர் இளையவள் என்பது பெறப்படுகிறது.  இவளது போர்க்கோலம் கண்ட வெள்ளையையா மிகுந்த வருத்தத்துடன் மேலும் கூறும் மொழிகள், இவள் வளர்க்கப்பட்ட விதம் குறித்து உணர்த்தும் வாயிலாக அமைகிறது.

கட்டிக் குடுத்துமே முத்துநாச்சி உன்னை
கண்ணாலே பார்க்கலா மென்றிருந்தேன்
மச்சினன் முத்தையனுக்குக் கொடுத்துனான்
வாழ்வையும் பார்க்கலா மென்றிருந்தேன்
ஆணுக்கினிண்ணமு நாங்களடி யம்மா
அடிக்கிளைக்கிப் பெண்ணில்லை என்று
பேச்சி வரத்திலே நீ பிறந்து முத்துநாச்சி
என்றுனக்கு பேருமிட்டு
பெண்ணென்று சொல்லி  வளத்தின மானாலே
புத்தி குறைச்சலாய்ப் போகுமென்று
ஆணென்று சொல்லியேதான் வளர்த்து உன்னை
அச்சினம் பழக்கி வைத்திட்டமே

என்னும் வரிகளால் பெண் குழந்தை இல்லாத நிலையில் தெய்வத்திடம் வேண்டிப் பிறந்தவள் என்பதும், ஆண்பிள்ளை போல மிகுந்த வீரத்துடன் புத்திசாலியாகவும் வளர்க்கப்பட்டாள் என்பதும், தன் தங்கை சீரும் சிறப்புமாக மணவாழ்க்கை வாழவேண்டும் என்றும் நினைக்கும் வெள்ளையையாவின் கூற்று சான்றாகிறது.

முத்துநாச்சி சண்டை - கதைச்சுருக்கம்

பாஞ்சாலங்குறிச்சி போரில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற ஊமைத்துரையும் அவனது வீர்ர் ஆயிரம் பேரும் காயமுற்று பாஞ்சாலங்கோட்டையில் இருக்கின்றனர்.  அச்சமயம் தமக்கு ஏதும் நேர்ந்தால் தம் குலப் பெண்டிர் எதிரிகள் கையில் பட்டு சின்னாபின்னமாகக் கூடுமே, இழிவு ஏற்படுமே எனும் கவலையில் தாமே அவர்களைக் கொன்றுவிடுதல் நலமென நினைத்து அடப்பக்காரனை அனுப்பி தமது சிறியதாயார் நால்வரையும், கட்டபொம்மன் மனைவியர் மூவரையும், கட்டபொம்மன் வைப்பு மற்றும் வெள்ளையையா கட்டிய மூவரையும் ஆக பதினொரு பேர்களைத் தம் குலதெய்வம் சக்காதேவி முன் வைத்து பலியிட்டு விடுகின்றான்.  பிறகு பேறுகாலத்திற்காகத் தகப்பன் வீட்டிற்குச் சென்றிருக்கும் தமது மனைவியை வெட்டப்புகும்போது அவள் தம் வயிற்றில் பட்டத்திற்குரியவன் பிறக்க இருப்பதைக் காட்டி தம்மை விட்டுவிடக் கூற அவளை விடுத்து பின் தங்கை முத்துநாச்சியை வெட்டப் புறப்படுகிறான்.

தம்மை வெட்ட வந்த தமையன் ஊமைத்துரையைப் பார்த்து முத்துநாச்சி வீணே இப்பொழுது வெட்டிப் போடுவதைக் காட்டிலும் போர்க்களத்தில் மாண்டால் மிகுந்த சிறப்பாகும்.  உன் போல புலியின் கூடப்பிறந்த எனக்கு மட்டும் வீரமில்லாது போகுமோ எனப் பலவாறு வாதிடுகிறாள்.  இதனை,

கன்னிகழி யில்லை உந்தன் தங்கைவேற
கருமிச மொன்றுங் கண்ட தில்லை
புத்தி யறிந்து பதினஞ்சு னாளின்னம்
பேதக மொன்று மறிந்த தில்லை
பூமியைப் பார்த்து நடந்த கண்ணால்ப்
புகள்மானத்தைப் பார்த்து நடந்த தில்லை
புலியின் கூடப்பிறந்து போட்டே யின்னம்
பூனையாய்ப் போவேனோ தங்கையரும்
சிங்கத்தின் கூடப்பிறந்து போட்டு யின்னம்
சிறுவ னாவனோ உன்பிறப்பு
நீயு மிருந்து பிறந்த வயிற்றிலே
நானு மிருந்து பிறந்த னண்ணே
உனக்கு முள்ள சவுரியமு மின்னம்
எனக்கில் லாமலிருந் திடுமோ
நீயுங் குடித்த தாய்முலைப் பாலிலே
நானுங் குடித்து வளர்ந்த னண்ணே
உனக்கு வார்த்த்தோர் சங்கிலே கொஞ்சம்
எனக்கு மெத்தவே வாத்திருப்பார்
முகத்திலே யுனக்கு மீசையடா அண்ணே
முழங்காலி லெனக்கு மீசையடா (வரி.52-61)

என்று வாதிட்டு போர்க்களம் போக முடிவெடுத்ததைக் கூற, ஊமைத்துரை அவளை விடுத்து வந்து சேர்கிறான்.  நடந்த அனைத்தையும் கேள்வியுற்ற வெள்ளையையா தானாதிபதி மால்பத்திரப் பிள்ளையை அழைத்து வெட்டப்பட்ட பெண்களைக் கானத்துறையில் எரியூட்டி வரும்படி கூறுகிறான்.  இச்சமயம் முத்துநாச்சி தாதிமார்களைப் பார்த்துத் தலைக்குவிட தண்ணீர் கொண்டுவரச் செய்து, தீட்டு கழித்த பின்பு, தாம்  அச்சமயம் அணிந்திருந்த நகைகளைக் களைத்து, பின்பு பொக்கிஷ வீட்டைத் திறந்து பெட்டியை எடுத்து தன் முன்னே வைத்து நிலைக்கண்ணாடியையும் வைத்து நகைகளைப் பூட்டிக் கொள்கிறாள்.  சரிகைத் தலைப்பாவை வரிந்து கட்டி, காதில் முத்து வைத்த சேரை ஒட்டுகளும், கடுக்கனும், வாவிலிமுருகு, குறடாசங்கிலி, மோகன மாலை, சோபன மாலை, முதாரி, முறுக்குவளை, கண்டிமணி, மங்கலக்கட்டு, மோதிரம், கைகளுக்கு வைரப்பாசி அணிந்து கச்சைகட்டி மார்பில் வைரப் பதக்கமும் அணிந்து பின் பொக்கிஷ வீட்டைப் பூட்டி தம் குலதெய்வமான சக்காதேவி கோவிலுக்குச் செல்கிறாள்.  அங்கு சக்காதேவியிடம், 

வடக்கு முகமேதான் விழுந்து தங்கை
வடவாசல் நோக்கிய கையெடுத்தாள்
தெற்கு முகமேதான் விளுந்து தங்கை
தெண்டனிட்டாள் குலதெய்வமதை
ஆண்டவளே லோக னாயகியே என்னை
ஆதரிக்குஞ் சக்காதேவி யம்மாள்
சத்தி கெவுரி மகமாயி சிவசங்கரியே
சக்கா தேவி யம்மாள்
கம்பள மொன்பது சிவகார்ருக்கு
கைவிளக்காய் நின்ற சக்காதேவி
பில்லிக் குடையவள் சக்காதேவி யிந்த
பிணத்தைத் தின்கிற தேவதையே
பாஞ்சாலங் கோட்டையில் சக்காதேவி யின்னம்
படைவெட்டுங் கட்டமன் பொம்மன் தெய்வம்
கட்டமனுண் டென்று கையெடுக்கவனை
காட்டி குடுத்தாய் கயத்தாற்றில்
அப்படிப் போலவே அண்ண னூமையனை
அச்சினம் ஒப்புக் கொடுத்திட்டாயே
உந்தனுடைய உறுதியை நம்பியே
உற்ற கும்பினியைப் பகைசெய்தாற்
இந்த விசைக்கிநீ ஊக்கு முனை கொடுத்து
எங்களை ரட்சியுஞ் சக்கா தேவி
ஆறாயிரம் பேரு மங்கலியங்களை
அறுக்க வைத்தாயே சக்காதேவி
ஆறாயிரம் பேரும் போனபின்பு உன்னை
ஆரடி வந்துனைக் கையெடுப்பார்
ஒப்புக் குடுக்காதே சக்காதேவி யின்னம்
ஒதுங்கி நிக்காதே சக்கா தேவி
காட்டிக் குடுக்காதே சக்காதேவி யின்னம்
கடக்க நிக்காதே மாதாவே (வரி.105-119)

என்று முறையிடுகின்றாள்.  அதாவது, தம் குலதெய்வம் சக்காதேவியின் கோயிலுக்குச் சென்று அத்தெய்வத்தின் சிறப்புக்களைப் பலவாறு பேசி நீ துணையிருக்கும் தைரியத்திலேயே அண்ணன் கும்பினியைப் பகைத்தார்.  அவரை இப்படி ஒப்புக்கொடுத்துவிட்டாயே.  எங்களைக் காப்பாற்றியருள்வாய்.  ஆறாயிரம் பேர்களை மாங்கல்யங்களை அறுக்கவைத்துவிட்டாயே.  இனி உன்னை யார் வந்து வணங்குவர்.  இன்னமும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காதே. இப்போது சர்ச்சத்துரையுடன் போரிட நான் செல்கிறேன்.  எனது வலதுபுறத்தில் நீ உதவியாக வருதல் வேண்டும்.  நான் கன்னி கழியாதவள், குற்றம் எதுவும் இல்லாதவள், இதுவரை நிமிர்ந்து பார்த்து நடக்காதவள், மைத்துனன் முத்தையன் மீது சற்றே என் மனம் இருந்தது. அதை இந்த நிமிடத்திலிருந்து மனதில் இருந்து விலக்கிவிட்டேன்.  இனி அவர் என் உடன்பிறப்பு எனத் தன் மனத்திலிருந்து அத்தனையும் கூறிவிட்டு சக்காதேவியைத் தமக்கு உதவியாக வரும்படி வேண்ட அச்சமயம் சகுனங்கள் மூலமாக தெய்வத்திடமிருந்து உத்தரவு கிடைக்க கோயிலைவிட்டுப் புறப்படுகிறாள் முத்துநாச்சி.

கோயில்விட்டு வந்த முத்துநாச்சி வெள்ளையையாவிடம் செல்ல அவருக்கு முத்துநாச்சியின் போர்க்கோலம் கண்டு அடையாளம் புரியாமல் தம்பி உனக்கு எந்த ஊர் என்று வினவ அவள் அதற்கு என் பெயர் முத்துநாச்சி.  என் ஊர் பாஞ்சாலங்கோட்டை.  கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா ஆகியோருக்கு நேரிளையாள் எனக் கூறுகிறாள்.  இதனைக் கேட்ட வெள்ளையையா அவளை வாரியணைத்து மடியிலமர்த்தி உனக்கென்ன பைத்தியமா? உன்னை மைத்துனன் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்து கண்குளிர பார்க்கலாமென்றிருந்தேன்.  நீ இப்படி போர்க்கோலம் பூண்டு விட்டாயே என்று கூறி, பெண் வேண்டும் எனத் தெய்வங்களை வேண்டி வரம் பெற்றுப் பிறந்தவள் நீ என்பதையும், பெண்போல பொத்தி வளர்த்தால் புத்தியின்றி போய்விடும் என ஆண்போல வீரத்துடன் வளர்த்ததையும் கூறி, இப்படி அவளது அருமை பெருமைகளைக் கூறி அவளைப் போருக்குப் போக வேண்டாமெனத் தடுக்கிறான்.  அதற்கு முத்துநாச்சி வெள்ளையையாவைச் சமாதானப்படுத்தி நான் அன்றும் இன்றும் என்றும் ஆண்பிள்ளையே என்று கூறி சர்ச்சத்துரையை வெட்டி செயங்கொண்டு வருகிறேன் என்று கூறுகிறாள். 

வெள்ளையையாவும் மிகுந்த கலக்கத்துடன் தங்கைக்கு விடைகொடுக்கிறான்.  அடுத்து இக்கோலத்துடன் முத்துநாச்சி ஊமைத்துரையைக் கண்டு வணங்கி விடைபெறுகிறாள்.  அண்ணன்மார்கள் இருவர் இருந்தும் இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என மிகவும் மனம் கலங்குகிறான் ஊமைத்துரை.  தாம் கலங்கினால் தங்கை மனம் கலங்கும் என மனதைத் திடப்படுத்தியவாறு அடப்பக்காரனை அழைத்து கட்டபொம்மனின் பட்டத்து பட்டாவைக் கொண்டு வரச் செய்து அதனைத் தங்கையிடம் தருகிறான்.  அத்துடன் முன்மடியில் சொருகுவதற்குக் கட்டாரி, பட்டாக்கத்தி, தங்கப் பூப்போட்ட கேடயம் போன்றவற்றைக் கொடுத்து எதிரியை வெட்டி செயங்கொண்டு வா என வாழ்த்தி விடையளிக்கிறான்.

இவ்வாறே முத்துநாச்சி அரண்மனையை விட்டு ஆசாரசாவடி கடந்து கடைவீதி முன்பாக வந்தபோது எதிரில் போரில் இறந்த ஆராயிரம் பேர்களுடைய மனைவிமார்களும், கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதற்கு முடிவெடுத்து வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள்.  எதிரில் வந்த முத்துநாச்சியைப் பார்த்து ஊமைத்துரை, வெள்ளையையா, முத்தையன் இவர்களைவிட துரைமார்கள் இங்கு யாருமில்லையே அப்படி இருக்க நீ யார் என அடையாளம் புரியாமல் வினவுகின்றார்கள்.  அதுகேட்டு லேசாக சிரித்த முத்துநாச்சியை அடையாளம் கண்டுகொண்டு உனக்கெதற்கு போர்க்கோலம் என வினவுகின்றார்கள்.  எனினும் அங்கிருந்த கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதைவிட போர்க்கோலம் கண்டு போரில் குண்டடிபட்டு சாவது மேலெனக் கூறி முத்துநாச்சியின் பின் வருகின்றனர்.  மேலும் மற்றவர்களிடமும் எடுத்துக் கூறி அவர்களைப் போருக்கு அழைக்க இரண்டாயிரம் பெண்கள் போருக்குத் தயாராகி, உலக்கை, தடிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டார்கள்.  இதனை,

உடன்கட்டை யேறிச் சாகிறதைப் பார்க்க
உற்றதோர் குண்டுலே மாண்டு போவோம்
இப்படிச் சாகிற குண்டு பட்டுச் செத்தால்
இதுகொண்டு மெத்தச் சேதமில்லை
என்று சொல்லிக் கொண்டு ஏழுபேர் கள்ளச்சி
இச்சினம் பின் ஓடி வந்து
ஒலிமுகம் போயிச் சேருமடி யுற்ற
முத்துனாச்சி பின்னே னாங்கள் வாறோம்
என்றுசொல்லிக் கொண்டு கள்ளச்சி ஏழுபேர்
இச்சினம் வீட்டுக்கு ஓடி வந்து
தலைக்குல்லாவுகள் தானுமிட்டு யின்னம்
தங்க அங்கரக்காயத் தொட்டிறுக்கி
புருசனுடைய யீட்டிகளெடுத்து
புறப்பட்டாளய்யா கள்ளச்சியும்
வாரபோ தங்கனே கள்ளச்சி ஏளுபேர்
வாய்க்கொழுப்பங்கனே சொல்லிக் கொண்டாள்
உம்பளஞ் சம்பளந்தின்கிற முண்டைகள்
ஓடி வாங்களடி சண்டை செய்ய
கட்டமன் தங்கையை பார்க்கவுங்களுக்கு
கனமரியாதைத் தானுமுண்டோ
என்றுசொல்லிப் போட்டு கள்ளச்சிமார் சொல்ல
இச்சினமே யந்த பெண்டுகளும்
அதிலே ரெண்டாயிரம் பேரு குமரிகள்
அச்சினம் வெளியில்ப்பட்டு மங்கே
இந்தக் கட்டுடனே ஊமைச்சாமி னாட்டில்
எத்தினை னாளைக்கி னாமிருப்போம்
பிறாமுக யின்னம் பார்த்த மென்றாலவன்
பிளந்து வைப்பானே துண்டு ரெண்டாய்
இப்படி யிருக்கக் கூடாதடி னாமள்
இறந்து போவது உத்தமந்தான் (வரி.201-215)

என்றவர்கள் கோட்டைக்கு வாயு வேகத்தில் வந்து முத்துநாச்சியை வணங்கினர்.  அவர்களைப் பார்த்து முத்துநாச்சி ஏன் இங்கு  வந்தீர்கள் என வினவ உனக்குப் போரில் உதவவே வந்தோம் என்கின்றனர்.  இதைக்கேட்டு முத்துநாச்சி இப்படி எல்லோரும் சென்றால் சச்சரன் கண்டு கொள்ளக்கூடும் எனக் கூறிவிட்டு அண்ணனின் அரண்மனைக்கு ஓடி வருகிறாள்.  ஊமைத்துரையைப் பார்த்து அங்கலக்காரணம், கேப்பை மாவு, முறங்கள், சூட்டு அடுப்புகள், நவபாண்டம், விறகு போன்றவை வேண்டும் எனக் கேட்கிறாள்.  ஊமைத்துரை, ஆள் அனுப்பி தங்கை கேட்டவற்றைத் தரும்படி ஆணையிடுகிறான்.  அனைத்தையும் கோட்டைக்கு உடனே கொண்டு போக உத்தரவிடப்பட்டது.  அச்சமயம் ஒட்டப்பிடாரத்தில் உளவு சொல்வோன் கோட்டைக்கு ஓடி வந்து எதிரிப்படைகள் வந்திறங்குவதைப் பதற்றத்துடன் கூறுகிறான்.  அச்சமயம் எட்டமன் ஏணிகள், வைக்கோல் கட்டுகளை வண்டியிலேற்றி வருகிறான்.  கோட்டைக்குப் படைகள் வந்ததை உணர்த்தும் விதமாக மூன்று வேட்டுச் சத்தங்கள் முழங்க அடப்பக்காரனும், உளவு செல்வோனுமாக முத்துநாச்சியைக் கண்டு விவரம் கூறி எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறுகின்றனர்.

நடுசாம நேரத்தில் பட்டாளம் புறப்படுகிறது.  அச்சமயம் முத்துநாச்சி ஆயிரம் பெண்களைக் கோட்டைக்கு வரவழைத்து அவர்களை எட்டெட்டு பேர்களாகப் பிரித்து நிற்க வைக்கிறாள்.  இச்சமயம்  சச்சரனது பட்டாளம் கட்டபொம்மன் கோட்டையைச் சுற்றி வந்து விட்டது.  அதன்பின் ஏணிகள் வந்து இறங்கின.  இதைக் கண்டதும் முத்துநாச்சி ஆயத்தமாக எழுந்து நிற்கிறாள்.  படைகள் வந்திறங்கியதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்.  விடிய ஒரு சாமம் இருக்கும் வேளையில் முத்தையன், குப்பையாண்டித்தேவன் இவர்கள் கொத்தளத்தில் வைத்து கூழைக் காய்ச்சும்படி கள்ளச்சிகள் ஏழுபேருக்கும் கூறுகிறாள்.  அதுபோல தும்பிச்சி மேட்டில் கொள்ளை வறுத்துக் கொட்டும்படி சொல்கிறாள்.  இவ்வாறு பெண்கள் பாதிபேரிடம் கூழ் காய்ச்சும் படியும் பாதிபேரிடம் கொள் வறுத்துக்கொட்டும் படியும் கூறி ஏனைய ஆயிரம் பெண்களை உலக்கைத்தடி ஏந்தி தலை தெரியாது இருந்தபடி சண்டை செய்யும் படியும் கூறுகிறாள்.

நீங்கள் பெண்கள் என்று கண்டு கொண்டால் பீரங்கி போட்டு விடுவான்.  அதனால் மறைந்து நின்று தாக்குங்கள் என்று கூறுகிறாள்.  மேலும் அவர்களுக்கு தைரியமளிக்கும் வகையில் நாமும் மனிதர்கள், அவர்களும் அவ்வாறே.  அதனால் பயப்பட வேண்டாமெனக் கூறுகிறாள்.  இவ்வாறிருக்கையில் எச்சரிக்கை வேட்டு கிளம்புகிறது.  அனைவரையும் உஷார் நிலையிலிருக்கக் கூறித் தானும் உஷாருடனிருக்க மற்றொரு வேட்டுச் சத்தம் எழுப்பி கோட்டைமேல் ஏணியைச் சாத்துகிறான் சர்சத்துரை.  மற்றுமொரு வேட்டு கிளம்ப கேப்டனும் கோட்டை மேல் ஏறி வந்து விட்டான்.  அதனைக் கண்ட முத்துநாச்சி பெண் தெய்வங்களை வரிசையாக வேண்டியவாறு நிற்க, கேப்டனும் அருகில் வர, தெய்வங்களுக்கு நரபலி எனக் கூறி அவன் தலையை வெட்ட, அது கோட்டைக்குள்ளே விழுகிறது.  அதைத் தொடர்ந்து ஆப்புசேர், நாயக்கமார் என அனைவரும் வர அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துகிறாள் முத்துநாச்சி.  பிறகு சுபையதார், கும்மந்தான் இன்னும் பலரும் வெட்டுப்பட சச்சரன் இருவர் இருவராக அனுப்ப அனைவரையும் வெட்டி வெள்ளரிக்காய்களைப் போல வீழ்த்துகிறாள்.  மேலும் அவள் சச்சரனைப் பார்த்து எட்டையபுரத்து சச்சரனே ஊமைத்துரையும் ஆராயிரம் பேர்களும் காயமுற்று இருப்பார்கள் என நினைத்து கோட்டைமேல் ஏறி வந்தாயோ? கயத்தாற்றில் தூக்கில் விழுந்த கட்டபொம்மன் திரும்பி வந்துவிட்டானடா கோட்டைக்கு எனக் கூறியவாறு கோட்டைக்குள் இறங்கிச் செல்கிறாள் முத்துநாச்சி.

சச்சரத்துரையும் படைகளை நான்கு வகையாகப் பிரித்து அனுப்பி கோட்டைமேல் ஏறி விட்டான்.  முத்தையன் கொத்தளத்தின் மீது ஏற அச்சமயம் கள்ளச்சிகள் ஏழு பேரும் குத்துச் சண்டையில் ஈடுபட்டனர்.  அதில் சிறிது பட்டாளம் இறந்தது.  தும்பிச்சி மேட்டிலும் கொள்ளை வறுத்துக் கொட்டினர்.  சூட்டு அடுப்புகளையும் தலைமேலெறிந்தனர்.  சாம்பலுடன் தணலை வாரித் தலையில் போட்டனர்.  பட்டாளத்தில் பலர் இறந்தனர்.  தொடர்ந்து கூழ் சட்டிகளும் சிப்பாய்கள் மீது வந்து விழுந்தன.  அதனால் சிப்பாய்கள் கண்கள் ஒழுகி வெள்ளரிப் பழம் விரிவது போல் விரிந்தனர்.  இப்படியாக சண்டை தொடர்ந்தது.  மீதமுள்ள பட்டாளங்களும் வந்து சேர்ந்தன.  இதைக்கண்ட பெண்கள் ஆயிரம் பேரும் உலக்கை தடிகளுடன் ஆயத்தமாகி அவர்களைத் தாக்க சிப்பாய்களின் தலைகள் பருப்புச்சட்டியும் தயிர்ச்சட்டியும் உடைவது போல சிதற நாக்குகள் தள்ள, இரத்தம் சொட்ட இப்படி பலவாறாகத் தாக்கப்பட்டு பட்டாளம் முழுதும் இறந்து போகின்றனர்.  சச்சரனும் உடன் குதிரைக்காரர்கள் ஏழு பேர்களுமே மிஞ்சி கூடாரத்தில் இருக்கின்றனர்.  அப்போது எட்டையபுரத்து தானாபதி அதிகாரத்துடன் ஊமைத்துரையும் அவள் உற்ற துணைகளும் வீர்ர்களும் காயமுற்றிருக்கும்போது யார் இப்படி போர் செய்வது என வினவ, ஊமைத்துரையின் அண்ணன் தம்பியல்ல, மாமன் மைத்துனனும் அல்ல, யாரோ புதிதாகத் தெரிகிறது என முத்துநாச்சியை ஆண் என்று எண்ணிப் பேசிக் கொள்கின்றனர்.  பிறகு அவளை நன்கு கவனித்து நோக்கி ஆணோ, பெண்ணோ, பேயோ, பிசாசோ, காத்தோ, கருப்போ, சக்காதேவியோ தெரியவில்லை என்றெண்ணி பேசிக் கொள்கின்றனர்.  மீண்டும் ஒரு முறை சீனிக்கண்ணாடி கொண்டு சோதிக்க அது சக்காதேவியே என்று கூறி தப்பித்துப் போக முயற்சித்து குதிரைக்காரனை அழைத்து குதிரையைக் கொண்டு வரப் பணித்தான் சச்சத்துரை.

அச்சமயம் முத்துநாச்சியும் இருளாயி என்பவளை அழைத்து நீலா என்னும் வெள்ளைக் குதிரையை விரைவாகக் கொண்டு வருமாறு பணித்தாள்.  சுற்றிப்போய் குதிரை ஏற நாழியாகும் என்பதால் ஏணி வழியாக இறங்கி வருகிறாள் முத்துநாச்சி.  அவளுடன் கள்ளச்சிகள் ஏழு பேரும் இறங்கி வருகின்றனர்.  முத்துநாச்சி ஏணி வழி இறங்கி குதிரை ஏறச் செல்கிறாள்.  அதற்கு முன்பாக சச்சரனும் குதிரைக்காரர்கள் ஏழு பேரும் ஆக எட்டு பேர்களும் குதிரையேறி வாயு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.  அப்பொழுது தாகத்திற்காக இடும்பன் தெப்பக்குளத்தில் எல்லோரும் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வெட்டில் இறங்கி முத்துநாச்சி சச்சரை வெட்ட கள்ளச்சி குதிரையைக் குத்துகிறாள்.  இவ்வாறாக அனைவரையும் வெட்டி செயங்கொண்டு கத்தியைக் கழுவும் போது ரத்தக்கறைகள் தாக்க மயங்கி விழுகிறாள் முத்துநாச்சி.  அதனைக் கண்ட கள்ளச்சிகள் அவளை எடுத்து மார்போடணைத்து மயக்கம் தெளிவிக்கின்றனர்.  

இச்சமயம் முத்தைய நாயக்கன் 30 பேருடன் முத்துநாச்சியைத் தேடி வருகிறான்.  தன்னைக் கண்டதும் பேசாது காதவழி ஓடியொலியக் கூடிய மெலியளாகிய முத்துநாச்சி இன்று எதிரிலிருப்பதைக் கண்டு மிகுந்த வருத்தத்துடன் அவர்கள் ஊருக்குத் திரும்பி வருமாறு அழைக்க, அதற்கு முத்துநாச்சி வீணே வருந்த வேண்டாம்.  நீயே கணவன், நானே மனைவி என்று நிச்சயம் செய்திருந்த காலம் ஒன்றுண்டு.  உனக்கு என்னைக் கொடுப்பதென்று ராச்சியம் முழுதும் அறிந்ததுண்டு.  இவ்வளவு நாட்கள் நீ எனக்கு அத்தை மகன்.  இப்பொழுது உடன்பிறப்பு. என் மீது இனி எள்ளளவும் ஆசை வேண்டாம்.  எனக்கு பதிலாய் பெரியப்பன் மகள் இருக்கிறாள்.  அவளை மணந்துகொள் என்று கூற அதைக் கேட்டு ஆசார சாவடிக்கு விரைந்து வருகிறான் முத்தையன். அங்கே அமரக்காரர்களுடன் ஊமைத்துரையும், வெள்ளையையாவும் இருந்தனர்.  அவர்கள் முன்பாக விழுந்து அழுகிறான் முத்தையன்.  அவனை எழுப்பி ஏன் அழுகிறாய்? தங்கைக்கு என்ன ஆயிற்று என்று அவர்கள் கேட்க தன் விதியை நினைத்து அழுவதாகக் கூற, விஷயமறிந்த சகோதரர்கள் முத்துநாச்சியை நிச்சயமாக விவாகம் செய்து தருகிறேன் என்று கூற முத்தையனும் மகிழ்ச்சியுடன் வெட்டி செயம் கொண்டு, உந்தன் தங்கையங்கை வீற்றிருக்கிறாள் என்று கூறுகிறான்.  

அச்சமயம் தானாபதி மகன் மால்பத்திரப் பிள்ளையை அழைத்து தங்கையை அழைத்து வர பல்லக்கும் கள்ளச்சிகள் ஏழுபேருக்குக் குதிரையும் அனுப்ப உத்தரவிடுகிறான்.  தானாபதியும் சோடித்த பல்லக்குடனும், பதினெட்டு மேள வாத்தியங்களுடன் ஒட்டப்பிடாரம் வந்து கொட்டு முழக்குடன் முத்துநாச்சியைக் கூட்டி வருகின்றனர் கோட்டைக்கு.  

அச்சமயம் அங்கிருந்த ஆயிரம் பெண்களும் ஆரத்தி எடுத்து திட்டி கழித்து திலகம் மையணிவிக்க ஆசாரச் சாவடி வந்து அண்ணனை வணங்கி எழ வெள்ளையையா அவளைத் தூக்கி நிறுத்தி எனக்குத் தாயார் சக்காதேவி தங்கை முத்துநாச்சி.  இந்த அளவிற்கு எங்களுக்கு ஊக்கம் கொடுத்து காப்பாற்றினாய் சக்காதேவியே.  இவ்வாறு கூறிவிட்டு இனி எப்போதும் போல் பெண்பிள்ளையாக மாறிவிடம்மா என முத்துநாச்சியிடம் கூறும் பொழுது முத்தையன்தான் முத்துநாச்சிக்காகவே காத்திருந்த விதத்தையும் இலவுகாத்த கிளிபோல ஆன தன் நிலை பற்றியும் தன்னிரக்கத்துடன் பேசுகிறான்.  இதைக் கேட்ட வெள்ளையையாவும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய 15ஆம் தேதி முத்தையனை மணக்க வேண்டும் என முத்துநாச்சியிடம் கூறுகிறான்.  

கத்தி பிடித்து சச்சரனை வெட்டிய கையை இனி முத்தையனுக்குக் கொடுப்பேனோ, களப்போர் கண்ட நான் தாலிகட்ட கழுத்தை நீட்டுவேனோ என்று மறுக்கிறாள் முத்துநாச்சி.

அச்சமயம் வெள்ளையையா சேவகரை அழைத்து பெண்கள் போடும் நகைகளைக் கொண்டு பெட்டியைக் கொண்டுவரச் சொல்.  போரில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு வெகுமதி எனக் கொடுக்கிறான்.  அப்பெட்டியில் நெற்றிச் சுட்டிகள், திருவாம்பிரை, கொன்றைமாலை, கொப்புப் பிடிகள், ராக்கடி, சிமிக்கி பவழ வடம், அட்டிகை, கோதுமை மணி, தோள்வளை, பாடகம், தண்டை சிலம்பு காலுக்கு பீலி, ரவிக்கை, சேலை ஒட்டியாணம் என அனைத்தும் இருந்தன.  இதைக் கண்டு வெகு கோபமுற்ற முத்துநாச்சி போர்க்கோலம் கண்ட நான் இனியும் இவற்றையணிவேனோ எனக் கூறி அவற்றை நிராகரித்து நகைகள் மிகுதியாக இருந்தால் அவற்றை நாய்க்குப் போடும் என்று கோபிக்கிறாள்.  

அவளது சீற்றமும் கண்டிப்பும் கண்டு ஊமைத்துரை, ஆண்கள் போடும் நகைகளைக் கொண்டு வரக் கூறி மேலும் முத்தையனிடம் தனது சித்தப்பன் மகளை விவாகம் செய்து தருவதாகக் கூறுகிறான்.  ஊமைத்துரை பிறகு ஆண்களுக்குரிய நகைகளை எடுத்து முத்துநாச்சிக்குப் பூட்டிவிடுகிறான்.  பிறகு முத்துநாச்சிக்கும் கள்ளச்சிகள் ஏழு பேர்களுக்கும் வேண்டிய உணவைச் சமைத்துப் பரிமாறுகிறான்.  மேலும் நீ ஆணாகப் பிறந்திருந்தால் அரசாள்வாய்.  ஆகவே இனி என் பட்டத்தை நீ ஆள்வாய் எனக் கூற அதற்கு அவள் அண்ணா நீ ஆய்கிற பட்டம்மான் இனி எனக்கு ஏற்குமோ?  நானும் மேரக்காரருடன் சேர்ந்து நானும் ஒரு மேல்மரமே எனக் கூறுகிறாள்.  இத்துடன் முதல் நாள் சண்டை முடிவடைகிறது.

முத்துநாச்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்ட எட்டையபுரத்தான் அதனைக் கடிதம் மூலம் துரைமார்களுக்குத் தெரிவிக்க இனி எத்தனை நாளுக்கு இந்த துக்கம்.  இனி எவ்வாறு ஊமையனை வெற்றி கொள்வது என யோசித்து எட்டு தரைகளுடன் எட்டு பட்டாளம் தம்பூர், புல்லாங்குழல், சாரட் வண்டி, பல்லக்கு குதிரை தளவாடங்கள் போன்றவற்றோடு சீவலப்பதி வந்திறங்கியது.  விடிந்ததும் ஒட்டப்பிடாரத்தில் கூடாரம் பிடித்தார்.  இச்சமயம் உளவு சொல்வோன் ஓடிவந்து பட்டாளங்கள் வந்து இறங்கியதை ஊமைத்துரையிடம் கூறுகிறான்.  இதைக் கேட்டு ஊமைத்துரை சாரி போவதற்காக நகாடிக்கச் சொல்கிறான்.  அச்சத்தம் கேட்டு முத்துநாச்சி மீண்டும் உடனே கள்ளச்சிகளுடன் போருக்கு ஆயத்தமாகிறாள்.  அதைக் கண்டு ஊமைத்துரை எங்கே செல்கிறாய் என வினவ, சாரி போவதாக முத்துநாச்சி பதிலளிக்க ஊமைத்துரை ராணுவத்தினர் 3000 பேரை உதவிக்குப் போகுமாறு கூறினான்.  ராணுவத்தினர் 3000 பேர் ஒரு பிரிவாகவும் செல்கிறார்கள்.  தாக்குதலில் பட்டாளம் முறிந்துவிட்டது.  தேவர்சனத்தில் 25 பேரும் சிப்பாய்களில் இருபது பேரும் இறந்து விட்டனர்.  இறந்த 25 பேரை பாடையிலேற்றி ஊர் வந்து சேர்கிறாள் முத்துநாச்சி.  கானத்துறையில் அவர்களை எரியூட்ட சொல்கிறாள்.  

இச்சமயம் போர் பற்றிய செய்திகள் சென்னைக்குக் கடிதம் வாயிலாகச் செல்ல மேலும் பட்டாளம் வந்திறங்கியது.  இதனை ஊமைத்துரையிடம் உளவு சொல்வோன் வந்து கூற அவ்வேளையில் ஆயிரம் பேரும் காயமாறி இருக்கிறபோது நகாரடிக்கச் சொல்கிறான்.  

அச்சமயம் நித்திரைக்குப் போன முத்துநாச்சி நகாரு சத்தம் கேட்க ஊமையன் சாரி போவதைக் கேள்வியுறுகிறான்.  அதைக்கேட்டு முத்துநாச்சி நிலைகுலைந்த நிலையில் ஊமையன் அங்கு வர முத்துநாச்சி நான் உயிரோடு இருக்க நீ சாரி போவது எப்படி எனக் கேட்க இன்றைக்குச் சண்டைக்குப் போக வேண்டாம் என ஊமைத்துரை பலவாறு தடுத்தும் கேளாமல் முத்துநாச்சி போருக்குப் புறப்படுகிறாள்.  கட்டபொம்மன் குதிரையைக் கொண்டு வரச் செய்து கள்ளச்சிகள் கூட புறப்படுகிறாள்.

   வெடிச்சத்தம் கேட்டால் உன்னை முன்னே கொண்டு போய்விடும் என எச்சரித்தும் கேளாமல் புறப்படுகிறாள்.

சூரியோதய வேளையில் போர் மூண்டது.  இச்சமயம் கம்பெனிக்கு உதவியாக எட்டையபுரத்தான் குத்துச்சண்டையில் இறங்கினான்.  இச்சமயம் குபீரென்று குதிரை பாய்ந்து கூடாரம் முன்பாக வந்ததும் முத்துநாச்சியை வேகமாக வீசிட அவளும்கீழே விழுந்துவிட்டாள்.  தாக்குதலில் கள்ளச்சிகள் மாண்டு விட்டனர்.  எதிரிகள் முத்துநாச்சியைக் பிடித்துக் கூடாரம் கொண்டு வந்து சேர்த்தனர்.  அச்சமயம் துரை சாராய மயக்கத்திலிருக்க அவனை இரண்டு துண்டாக வெட்டி பின் கூடாரம் விட்டு வெளியேறுகிறாள்.  வெளியில் பாராக்காரர்களை வெட்டி வீழ்த்துகிறாள்.  அச்சமயம் வக்கப்பட்டி தானாபதி மகன் தனது தந்தையை வெட்டிய பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி ஐநூறு பேருடன் முத்துநாச்சியைச் சுத்தி வளைத்தான்.  சிறிதும் தளராமல் அவனையும் வெட்டி வீழ்த்துகிறாள்.  இப்படி அவள் போராடிக் கொண்டிருக்கும் போது ஈட்டுகளும் வேலும் மார்பில் பாய அவள் உயிர் பிரிந்த்து.  இச்சமயம் அவளது குதிரையும் லாயம் வந்தடைவதைக் கண்டு ஊமைத்துரைக்குச் சேதி வர ஊமைத்துரை ராணுவத்தைத் தயார்படுத்தி முத்தையன் வெள்ளையையாவுடன் ஒட்டப்பிடாரம் வந்து குத்துச் சண்டையில் கலந்து கொண்டான்.  பலரை வெட்டி வீழ்த்திப் பிறகு தங்கையையும் கள்ளச்சிகளையும் வந்து பார்க்கின்றனர்.  தேடினாலும் கிட்டாத அரிய பிறப்பே இனி உன்னை என்றைக்குக் கண்பேனோ என்று அவளது அருமை பெருமைகளை எல்லாம் பேசி தங்கை மேல் விழுந்து முட்டிக் கொண்டழுதனர்.  பிறகு அவளை அலங்கரித்த பல்லக்கில் ஏற்றிக் கொண்டு செல்ல அம்பலக்காரன் சாமையன்மேல் அருள் வந்து ஆட அதன் வாயிலாக தான் இறந்த இடத்திலேயே தம்மை வைத்துக் கும்பிடுமாறு கூற அதன்படி அவளை எரியூட்டி அந்த இடத்தில் எட்டு நாட்களுக்குள் காரைக்கட்டுக் கோவில் கட்டி வைத்தனர்.  கன்னிகழியாத தன்னையும் கள்ளச்சிகளையும் ஒரே இடத்தில் சிலையாக வைக்க வேண்டாம் என அருள்வந்து கூற உள்மண்டபத்தில் முத்துநாச்சி சிலையையும் வெளிமண்டபத்தில் கள்ளச்சிகளின் சிலையையும் வைத்து வழிபடுகின்றனர்.  பிறகு ஊமைத்துரை வெள்ளைஅய்யாவை கோட்டைக்கு அனுப்பிவிட்டு 5000 பேர்களுடன் வக்கப்பட்டியான் மற்றும் பலலையும் வெட்டிச் சாய்த்துவிட்டு கோட்டைக்குத் திரும்பிகிறான்.  இவ்வாறாக முத்துநாச்சி சண்டை முடிவடைகிறது.

ஊமைத்துரை :




இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சுத் திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.

ஊமைத்துரை ஒளிந்திருந்த குகை

இவர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு கட்டாலங்குளத்தைச் சேர்ந்த குமாரஅழகுமுத்துவின் உதவியால் அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார்.ஆங்கிலேயரிடமிருந்து இவரது உயிரை காப்பாற்ற குமார அழகுமுத்துவின் மகன் செவத்தையாகோன் வேலினை தன் மார்பில் தாங்கி உயிரை துறந்தார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலைகேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.

பண்புகள்தொகு

ஊமைத்துரை நட்புணர்வும், மனிதாபிமானமும் கொண்டுருந்தவர் என்று வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன், தீரன் சின்னமலைவிருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாகக் கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்கள் இவர்கள் அனைவரிடத்தும் நட்போடு பழகி வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது

ஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவுதொகு

காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801இல் தூத்துக்குடி மாவட்டக் கம்பெனித் தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடிக் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து, தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாகச் செல்ல குதிரைகளுடன் இரண்டு வீரர்களையும் வழித்துணையாக அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் பற்றிய அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.[1]


............

ஊமைத்துரைஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசாமி. தந்தையார் ஜெகவீர கட்டபொம்மன். தாயார் ஆறுமுகத்தம்மாள். ஊமைத்துரை 1772 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மூத்த சகோதரர் புகழ் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன். இயற்கையிலேயே இவர் செவிடாகவும் ஊமையாகவும் பிறந்தார். ஆனால், திட்டம் தீட்டுவதில் வல்லவர். மேலும், வலிமையும், வீரமும், துணிச்சலும் மிகுந்தவர்.

                ஆங்கிலேய ஜெனரல் ஜேம்ஸ்வேல்ஸ் என்பவர் ஊமைத்துரையின் வீரத்தை,  “கட்டபொம்மன் காலத்தில் இவர் இல்லாமல் ஒரு சாதனையும் ஏற்படவில்லை. ஓவ்வொரு சாதனைக்கும் இவர்தான் பக்க பலமாகக் காணப்பட்டார்.” – எனப் புகழ்ந்து கூறியுள்ளார்.

                வீரபாண்டிய கட்டபொம்மன் 1790 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் பாளையக்காரராகப் பதவி ஏற்றார். அப்பொழுது திருநெல்வேலி மாகாணத்தில் சுமார் 33 பாளையங்கள் இருந்தது. இந்தப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடி, முதல் இந்தியச் சுதந்திரப் போரை தொடங்கினர் என்கிறது இந்திய விடுதலைப் போர் வரலாறு!

                கட்டபொம்மன் தமது செயல்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும், தம்பி ஊமைத்துரை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஊமைத்துரையும் தமது அண்ணன் கட்டபொம்மனுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்தும், அவருக்குப் பாதுகாவல் அரணுமாக செயல்பட்டார்.

                அக்காலத்தில் ஆற்காடு நவாப் முகமது அலி ஆங்கிலேயரிடம் கடன்பட்டிருந்ததால் பாளையக்காரர்களிடம் வசூல் செய்யும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். இந்த நோக்கத்திற்காக 1792 ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரின் கீழ் படிப்படியாகக் கொண்டு வரப்பட்டனர். ஆங்கிலேயர்கள் புதிய கலெக்டர்களை நியமித்துப் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். வில்லியம் சார்லின்ஸ் ஜாக்ஸன் என்பவர் 1797 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் பாளையக்காரப் பகுதிகளுக்குக் கலெக்டராகப் பொறுப்பேற்றார். இவரது காலக்கட்டத்தில் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் புரட்சி, கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை தலைமையில் வெடித்தது. ஜாக்ஸன் துரை கட்டபொம்மனிடமிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு மிகப்பெரும் ஆபத்து நேரிடும் என நினைத்தார். சுட்டபொம்மன் ஒழுங்காக வரிப்பணம் கட்டாததை ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்தார். ஜாக்ஸன் துரை கட்டபொம்மனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும், கட்டபொம்மன் மீது ஆங்கிலேய அரசுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் சென்னை அரசுக்கு எழுதினார். அதனால், பகை சுடர் விட்டு எரிந்தது.

                இச்சூழலில், கட்டபொம்மனின் ஆலோசகரான சிவசுப்பிரமணிய பிள்ளை ஊமைத்துரையின் தலைமையில் ஆங்கிலேய அரசுக்குச் சொந்தமான கரிசல் கோட்டாரம் என்ற இடத்தில் இருந்த நெற்களஞ்சியத்தைச் சூறையாடினார். இந்த நெற்களஞ்சியச் சூறையாடல் , ஜாக்ஸன் துரைக்கும் கட்ட பொம்மனுக்கும் இடையே உள்ள பகையை மேலும் வளர்த்தது. கட்ட பொம்மனைக் கைது செய்யும் உள்நோக்கத்துடன், ஜாக்ஸன் துரை வரிப்பணத்துடன் இராமநாதபுரம் வருமாறு கட்டளையிட்டான். இராமலிங்க விலாசம் என்ற இடத்தில் இருந்த கலெக்டர் அறைக்குக் கட்டபொம்மனை மட்டும் தனியாக வருமாறு கலெக்டர் கட்டளையிட்டான். கட்டபொம்மனுக்கு பெரும் ஆபத்து ஏற்பட உள்ளதை உணர்ந்த ஊமைத்துரை பெரும் படையுடன் இராமலிங்க விலாசத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டார். ஊமைத்துரை எதிர்பார்த்தது போலவே கலெக்டர் ஜாக்ஸன் கட்டபொம்மனைக் கைது செய்யக் கட்டளையிட்டான். உடனே, கட்டபொம்மன் ஊமைத்துரைக்குச் சைகை காட்டினார். உடன் ஊமைத்துரை கட்டபொம்மனுக்கு அருகில் நெருங்கி வந்து கட்டபொம்மனுடன் இராமலிங்க விலாசத்திலிருந்து தப்பிச் சென்றார். ஆனால் கட்டபொம்மனுக்கு மொழிபெயர்ப்புக்காகச் சென்ற சுப்பிரமணியபிள்ளை ஆங்கிலேயரின் பிடியில் சிக்கினார்.

                பின்னர் கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும் 17-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் , பாளையக்காரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களால் சிறையில் இரண்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது.

                புரட்சியாளர்கள் இருநூறு பேர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் கொண்டு, இடுப்பில் மஞ்சள் கச்சையணிந்து மந்திரங்களை வாயில் முணுமுணுத்துத் திருநீறைப் பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டே பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அருகில் வந்தனர். பின்னர், அவர்கள் தங்களது வேடங்களைக் கலைத்துவிட்டு , விறகுகள் மற்றும் வாழை இலைகள் , பழங்கள் ஆகியவைகளை விற்கும் வியாபாரிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டனர். இத்தருணத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் சிறைக் காப்பாளர்களிடம் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்ய இப்பொருள்களை வாங்க அனுமதி பெற்றனர். உடனே தெரு வியாபாரிகள் கோட்டைக்குள் நுழைந்து சிறைவளாகத்திற்குச் சென்று ஊமைத்துரையும் அவரது தோழர்களும் அடைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டறிந்தனர்.

சிறையில் பெரியம்மை நோய் பரவியிருந்ததால் சிறைக்கைதிகள் கைவிலங்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். ஊமைத்துரையிடமிருந்து சைகை கிடைத்தவுடன் விடுதலை வீரர்கள், விறகுக் கட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் இதர ஆயுதங்களையும் வெளியே எடுத்து சிறைக்கதவுகளை உடைத்தெறிந்தனர். சிறைக்காப்பாளர்கள் தாக்கப்பட்டு வெளியே தூக்கியெறியப்பட்டனர். ஊமைத்துரை விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயப் படையினர் தாக்கப்பட்டு சீர்குலைக்கப்பட்டனர். இந்த வீர நிகழ்ச்சி 02-02-1801 ஆம் நாள் நடை பெற்றது என்பது வரலாறு!

                சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரையும் அவரது தோழர்களும் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி முன்னேறினார். ஊமைத்துரையின் படையினர் ஆங்கிலேயரின் கண்காணிப்பு இடங்களையும் , அவர்களது உணவுக் களங்சியங்களையும் சூறையாடினர். ஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துகுடி ஆகியன புரட்சியாளர்கள் வசம் வந்தன.

                ஆங்கிலேய மேஜர் பானர்மென்னால் தரைமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மறுபடியும் புதுப்பித்தனர். மக்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஆங்கிலேயருக்கு எதிரான போரை வலிமைப்படுத்தினர். ஆங்கிலேயரிடம் வீழ்ந்த பாளையங்களைக் கைப்பற்ற செயல்திட்டம் வகுத்தனர்.

                பீதியடைந்த ஆங்கிலேய அரசாங்கம் ஊமைத்துரையை உயிருடன் பிடிக்க மேஜர் மெக்கலே என்பவன், ஆங்கிலேயப் படைப்பிரிவுகளை அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரவைத்தான். கேப்டன் மார்டின், மேஜர் ஷெபர்டு, லெப்டினென்ட் வெல்லி ஆகியோர் மேஜர் மெக்காலேக்கு உதவி புரிய வந்தனர். மேஜர் ஷெபர்டு  03-02-1801 ஆம் நாள் சங்கரன்கோவிலிருந்து புறப்பட்டு வந்தான். ஆங்கிலேயப்படை 08-02-1801 அன்று குலசேகர நல்லூர் என்னும் இடத்தை அடைந்தது. ஆனால், புரட்சியாளர்கள் குலசேகர நல்லூரில் ஆங்கிலேயப் படையைத் தாக்கியதால், அப்படைகள், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, மூன்று திசைகளில் சிதறி ஓடியது. ஊமைத்துரையின் படையில் நாற்பது புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர். ஆங்கிலேயப் படைவீரர்கள் ஆறுபேர் மாண்டனர்.

                ஆனால், ஆங்கிலேயர் பெரும்படையுடன் 09-02-1801 அன்று மறுபடியும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை நோக்கி நெருங்கி வந்தனர். எளிதாக ஊமைத்துரையை தோற்கடித்து அழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அவர்கள் கோட்டையின் தோற்றத்தைக் கண்டு மனம் தளர்ந்தனர். கோட்டையில் காணப்பட்ட பத்தாயிரக்கணக்கான வீரர்களைக் கண்டு தங்களது படை தோல்வியடைந்துவிடும் என்பதால் மேஜர் மெக்காலே தமது படையுடன் பின்வாங்கி 10-02-1801 அன்று பாளையங்கோட்டை சென்றடைந்தான்.

                இந்நிலையில் ஊமைத்துரை வீரபராக்கிரமபாண்டியன் என்பவரின் தலைமையில் புரட்சியாளர்கள் படையை, இழந்த பாளையங்களை மீட்கும் எண்ணத்தில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஆங்கிலேய அதிகாரியும், படைவீரர்களும் பிடிபட்டனர். பக்காட் என்ற ஆங்கிலேயப் பொறுப்பு அதிகாரி சிறைபிடிக்கப்பட்டான். ஆனால், அந்த அதிகாரியின் மனைவியான மெர்வின்னோலா என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான். ஊமைத்துரையை ஒழித்துக்கட்ட மீண்டும் 27-03-1801 அன்று , சுமார் 3000 படைவீரர்களுடன் மேஜர் மெக்காலே கயத்தாறு வந்தடைந்தான். பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வழியில் புரட்சியாளர்களால், ஆங்கிலேயப்படை தாக்கப்பட்டது. அதன் பின்னர் 31-03-1801 அன்று மெக்காலே பாஞ்சாலங்குறிச்சியை அடைந்து, நவீன ஆயூதங்களுடனும், பீரங்கிப்படையின் உதவியுடனும் கோட்டையைத் தாக்கினான். ஊமைத்துரை வீரமுடன் போராடி ஆங்கிலேயப் படையை விரட்டியடித்தார். இறுதி முயற்சியாக மெக்காலே, புரட்சியாளர்கள் தப்பித்துச் செல்வதைத் தடுக்க கோட்டையை முற்றுகையிட ஆணையிட்டான். ஆனால் அவனது முயற்சி தோல்வியுற்றது.

                ஆங்கிலேய அரசாங்கம் மெக்காலேயை பொறுப்பிலிருந்து விடுவித்து, லெப்டினெண்டு கர்னல் ஆக்னியூ என்பவனை ஆங்கிலேயப் படைத்தளபதியாக நியமித்தது. இவன் கனரகத் துப்பாக்கிகளை மலபார் பகுதிகளிலிருந்தும், திருச்சிராப்பள்ளியிலிருந்தும், திருநெல்வேலிக்கு வரவைத்தான். ஆக்னியூ 21-05-1981 அன்று பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றான். கோட்டையின் மீது தாக்குதலைத் தொடுத்தான். 24-05-1801 அன்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டுப் பிடிக்கப்பட்டது. ஆனால் , புரட்சியாளர்கள் நான்கு பக்கமும் சிதறித் தப்பிச் சென்றனர். இந்தப் போரில் 1050 புரட்சி வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆங்கிலேயப் படைவீரர்கள் 600 பேர் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டனர்.

                ஆக்னியூ துரை 24-051981 அன்று ஆங்கிலேயப் படையினரை எட்டயபுரம் அனுப்பிப் புரட்சியாளர்களைக் கண்டுபிடிக்க ஆணையிட்டான். புரட்சியாளர்கள் ஆங்கிலேயப் படையினரை நேரில் மோதிப் போரிட்டனர். மறைந்திருந்து தாக்கும் போர் முறையிலும் (கொரில்லாப் போர் ) ஆங்கிலேயப் படையினருடன் போரிட்டனர். 25-05-1801 அன்று நடைபெற்ற போரில் பரட்சியாளர்கள் பலர் ஆங்கிலேயப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி களத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். இதனை அறிந்த கிராமப் பெண்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சி வீரர்களைக் காப்பாற்ற ஒடிவந்தனர்.

                காணப்படுகின்ற பிணக்குவியலில் ஒரு தாய் தமது மகன் சிவசம்பு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. அந்த இளம் வீரன் தன் தாய் முத்தம்மாள் குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்து, தனது அருகாமையில் மடிந்து கிடந்த வீரர்களில் ஊமைத்துரை பெரும் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டான். தமது தாயிடம் ஊமைத்துரையை உடனே காப்பாற்றுமாறும் அவர்தான் எனது தெய்வம் என்றும் , அவரைக் காப்பாற்றினால் ஆங்கிலேய ஆட்சியை வேரோடு அழிப்பார் என்றும் கூறினான். இதனைத் தாயிடம் கூறிவிட்டு, அந்த வீரமகன் உயிரைவிட்டான். தமது மகனின் இறுதி ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் அந்தத்தாய் இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட ஊமைத்துரையை அவளது கிராமத்துக்கு தூக்கிச் சென்றாள். ஊமைத்துரையின் காயங்களுக்கு மருந்திட்டு காப்பாற்றி வந்தாள். அப்பொழுது, ஆங்கிலேயப்படையினர் அக்கிராமத்தை முற்றுகையிட்டு ஊமைத்துரையை கண்டுபிடிக்க வீடு வீடாகச் சோதனை செய்தனர். ஆனால், அந்தத் தாய் சில பெண்களை அழைத்து ஊமைத்துரையை ஒரு வெள்ளைத் துணியால் மூடித் தன் மகன் பெரியம்மை நோயால் இறந்து விட்டதாகப் படைவீரர்களிடம் கூறினாள். ஆங்கிலேயப் படை வீரர்களை நம்பவைக்க அங்கே கூடிய பெண்கள் தங்களது மார்பில் அடித்துக் கொண்டு அழுது புலம்பினர். ஆங்கிலேயப் படையினர் தங்களுக்கும் பெரியம்மை நோய் வந்துவிடக்கூடாது என்று திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடினர்.

                ஊமைத்துரை காயம் ஆறியவுடன் கமுதி சென்றடைந்தார். மருது பாண்டியர்கள் ஊமைத்துரையை வரவேற்றனர். சிறுவயலில் தங்க வைத்து சிறப்பித்தனர். மக்கள் நன்கொடைகளை அள்ளித் தந்தனர்.

                ஆக்னியூ துரை, ஊமைத்துரையை உடனே தன்னிடம் ஒப்படைக்கும்படி மருது பாண்டியர்களை கேட்டுக்கொண்டான். ஆனால், ஊமைத்துரையை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். ஆங்கிலேயப் படையுடன் போரிட மருது பாண்டியர்களின் இருபதாயிரம் பேர் கொண்ட படை தயரானது. ஆக்னியூ துரையும் ஆங்கிலேயப் படைகளை பல பகுதிகளிலிருந்தும் வரைவைத்தான்.

                ஊமைத்துரை சிவகங்கையில் புரட்சிப் படைக்குத் தலைமை ஏற்றார். மதுரையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். பின்னர் விருப்பாட்சி என்ற இடத்தில் பாளையத்தில் 4000 பொதுமக்களைத் திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பெரும் தடைகளை ஏற்படுத்தினார். மேஜர் ஜோன்ஸ் ஊமைத்துரையைச் சமாளிக்க முடியாமல் திரும்பினான். ஆனால், 14-10-1801 அன்று நடைபெற்ற போரில் ஊமைத்துரையை, கர்னல் ஜேம்ஸ் இன்னஷூம், மேஜர் பரோஷூம் தோற்கடித்தனர். பின்னர் வத்தலகுண்டில் இருபடைகளுக்கும் பெரும் போர் நடைபெற்றது. மூன்று நாட்கள் தீவிரமாக புரட்சியாளர்கள் போர் புரிந்தனர். பல புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர். இறுதியில் ஊமைத்துரையும், 65 புரட்சியாளர்களும் ஆங்கிலேயப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

                ஊமைத்துரையும், அவரது இளைய சகோதரர் செவத்தையாவும் 16-11-1801 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்டனர். தமது விடுதலை தாகத்திற்காக ஊமைத்துரை தூக்குமரத்தை தழுவினார்.! அவரது தியாகம் இம்மண்ணுள்ளவரை போற்றப்படும்!

...........

வெள்ளைய தேவன் :



பகதூர் வெள்ளையத்தேவன் :

(((“அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபா
ண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை.
“காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரண்மனையில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்து குழந்தையின் பெற்றோர்கள் மன்னருடன் விவரம் சொல்லி குழந்தையை தரும்படியாக வேண்டினர். மறுத்துவிட்டான் மன்னன். பிள்ளை பாசம் பெற்றவர்களுக்கு அல்ல, வளர்த்தவனுக்கு. பயனில்லாததால் திரும்பிவிட்டனர் பெற்றோர்கள்”
குழந்தை யார்?
ஒரு நாள் மங்களத்தேவர் அவர்களின் மனைவி விறகு வெட்டுவதற்காக காட்டிற்குப் புறப்பட்டார். போகும் போது தமது கைக்குழந்தையையும் எடுத்துச் சென்றார். ஒரு மரத்தடியில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டாள். போனவள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இருட்டிவிட்டது. தூங்கி எழுந்த குழந்தை தாயைக் காணாது தவழ்ந்து சென்று அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது.

வீட்டுக்கு வந்த தமது மனைவியை பார்த்து குழந்தை எங்கே? என்று கேட்டாராம் மங்களத்தேவர். பதறிப்போய் தாய் தேடிப் புறப்பட்டாள். மற்றும் சிலரும் தொடர்ந்து காடு சென்றனர். கிடைக்கவில்லை. அந்தக் குழந்தை தான் அரண்மனையில் வளர்ந்து வருகிற வெள்ளையத்தேவனாகும் .
இது தான் அந்தக் கட்டுக்கதை. பொய்ப் புரட்டு.
மறக்குலத் தாய்மார்களுக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளனர். தாய்மார்கள் தன்னுயிரைக்கூட இழக்கத் துணிவர். ஆனால்…..! தமது குழந்தையை வினாடியும் விட்டுப் பிரியாதவர்கள். விறகு வெட்டப் போனவள் குழந்தையை மறந்து விட்டு வந்துவிட்டாள் என்பது தாய்க்குலத் துரோகச்செயலாகும். அடுத்து காட்டுக்கு வேட்டையாட வந்த கட்டபொம்மன் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து வளர்த்தான்.
படைத்தலைவனாக்கினான். அவன் தான் வெள்ளையத்தேவன். உண்ட கடனுக்காக உயிர் கொடுத்தான். செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான் என்று மறக்குல மாண்புக்கு மீது அழியாப் பழி சுமத்தியுள்ளனர்.
என்றாலும்…… தவறு யாருடையது?
மறக்குல மக்களே அடிச்சுவடுகூடத் தெரியாது, புரியாது அவல நிலையில் இருக்கின்றனரே. வரலாறு எழுதுபவர்களாவது உண்மை நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடாது முறையானவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது தான் வரலாறு ஆகும். தவறினால் திறனாய்வு இல்லாத புரட்டர்கள் என்ற களங்கம் ஏற்பட்டுவிடும்.

கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03-01-1760
பட்டம் ஏற்றுக் கொண்டது 02-02-1790
அவன் தூக்குக்கயிற்றில் தொங்கியது 16-10-1799
மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி தான்.

02-02-1790ல் பட்டம் ஏற்றவன் வேட்டையாட காட்டிற்குப் போகிறான். கண்டெடுத்தான் ஒரு குழந்தையை. பொடி நடை பயிலும் வயது. சண்டை துவங்கியது. 1798 ல் இந்த ஒன்பது ஆண்டு காலத்திற்குள்ளாக வளர்ந்து வில், வாள் பயின்று வீரனாக படை நடத்தும் தலைவனாக ஆகிவிட்டான் என்றால்…..! மந்திர வித்தையா?
அவனுக்கு வெள்ளையம்மாளைத் திருமணம் செய்திருக்க முடியுமோ? கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றை கதையாக தீட்டிவிட்டனர். கதையும் அல்ல. களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்று தீட்டிய புரட்டு, புனைந்துரையாகும்.
வெள்ளையத்தேவன்?) ) ) பொய் 

*** முத்தமிழ் நாடாம் வித்தகர் போற்றிப் புரக்கும் செந்தமிழ்நாடு சேதுபதி சீமை. அதன் அணிகலனாக உள்ள சிறு கிராமம் சாயல்குடி. அதன் அருகே மங்கம்மாள் சாலை இருந்ததால் சாலைகுடி என்று பெயர் இருந்தது. வசதிகள் நிறைந்த இடமாக இருந்தது. மேலும் பல தியாக வீரர்களை விளைவித்த நிலம், பின்னால் அது சாயல்குடி என்ற பெயராகி விட்டது.

அந்த சாயல்குடியில் வாழ்ந்து வந்த பெரியார் மங்களத்தேவர் அவர்கள். மக்கட் பண்புடன் வாழ்ந்த அவர் குறுநில மன்னரின் சிறப்புக்குரியவராகவும் இருந்தார். அவரது திருமகன் தான் வெள்ளையத் தேவன். சேற்றில் கண்டெடுத்தவன் அல்ல. சேது நாட்டின் செந்தமிழ் செல்வனே ஆகும்.

இளமையில் அவன் மறக்குல மாண்புடன் வில், வாள். ஈட்டி முதலிய வீர விளையாட்டுகளில் வல்லவனாக விளங்கினான். அவனது துணையாக இருந்தவர்கள் கட்டகருப்பணன், சுந்தரலிங்கம் என்ற இரு தாழ்த்தப்பட்ட (அரிசன) இன வீரர்கள். இணைபிரியாத தோழர்களாவர்.

*** இந்த நிலையில்,ஒருநாள் கட்ரா, கட்டப்பிரமையா என்ற கம்பளத்து நாயக்கர் வாரிசு, வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கர் சாயல்குடி வந்தான். மங்களத்தேவர் அவர்களைக் கண்டான். எட்டயபுரம் அரசர் தமக்குச் செய்துவரும். தொல்லைகளையும், அதனால் தாம் அடைந்த இன்னல்களையும் எடுத்துக் கூறினான். ஆதரவு தந்துதவ வேண்டினார் தேவர் அவர்களிடம்.

“வெள்ளையத்தேவா…. !

வந்திருப்பவர் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் நம்மிடம் உதவி வேண்டி வந்திருக்கிறார். வந்திருப்பவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. எனவே, நீ உடன் சென்று அவருக்கு உறுதுணையாக இருந்து வெற்றி கொண்டு வா. உனக்குத் துணையாக உனது நண்பர்கள் கட்டக்கருப்பணன், சுந்தரலிங்கம் இருவரையும் வேண்டிய ஆட்களையும் கூட்டிச் செல்க” என்றார்.

தந்தை ஆணைப்படி தனையன் வெள்ளையத் தேவன் புறப்பட்டான். வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கரும் வந்து சேர்ந்தான்.
வெள்ளையத்தேவன் கட்டபொம்முவுக்கு உதவிக்கு வந்ததை அறிந்த எட்டயபுரம் அரசர் திசை திருப்பப்பட்டது. தென் நாட்டில் வந்த வெள்ளையர்களுக்கு ஆதரவு கொடுத்தார். எப்படியும் தனக்கு துரோகம் செய்த கட்டபொம்முவை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தாரே தவிர, எட்டயபுரம் அரசர் குமார முத்து எட்டப்பர் துரோகியல்ல. துரோகிகளை ஒழிக்க முன் வந்தவர்.

தமிழ்க் கலை வளர்த்தவர். பல தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். உமறுப் புலவர் போன்றோர்களை வளர்த்தவர். உறுதுணையானவர் தான் எட்டயபுரம் அரசர். எட்டயபுரம் மகாக்கவி பாரதியார் பிறந்த இடமல்லவா? தமிழ் வளர்த்த வள்ளல் எட்டப்பர் துரோகியாக்கப்பட்டார். தமிழனைக் காட்டிக் கொடுத்தும், கொள்ளை அடித்தும், கிட்டி போட்டு வசூல் செய்தவன் வீரானாகிவிட்டான் (கட்டபொம்மன்). அவனை வீரானாக்கிய பெருமை தமிழ் மண்ணுக்குத் (ம.போ.சிக்கு) தான் உண்டு.
ஆதியில் எட்டயபுரம் அரசருக்கு உரிமையாக இருந்தது செக்காரக்குடி கிராமம். அங்குள்ள வேளாளர்கள் செழிப்பாக இருந்து வந்தனர். அவர்களை அடக்க எண்ணினார் எட்டயபுரத்தார். அப்பொழுது (எட்டயபுரத்தார்க்கு) தமது அடைப்பக்காரனாக இருந்தவன் தான் கட்ரா கட்டப்பிரமையா. அவனது வாரிசுதாரர் கருத்தையா என்ற கட்டபொம்முவை செக்காரக்குடி அனுப்பினார். வேளாளர்களை அடக்கியவன், தானே அங்கு பொறுப்பேற்றுக் கொண்டு எட்டயபுரத்தார்க்கு எதிரியாகிவிட்டான்.
அடுத்திருந்தது வீரபாண்டியபுரம். அங்கு சென்றான். வீரபாண்டிய மன்னனிடம் அடைக்க்கலாம ஆனான். பணியிலும் அமர்ந்து கொண்டான். அவன் வாரிசு இன்றி காலமானதால், அவனுக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை நிறைவேற்றியவன். தானே வீரபாண்டியபுரம் அரசர் என்று பட்டமும் சூடிக்கொண்டான். எனவே வீரபாண்டியபுரம் அரசராக கட்டபொம்மன் ஆகிவிட்டானே தவிர பாண்டியன் அல்ல, பாண்டியன் மரபினனும் அல்ல.
எனவே, தஞ்சமென்று தந்தையிடம் அடைக்கலம் புகுந்த, வீரபண்டியபுரம் கட்டபொம்மனுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து தமது உயிரையும் தியாகம் செய்த மறத்தமிழ் மாவீரன் வெள்ளையத்தேவனே தவிர, செஞ்சோற்றுக்காக பிள்ளை புகுந்தவன் அல்ல. தாய்க்குலத்திற்கு துரோகம் செய்பவர் மறவர் மக்கள் அல்ல என்பதை நாடே அறியும்.


அன்றைய கலெக்டராக இருந்த ஜாக்சன் துரை, கணிசமான நிர்வாக மற்றும் ராணுவ அதிகாரங்கள் இருந்தும், வீரபாண்டிய கட்டபொம்மன் தனக்கு வரி கட்ட மறுத்ததால் கோபமடைந்தார். கலெக்டரை எதிர்த்தவர்கள் தலை துண்டிக்கப்படுவது வழக்கம். வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட முயன்றபோது, ​​ஆங்கிலேயப் படை அழிக்கப்பட்டது, கட்டபொம்மன் விடுதலையானார். இறுதியில், வீரர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து கட்டபொம்மனின் மார்பைக் குறிவைத்தார், ஆனால் அவர் தூண்டுதலை இழுக்கும் முன், லெப்டினன்ட் கிளார்க் வெள்ளைய தேவன் அவரது தலையை துண்டித்து, கட்டபொம்மனின் உயிரைக் காப்பாற்றினார். கட்டபொம்மன் அவரது தைரியத்தைக் கண்டு திகைத்து, அவருக்கு வாத்து கொடுத்து, “நீதான் என் உயிரைக் காப்பாற்றினாய் வெள்ளையத்தேவா” என்று அவனை விரும்பினான்.

வெள்ளையத்தேவன் கட்டபொம்மனின் உயிரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், கட்டபொம்மனும் தமிழ்நாட்டின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகத் திகழும் வரலாற்றின் போக்கை என்றென்றும் மாற்றியமைத்திருக்கும். செழ ராஜ்ஜியத்தின் பழைய கோட்டைகளில் ஒன்றான ராமலிங்க விசாலம் கோட்டையின் நுழைவாயிலுக்கு வெளியே சண்டை நடந்தது. இந்த சண்டை உள்ளூர் மக்களிடையே அழியாதது மற்றும் துணிச்சலான வெள்ளைய தேவனின் காவியம் என்று குறிப்பிடப்படுகிறது. கிராம நிகழ்ச்சிகளின் போது, ​​இந்த போர் எப்போதும் கொண்டாடப்படுகிறது.

வெள்ளையத்தேவனின் இந்த சைகையை கட்டபொம்மன் மறக்கவில்லை. வெகு விமரிசையாகக் கொண்டாடியது மட்டுமின்றி, வெள்ளையத்தேவனின் வார்த்தை அப்பகுதி முழுவதும் பரவுவதை உறுதி செய்தார். மேலும், அவர் அவரை மரியாதையுடன் "என் தந்தை" என்று அழைத்தார். காலப்போக்கில், தந்தை வெள்ளை என்று பெயர் மாறியது, மற்றவர்கள் அது "பகதூர்" என்று கூறுகின்றனர், ஆனால் அதைக் குறிக்கும் எந்த ஆதாரமும் இல்லை.


** வெள்ளைய தேவன் சேதுபதி சாம்ராஜ்யத்தின் சாயல்குடி கிராமத்தின் தலைவரான மங்களத்தேவரின் மகன். வெள்ளைய தேவன் கடுமையான துணிச்சலைக் கொண்டிருந்தார், இது கிராமத்தின் நில உரிமையாளர்களின் பண்புகளில் ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மன் எட்டயதேவர் மன்னனின் தாக்குதல்களைத் தடுக்க மங்களத்தேவரை அணுகினார். மங்களத்தேவர் எந்த உதவிக் கோரிக்கையையும் நிராகரிப்பதில்லை என்று நம்பியதால், அதை ஏற்று வெள்ளையத்தேவனை கட்டபொம்மனுக்கு உதவியாக அனுப்பினார்.

அவரது தந்தையின் கட்டளைக்கு இணங்க, வெள்ளைய தேவன் கட்டபொம்மனுடன் இணைந்தார், காலப்போக்கில் அவரது துணிச்சல் அவரை கட்டபொம்மனின் இராணுவப் படைப்பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக ஆக்கியது.

சிறு வயதில் கட்டபொம்மன் தன் தந்தையுடன் வல்லநாடு காட்டுக்குச் சென்றதாக வதந்தி பரவியது. வேட்டையாடும்போது காட்டுக்குள் நுழைந்தபோது, ​​காட்டில் ஒரு குழந்தையைக் கண்டனர், அவர்கள் மீண்டும் எடுத்து வளர்த்தனர். இந்தக் குழந்தை வெள்ளைய தேவன் என்று கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தான் வெள்ளையத்தேவன் கட்டபொம்மனுக்கு விசுவாசமாக இருந்ததாக எண்ணப்பட்டது.

வெள்ளைய தேவன் ஒரு துணிச்சலானவர். சிறுவயதிலிருந்தே, அவர் சண்டையிடுவதை விரும்பினார், போரில் ஒருபோதும் பயப்படவில்லை. உண்மையில், அது அவரை உற்சாகப்படுத்தியது. ஒவ்வொரு போரிலும், அவர் எந்த பயமும் இல்லாமல் முன்னணியில் இருந்து வழிநடத்துவார். அவர் எந்தப் போரிலும் தோற்றதில்லை. ஒப்பாரி பாடல் (இறுதிப் பாடல்) என்று ஒரு கவிதை இருந்தாலும்: போருக்குப் போகாதே என்று வெள்ளையத்தேவனின் மனைவி மூடநம்பிக்கையுடன் சொன்ன கதையின் அடிப்படையில் என் கணவனைப் போகாதே. இந்த கவிதை உள்ளூரில் மிகவும் பிரபலமானது. பகதூர் வெள்ளை நகரின் நாட்டுப்புற இசையிலும் இது இடம் பெறுகிறது.

மற்றொரு பதிப்பின் படி, பாஞ்சாலை வெள்ளைய தேவருக்கும் அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் நடந்த போரின் போது புதிதாக திருமணமான தம்பதிகள் மற்றும் வெள்ளையம்மாள் அவரது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்ததால், அவர் தனது கணவரை போருக்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சினார். போர்வீரர் குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதற்காக அழவேண்டாம் என்றும், சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் வெள்ளையத்தேவன் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

1 செப்டம்பர் 1799 அன்று, திருச்செந்தூரில் ஆவணி திருவிழா நடந்து கொண்டிருந்தது, அதில் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் கலந்து கொண்டனர், இதனால் நகரத்திற்கு பாதுகாப்பில்லை. நகரம் தாக்கப்பட்டவுடன், துணிச்சலான வெள்ளைய தேவன் நகரத்தை பாதுகாக்க முயன்றார். நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் அவர் மீது துப்பாக்கிகளைப் பயிற்றுவித்தனர், மேலும் அவர் சில துப்பாக்கிச் சூடுகளையும் எடுத்தார், ஆனால் அவர் இன்னும் பல எதிரிகளைக் கொன்றார்.

இதைக் கேட்டதும், கட்டபொம்மனும் ஊமைத்துரையும் ஊருக்கு விரைந்தனர், வெள்ளைய தேவன் அவர்கள் ஊருக்குத் திரும்பும் வரை உயிருடன் இருந்தார், அவர்கள் திரும்பியவுடன், அவர் தியாகியாக இறந்தார். அவர் தனது மரியாதையையும் விசுவாசத்தையும் தனது கடைசி மூச்சு வரை வைத்திருந்தார், மேலும் வரலாற்றில் அவரது துணிச்சலுக்கான அங்கீகாரம் இல்லாதது பதிலளிக்க முடியாத கேள்வியாகவே இருக்கும்.

V. வெள்ளைய தேவன் ஒரு சக்திவாய்ந்த மற்றும் திறமையான போர்வீரன், ஒரு விசுவாசமான மற்றும் அழகான மனிதர். அவர் கட்டபொம்மனின் தளபதி மட்டுமல்ல, அவருக்கு ஒரு மகன் போன்றவர். கட்டபொம்மன் பற்றி பேசும் போது வெள்ளைய தேவன் பற்றி பேசாமல் இருக்க முடியாது. இதன் காரணமாகவே கட்டபொம்மன் அவருக்கு பகதூர் பட்டம் வழங்கினார்

வெள்ளைய தேவனின் மரணம் பற்றி பல கதைகள் உள்ளன, அவற்றில் இதுவும் ஒன்று. எது உண்மை என்று உறுதியாகக் கூற முடியாது.

இந்திய விடுதலைப் போரில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளனர் என்பதில் உறுதியாக இருக்க முடியும். அவர்களின் துணிச்சலான கதைகள் அங்குள்ள மக்களிடையே நன்கு அறியப்பட்டவை.

.......

வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீரம் செறிந்த தளபதிகளுள் ஒருவர் ஆவார். 1798 செப்டம்பர் 20 – அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கலெக்டர் ஜாக்சனைச் சந்தித்தபோது, ஜாக்சன் கட்டபொம்மனை சிறை பிடிக்க முயன்றார். ஆங்கிலேயர்களைத் தாக்கிக் கோட்டையிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பிச்சென்ற நிகழ்ச்சியின் போது வெள்ளையத் தேவனும் உடனிருந்தார்.

1799 செப்டம்பர் 5 அன்று விடியற்காலை மேஜர் பானர்மேன் பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையை முற்றிகையிட்டுத் தாக்கினார். இப்போரில் முக்கியத் தளபதியாக வெள்ளையத்தேவன் பங்கேற்றார்.

தெற்கு வாயிலைத் தகர்த்து உள்ளே நுழைய முயன்ற படைத்தலைவன் காலின்ஸை வெள்ளையத்தேவன் தன் ஈட்டியால் குத்தக்கொன்றார்.

பழுதுபட்ட கோட்டை பாதுகாப்பற்றது என்பதால் கட்டபொம்மனும் மற்றவர்களும் இரவு தப்பிச்சென்றனர்.

படைத்தலைவன் காலின்ஸைக் கொன்ற வெள்ளையத்தேவனைப் பிடுத்துக் கொடுப்பவர்களுக்கு 1000 வெள்ளி பரிசு தரப்படும் என ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்டது. வெள்ளையத்தேவனின் மாமனே அச்சிறு தொகைக்கு ஆசைப்பட்டு மருமகனை பிடித்துக்கொடுத்தான்.

.........

கலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்




*******
மருது பாண்டியர்கள் :

அருப்புக்கோட்டையிலிருந்து 18 மைல் தொலைவில் உள்ள நரிக்குடி அருகே உள்ள முக்குளத்தைச் சேர்ந்தவர் மூக்கையா பழனியப்பன் சேர்வையின் மகன்கள் பெரியா மற்றும் சின்ன மருது . இவர்களது தாயார் பொன்னத்தாள் என்ற ஆனந்தாயி சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர். சகோதரர்கள் இருவரும் முறையே 1748 மற்றும் 1753 இல் முக்குளத்தில் பிறந்தவர்கள். முதல் மகனுக்கு பெரிய மருது என்ற வெள்ளை மருது என்றும், இரண்டாவது மகனுக்கு சின்ன மருது என்றும் பெயர் சூட்டினர்.

1772 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் வரி செலுத்த மறுத்ததால் முத்துவடுகநாத தேவரைக் கொன்றது. [5] எனினும் மருது பாண்டியர் மற்றும் ராணி வேலுநாச்சியார் ஆகியோர் தப்பித்து, கோபால நாயக்கருடன் விருப்பாட்சியில் 8 ஆண்டுகள் தங்கினர். இதற்குப் பிறகு, பாண்டியர் தலைமையிலான ராஜ்யங்களின் கூட்டணி 1789 இல் சிவகங்கையைத் தாக்கி அதை மீட்டது. மருது பாண்டியர் இருவருக்கும் ராஜ்யத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. [6]

அவர்கள் ஏரோடைனமிக்ஸ் மற்றும் கைவினைத்திறனில் சிறந்தவர்கள் மற்றும் பூமராங்கின் மாறுபாடான வலாரியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது .


மருது பாண்டியர்கள், இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரை நடத்த திட்டமிட்டனர் . போர் குழப்பத்தில் இருந்து தற்காலிகமாக தஞ்சம் புகுந்த ஊமைத்துரை குமாரசாமிக்கு பாதுகாப்பு அளித்தனர். அவர்கள் போர்த் தலைவரான சிவகங்கை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலர் சோழபுரத்தில் பிடிக்கப்பட்டு திருப்பத்தூரில் கொல்லப்பட்டனர். அவர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூரில் உள்ள கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர் . [7] மருது பாண்டியர்களின் அடக்கம் செய்யப்பட்ட இடம் சிவகங்கையில் அமைந்துள்ளது.


மருது சகோதரர்கள் ஏரோடைனமிக்ஸில் சிறந்தவர்கள் மற்றும் ஈட்டி மற்றும் வளரியின் பல வகைகளைக் கண்டுபிடித்தனர் . [8] அவர்கள் இந்தியாவில் காலனித்துவத்தின் ஆரம்ப கட்டங்களில் கொரில்லா போர் தந்திரத்தை நிறுவினர். அக்டோபர்
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது.[1]

காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் போர் நடந்தது. புதுக்கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயருக்கு படை அனுப்பி உதவி செய்தார்.

மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவச குத்தகையாக வழங்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர்.

ஒக்கூர் காட்டில் பதுங்கியிருந்தபோது, தன் உதவியாளன் கருத்தானால் சின்ன மருது சுடப்பட்டார். இதற்காக கருத்தானுக்கு ஆங்கிலேயர் வெகுமதி அளித்தனர்.

காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார். கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் இஸ்திமிராக நியமித்தார். சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வெங்கம் உடையனத்தேவர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி அரசர் வாளுக்கு வேலி அம்பலம் மருது சகோதரர்களை மீட்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

Comments